அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, November 30, 2011

கிழத்தெரு தீ விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி...

கிழத்தெரூ வில் ஏற்பட்ட தீ பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர் அந்த வகையில் இன்று அதிரை பேரூராட்சி அஸ்லம் அவர்கள் முயற்சியில் திரட்டப்பட்ட ரூபாய் 65000 மற்றும் சவூதி அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் சார்பாக ரூபாய் 10000 சேர்த்து 75000 ரூபாய் கிழத்தெரு ஜமாத் தலைவரிடம் சேர்மன் அவர்கள் வழங்கினார்கள் ஏற்க்கனவே கிழத்தெரு துபை ஜமாத் சார்பாக ஒரு லட்சம் வழங்கப்பட்டுள்ளது.





அதிரையில் – சமையல் GAS தட்டுப்பாடு !



முந்தையக் காலக்கட்டங்களில் நமதூரில் சமையலுக்காக பயன்படுத்தி வந்த விறகுகள் ( அதிரையிலிருந்து அருகில் உள்ள அலையாத்தி காடுகளுக்கு சென்று விறகு வெட்டி வந்து சமைப்பார்களாம் இவ்வாறு எனது சிறுவயதில் என்னுடைய உம்மம்மா மற்றும் வாப்புச்சி சொல்லக்கேட்டுள்ளேன் ), தேங்காய் மட்டைகள், பாலை, பூக்கமலை, கொரங்குமட்டைகள், கொட்டாங்கட்சிகளில் அடுப்பு எரித்து வந்த நமது சமுதாயம் தற்போதுள்ள நவ நாகரிக உலகில்  GAS STOVE  2, 4, 5 PCS BURNERகளில் ),  ELECTRIC HOT PLATES,  ELECTRIC INDUCTION COOKER மற்றும் COOKER HOODSபோன்ற நவீன சாதனங்களை காலத்திற்கேற்ப மாற்றி பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாதனங்களைப் பயன்படுத்த முக்கிய ஆதாரமாக உள்ளதுGAS மற்றும் ELECTRIC POWER. நமதூரில் 80 % மக்கள்கள் GAS CONNECTION னைப் அரசு நிறுவனமான INDANE முலமாகப் பெற்றுள்ளார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தங்குதடையின்றி BOOKING செய்த ஒரு வாரக் காலக்கெடுவுகளில் கிடைத்து வந்த சிலிண்டர்கள் தற்போது ஒருBOOKING க்கு 25 நாட்கள் எடுத்துக்கொண்டு டெலிவரி செய்கிறார்கள் மறுBOOKING செய்ய மறுபடியும் 25 நாட்கள் கழித்துதான் BOOKING ஐ உறுதி செய்கிறார்கள். ஆக மொத்தத்தில் இரண்டு மாதங்களாகி விடுகிறது நுகர்வோருக்குப் போய்ச் சேர அதுவும் தற்போது உள்ள மழைக் காலத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் விறகுகளையும் பயன்படுத்த முடியாமல் பொது மக்கள்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இக்குறைகளைப்பற்றி அதிரையில் உள்ள சில பொதுமக்களிடம் கருத்துக்கேட்டபொழுது....
பாதுஷா ( தொழில் அதிபர் ) :-
நான் கடந்த 5-11-2001 அன்று BOOKING செய்தேன் ஆனால் இன்று (30-11-2011 )வரையில் எனக்கு டெலிவரிச் செய்யவில்லை. நான் போனில் AGENCY ஐ தொடர்பு கொண்டுக்கேட்டபொழுது இன்னும் LOAD வர வில்லை என்கிறார்கள்.

பெயர் சொல்லவிரும்பாத ஒரு ஏழைப் பெண்மணி :-
நான் இலவசமாகக் கிடைத்த கலைஞர் காஸ் இணைப்பை பெற்றுள்ளேன். முதல் புக்கிங் செய்து பெறப்பட்ட சிலிண்டர் கிடைத்தவுடன் மறு சிலிண்டர் கிடைக்க சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் காத்துக்கொண்டு இருக்க வேண்டியுள்ளது.

அப்துல் காசிம் ( ஆட்டோ டிரைவர் ) :-
‘ நான் ஒரு இணைப்பை வைத்துள்ளேன். இருபது நாட்களுக்குள் காஸ் தீர்ந்து விடுகிறது, மறு சிலிண்டர் கிடைக்கும் வரை விறகு, மட்டைகளை சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார் எனது கர்ப்பிணி மனைவி. அவள் புகையீனால் ரொம்ப கஷ்டப்படுகிறாள்.’ என்கிறார்.

கபீரா ( வாடகை வீட்டில் வசிக்கும் பெண் ) :-
எங்கள் வீட்டில் காஸ் இணைப்பு இல்லை.

பஷீர் அகமது ( மளிகை கடை வைத்துருப்பவர் ) :-
நான் புக்கிங் செய்து இருபது நாட்களாகிவிட்டது. ஒவ்வொரு முறையும்AGENCY க்கு போன் செய்து கேட்க்கும்போதும் இன்னும் ஒன்று , இரண்டு வாரங்களில் கிடைக்கும் என்பதே பதிலாக உள்ளது.

பெயர் சொல்லவிரும்பாத சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர் :-
சிலிண்டர்களை ஆம்னி வேன் , ஆட்டோ ஓட்டும் நபர்களிடம் கூடுதல் விலைக்கு விற்று விடுகிறார்கள் என்றும் நுகர்வோர் பயன்படுத்தும் சிலிண்டர்களை COMMERCIAL  பயன்பாட்டிற்க்காக பயன்படுத்துகிறார்கள் என்று தன் ஆதங்கத்தை வெளிபடுத்துகிறார்.

மேற்க்கூறிய மக்களின் குறைகளைப்பற்றி INDANE ஏஜென்சியை தொடர்புகொண்டு கேட்டபொழுது அவர்களின் பதில், முன்பு வாரம் ஏழு லோடு ஓசூரிலிருந்து வரும் தற்பொழுது இரண்டு லோடுகளே வருகிறது. அதைப் PRIORITY ப் பிரகாரம் டெலிவரி செய்கிறோம்.  என்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் பாதிக்கப்படுவது மக்களாகவே உள்ளார்கள். சம்மந்தபட்ட நிறுவனங்கள் இக்குறைகளைப் போக்கி மக்களின் நலனை கருத்தில் கொள்ளவேண்டும்.

மக்களின் சார்பாக,
M. நிஜாமுதீன்  B.sc.
( 9442038961 )

ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும்.

ஆண்டு முடித்த கட்சி ஆளும் கட்சியையும், ஆளும் கட்சி ஆண்டு முடித்த கட்சியையும் ஒருவருக்கொருவர் குறை சொல்லியே நலத்திட்டங்கள் பல‌ மக்களுக்கு சென்றடையாமல் அவர்களை நட்டாற்றில் நிறுத்தி வேடிக்கைப்பார்த்து வருவது இன்றைய நாட்டு/ஊர் நடப்பாக இருக்கின்றன.

மேற்க‌ண்ட‌ ம‌க்க‌ள் விரோத‌ போக்கும், ஊர் நலனில் வேட்டு வைக்கும் தவறான அணுகுமுறையும் ந‌ம் ஊரில் நட‌ந்தேறிவிட‌க்கூடாது என்ப‌தே ந‌ம் எல்லோரின் எதிர்பார்ப்பும், ஆவ‌லும்.

மனிதர்களின் ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ளையும், செய‌ல்க‌ளையும் ம‌ன‌தார‌ பாராட்ட‌ ம‌ன‌ம் இற‌ங்கி வ‌ருவ‌தில்லை. குறை சொல்ல‌ ம‌ட்டும் ஏனோ சிம்மாச‌ன‌ம் இட்டு தானே அம‌ர்ந்து கொள்கிற‌து.

க‌ட்சிக‌ள் பேத‌மின்றி, காழ்ப்புண‌ர்ச்சியின்றி ம‌ற்றும் மாற்றான் தாய் வீட்டுப்பிள்ளை போல் பொடுபோக்காக க‌ருதாம‌ல் எங்கெங்கெல்லாம் ம‌க்க‌ளால் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ (கட்சிசார்ந்த, சாராத) த‌லைவ‌ர்கள் உள்ள‌ன‌ரோ அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ உத‌விக‌ளை செய்வ‌துடன் அவர்களின் கோரிக்கைக‌ளையும் நிறைவேற்ற‌ ம‌த்திய‌, மாநில‌ அர‌சுக‌ளுக்கு முழு பொறுப்பும், க‌ட‌மையும் உண்டு. அப்பொழுது தான் ந‌ம் பார‌த‌ம் உள்நாட்டிலும், உல‌க‌ அர‌ங்கிலும் ஒளிந்து கொள்ளாமல் பிரகாசமாய் ஒளிரும்.

மின் த‌ட்டுப்பாடு ஒரு பிரதான‌ பிர‌ச்சினையாக‌ ந‌ம் நாட்டில் இன்று இருந்து வ‌ருவ‌தால் அத‌ற்கு மிக‌வும் முக்கிய‌த்துவ‌ம் த‌ந்து அதை க‌ளைய‌ முன்வ‌ர‌ வேண்டும். இதில் ந‌ல்ல‌ பெய‌ரை யாரும் த‌ட்டிச்சென்று விடுவாரோ? என்ற‌ அச்ச‌ம் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கும், அத‌ன் த‌லைவ‌ர்க‌ளுக்கும் தேவையில்லை. க‌ல்வெட்டில் யார் பெய‌ர் இருந்தால் என்ன‌? மின்வெட்டில்லா மாநில‌மாக‌ மாற்றிக்காட்டினால் ந‌ல்ல‌து தானே?

ஊரில் அறிவிக்க‌ப்ப‌ட்டோ அல்ல‌து அறிவிக்க‌ப்ப‌டாம‌லோ எந்நேர‌மும் வ‌ரும் மின்த‌டையும் அதைத்தொட‌ர்ந்து வ‌ரும் கொசுக்க‌டியும் குறைந்த‌ கால‌ விடுமுறையில் ஊர் செல்லும் ந‌ம்மை ஓட‌,ஓட‌ விர‌ட்டி எங்கோ நாடுக‌ட‌த்தி விடுகிற‌து. தாய் நாட்டின் மேல் ஒரு பிடிமான‌ம‌ற்ற‌ த‌ன்மையையும், வெறுப்பையும் த‌ற்காலிக‌மாக‌ ஏற்ப‌டுத்தி விடுகின்ற‌ன‌. என்ன‌ தான் தாய் த‌ன் குழ‌ந்தையை க‌த‌ற‌,க‌த‌ற‌ அடித்தாலும் "உம்மா/அம்மா" என்றே அக்குழ‌ந்தை அடித்த த‌ன் தாயை க‌ட்டித்த‌ழுவ‌ ஓடிச்செல்வ‌து போல் நிற‌ந்த‌ர‌மாக‌ த‌ன் தாய் நாட்டின் மேல் வெறுப்பு வ‌ந்து விடாது ஒரு போதும் ந‌ம‌க்கெல்லாம்.

பெரும்பாலான‌ வீடுக‌ளில் இன்வெட்ட‌ர் (யு.பி.எஸ்) என்னும் மின்சார‌ த‌டையின் பொழுது மின்சாரத்தை சேமித்து உற்ப‌த்தி செய்து த‌ரும் க‌ருவி பொருத்த‌ப்ப‌ட்டுள்ள‌தால் எந்நேரமும் நிலவி வரும் மின்த‌டை ப‌ற்றி யாருக்கும் அக்க‌றையும், க‌வ‌லையும் மற்றும் ம‌க்க‌ளின் அல்ல‌ல்க‌ளை அர‌சின் க‌வ‌னத்திற்கு ஜ‌ன‌நாய‌க‌ முறையில் கொண்டு வர‌ அவ‌ர‌வ‌ர் உள்ள‌த்தில் உருவாகி வெளியாகும் முய‌ற்சிக‌ள் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை. ஏதேதோ கார‌ண‌ங்க‌ள் சொல்லி ந‌ம் விவேக‌மான‌ முய‌ற்சிக‌ள் அவ்வ‌ப்பொழுது ம‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌து ஏனோ உண்மை.

வ‌ரும் கால‌ங்க‌ளில் வ‌ர‌க்கூடிய‌ தேர்த‌ல் அறிக்கையில் "வீடுக‌ளுக்கு இல‌வ‌ச‌ இன்வெட்ட‌ர் (யு.பி.எஸ்) க‌ருவி பொருத்த‌ப்ப‌டும்" என்று சொல்லும் க‌ட்சி அமோக‌ வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அம‌ர்ந்தாலும் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவ‌த‌ற்கில்லை.

மத்திய அரசு ப‌தினான்காயிர‌ம் கோடி செல‌வ‌ழிக்கும் வ‌ரை ப‌ல்லிளித்துக்கொண்டிருந்த‌ ம‌க்க‌ளும், அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளும் இன்று கூட‌ங்குள‌ம் அணுமின் உற்ப‌த்தி தொட‌ங்க‌ இருக்கும் இறுதி க‌ட்ட‌ நேர‌த்தில் வ‌ரிந்து க‌ட்டிக்கொண்டு அந்த‌ அணுமின் நிலைய‌த்தை மூட‌ க‌ள‌த்தில் குதித்திருப்ப‌து வேத‌னையான‌ வேடிக்கைய‌ன்றி வேறொன்றும் சொல்வ‌த‌ற்கில்லை.

மத்திய, மாநில அரசுகள் ஆங்காங்கே மக்களின் புகார்களுக்கென்று ஒரு தனித்துறை உருவாக்கப்பட்டு அது முழு அதிகாரத்துடன்/கட்டளையுடன் அரசியல் கலக்காமல் உடனுக்குடன் செயல்பட தனித்துவம் வாய்ந்த துறையாக எவ்வித தயக்கமும் இன்றி செயல்பட ஆவண செய்தாலே அன்றாடம் வரும் மக்கள் குறைகளையும், பிரச்சினைகளையும் தீர்க்க/போக்க முடியும் என்பதே என் ஆணித்தரமான கருத்து.

நமதூரில் ஆள்ந்த கட்சியும், ஆளும் கட்சியும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பொறுப்பில் இருப்பதால் ஒருவருக்கொருவர் எதிரும், புதிருமாக இருந்து கொள்ளாமல் நல்ல‌ புரிந்துணர்வு ஏற்பட்டு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எவ்வித தடையுமின்றி நம் ஊருக்கு கொண்டு வந்து சேர்ப்பார்களேயானால் நம் ஊர் தமிழகத்திற்கு மட்டுமல்ல நம் நாட்டிற்கே ஒரு நல்ல முன்மாதிரியாக எல்லோராலும் நல்ல முறையில் எடுத்து பேசப்படும். இந்த அரிய வாய்ப்பை நம் ஊர் பயன்படுத்திக்கொள்ளுமா? அல்லது இந்த அரிய‌ வாய்ப்பை கொல்லுமா? என்பது போகப்போக தெரிய வரும்.

ந‌ல்ல‌வைக‌ளுக்காக நாட்கள் சில காத்திருப்பதால் ந‌ம‌க்கொன்றும் ந‌ட்ட‌ம் இல்லை தானே?


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

லண்டன் (LONDON) வாழ் அதிரை நண்பா்களுக்கு ஒர் வேண்டுகோள்…


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அமீரகம் மற்றும் அதிரை போன்று லண்டனிலும் “அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF)” அமைப்பதற்கான முயற்ச்சியில் நமதூர் சகோதரர்கள் ஈடுபட்டுள்ளனர், எனவே லண்டன் வாழ் அதிரை நண்பர்கள் அனைவரும் கீழ் காணும் சகோதரர்களை தொடர்பு கொண்டு இந்த நல்ல முயற்ச்சிற்க்கு தங்களின் முழூ ஒத்துழைப்பையும் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


தொடர்புக்கு:

சகோ. குத்தூஸ் - 0044 740 405 2728

சகோ. இம்தியாஸ் - 0044 746 639 3312

சகோ. இத்ரிஸ் - 0044 759 241 8177

சகோ. பாஸ்னியா - 0044 796 766 6288



மின்னஞ்சல் (email) : aamflondon@gmail.com


இப்படிக்கு
Adirai All Muhallah Forum (AAMF)
அமீரக கிளை (UAE)

Monday, November 28, 2011

மரண அறிவிப்பு

அதிரை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ இபுறாஹிம் மரைக்காயர் மர்ஹூம் மு.க.செ. அஹ்மது தம்பி ஆகியோரின் பேத்தியும், மர்ஹூம் மு.க.செ. சாஹுல் ஹமீத் அவர்களின் மகளும், தமீம் மற்றும் ராஜிக் இருவரின் சகோதரியும், அப்துல் ராஜிக்(மரியம்மா வீட்டு) அவர்களின் மனைவியுமாகிய மவ்ஜிதா அவர்கள் இரவு (28.11.2011) வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்".

அன்னாரின் ஜனாஸா இன்று (29 - 11 - 2011) காலை 10:30 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கீழத்தெருவில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமுமுக நிதியுதவி

கடந்த 10/11/2011 அன்று மதியம் சுமார் 2:00 மணி அளவில் கீழத்தெருவில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் முன்று வீடுகள் முற்றிலும் எறிந்து சாம்பலாயின.! வீட்டிலுள்ள அனைத்து உடமைகளும் தீக்கிரையானது.! என்பதை நீங்கள் அறிந்தீர்பீர்கள். இதியோட்டி தீ விபத்தில் சேதம் அடைந்த குடும்பங்களுக்கு தமுமுக சார்பில் ரூ 42,342/- நிதி திரட்டப்பட்டு நேற்று (27/11/2011) உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு மாற்றும் பல்வேறு அமைப்புகள் உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் அருள்புரிவானாக.!






எல்லை மீறும் ஊடக பயங்கரவாதம்

இந்தியக் குடிமக்களுள் நெற்றியில் நாமம் தீட்டிய அல்லது நீறு பூசிய எவரும் தீவிரவாத இந்து அல்லர்; நெஞ்சில் சிலுவை அணிந்த எவரும் கிருத்துவ தீவிரவாதி அல்லர். ஆனால், தொப்பி அணிந்து தாடி வளர்த்திருந்தால் அவர் 'முஸ்லிம் தீவிரவாதி' என்பதை நமது தொலைக்காட்சி/அச்சு ஊடகங்கள் தீர்மானித்து வைத்திருக்கின்றன. குறைந்த பட்சம் முஸ்லிம் பெயர் ஒருவருக்கு இருந்தால் மட்டும் போதும்; அவர் தீவிரவாதி என அடையாளப்படுத்துவதற்கு எல்லாச் சாத்தியங்களும் இருக்கின்றன என்பதுபோல் நமது பெரும்பாலான ஊடகங்கள் செயல்படுகின்றன.

பாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் 'அதிபயங்கரமான ஐம்பது முஸ்லிம் தீவிரவாதிகள்' பட்டியல் ஒன்றை அண்மையில் நமது உள்துறை அமைச்சகம் தயாரித்தது. அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து, "இவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டது.

நமது ஊடகங்களுக்கு இதைவிட வேறு தீனி வேண்டுமா? பேனைப் பெருச்சாளியாக்கி, நம் நாட்டின் எல்லா மொழி ஊடகங்களும் அதை எழுதித் தள்ளின

பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருந்த வாஜுல் கமர் கான் என்பவர், இந்தியாவின் மும்பையை அடுத்துள்ள தானேவில்தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை சில நடுநிலை ஊடகங்கள் மூலம் வெளிவந்தது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், "... சிறிய தவறு நடந்துவிட்டது. இத்தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்" என்று பெருந்தன்மையாக அறிவித்தார்.

அடுத்த சில நாட்களில் இரண்டாவது 'சிறிய தவறு' வெளிவந்தது. அதே 'அதிபயங்கரமானவர்களின் பட்டியலில்' 24ஆவது ஆளாக இருக்கும் இன்னொரு தீவிரவாதியான ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில்தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமானது. முதல் தீவிரவாதியான வாஜுல் கமர் கான் என்பவராவது தானேவில் வசிக்கும் சாதாரண இந்திய முஸ்லிம். இரண்டாமவரான ஃபெரோஸ் அப்துல் ரஷீத் என்பவர் ஏற்கனவே 1993இல் மும்பையில் நடைபெற்ற வெடிகுண்டு வழக்கில் 'சேர்க்கப்பட்டு'க் கடந்த 2010 பிப்ரவரி மாதம் கைதாகிச் சிறையில் இருப்பவர். http://articles.timesofindia.indiatimes.com/2011-05-20/india/29563936_1_arthur-road-jail-mumbai-jail-special-tada-court  

மும்பை (ஆர்தர் சாலை) சிறையில் இருக்கும் ஃபெரோஸ் கானுக்கு எதிராக இண்டர்போலில் புகார் செய்து "தேடப்படும் குற்றவாளி" ஃபெரோஸ் கானுக்கு எதிராக ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு ஏறத்தாழ இரண்டாண்டுக்கும் மேலாக உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது நமது புலனாய்வுத்துறை. அது மட்டுமின்றி, மும்பைச் சிறையிலிருக்கும் ஃபெரோஸைப் பாகிஸ்தானில் 'பதுங்கி'க் கொண்டிருப்பதாகவும், இந்தத் தீவிரவாதியைப் பிடிப்பதற்குப் பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சுமத்தியும் வந்தது.

நமது நடு(!)நிலை ஊடகங்கள் பலவும் 'தேடப்படும் முஸ்லிம் தீவிரவாதி'களைப் பற்றித் தலைப்புச் செய்தி போட்டுத் தங்களது சேவையைச் செவ்வனே செய்தன.

*****

ஏறத்தாழ இதேபோன்று ஒரு செய்தியை, சன் குழுமத்தின் நம்பர் ஒன்(?) மாலை இதழான 'தமிழ் முரசு' கடந்த 23.11.2011இல் தலைப்பாக்கி வெளியிட்டது.

தலைப்பு: "8 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த தீவிரவாத இயக்கத் தலைவர் கைது!"http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=16943  

அதிரையைச் சேர்ந்த, தவ்ஃபீக்கைக் காவல்துறை 8 ஆண்டுகளாகத் தேடி வந்ததாகத் தலைப்பில் மட்டுமின்றி செய்தியின் உள்ளேயும் அழுத்தம் திருத்தமாக தமிழ் முரசு நாளிதழ் கூறியுள்ளது. காணொளியாக சன் தொலைக்காட்சியில் செய்தியும் சொல்லப்பட்டது.

தமிழ் முரசு நாளிதழின் இதே செய்தியை அதே "8 ஆண்டுகள் ..." தலைப்பிட்டு நெல்லை ஆன்லைன், தன் செய்தியைப் போன்று அப்படியே வாந்தி எடுத்துப் பதித்துள்ளது.http://nellaionline.net/view/32_24021/20111123164224.html

இதே செய்தியை தி ஹிண்டுவும் ஆங்கிலத்தில் செய்தி வெளியிட்டது. http://www.thehindu.com/news/states/other-states/article2651009.ece?homepage=true பொடா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் இந்து நாளிதழ் மற்றொரு இடத்தில் 2008ஆம் ஆண்டு தவ்ஃபீக் பிணையில் வெளிவந்ததாகவும் கூறுகிறது. பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் பிணையில் வெளிவருவது சுலபம் அல்ல என்பது இந்து நாளிதழுக்குத் தெரியாததன்று. பின் எந்த வழக்கில் அவர் பிணையில் வந்தார் என்பதையும், அவர்மீது போடப்பட்ட பொடா சட்டத்தின் நிலை என்னவாயிற்று என்பதையும் இந்து நாளிதழ் அறிந்து கொள்ள விரும்பவில்லை.

8 ஆண்டுகள் தவ்ஃபீக்கைத் தேடியதில் என்னதான் சிக்கல்?

கடந்த 2.12.2002இல் மும்பையின் அம்ருத் நகரிலிருந்து காட்கோபர் இரயில் நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் வெடிகுண்டு வெடித்து இருவர் பலியாயினர்; 49 பேர் காயமடைந்தனர். சுறுசுறு(!)ப்புக்குப் பேர்போன மும்பைக் காவல்துறை உடனடியாக, மும்பை ஜேஜே மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் முஹம்மது அப்துல் மத்தீன், ஷேக் முஹம்மது முஸம்மில், ஸாஹிர் அஹ்மது, இம்ரான் அஹ்மது கான், முஹம்மது அல்தாஃப் இஸ்மாயீல் ஆகிய ஐவரை மேற்காணும் வெடிகுண்டு வழக்கில் 'சேர்த்து' வழக்குப் பதிந்தது. ஆறாவது விசாரணைக் கைதியான ஸையித் காஜா யூனுஸ், காவல்துறை கஸ்ட்-அடியில் மரணமடைந்தார். பதறிப்போன மும்பைக் காவல்துறை, ஹைதராபாத் என்கவுண்ட்டரில் நவம்பர் 2002இல் போட்டுத் தள்ளப்பட்ட ஸையித் அஸீஸ் (எ) இம்ரானையும் தமிழ்நாட்டின் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தவ்ஃபீக்கையும் இந்த வழக்கில் 'சேர்த்து' அடுத்த வாரம் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தது. மேலும், இவர்கள் அனைவரும் ஜெய்ஷே முஹம்மது, அல் காயிதா, லஷ்கரே தொய்பா, சிமி ஆகிய தீவிரவாத இயக்கங்களோடு தொடர்புடையவர்கள் என்பதாக வழக்கை ஜோடித்தது மும்பை காவல்துறை. http://articles.timesofindia.indiatimes.com/2003-04-10/mumbai/27270630_1_imran-rehman-khan-supplementary-chargesheet-mohammed-abdul-mateen  

பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது.

குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும், 11.6.2005இல் 'அப்பாவிகள்' எனத் தீர்ப்பளித்து நீதிமன்றம் விடுதலை செய்தது. அத்துடன் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிபதி அஷோக் பங்காலே, "இந்த வழக்கு அரசுத் தரப்பால் கட்டியெழுப்பப்பட்டது" என்று குட்டும் வைத்தார்.http://www.milligazette.com/Archives/2005/01-15July05-Print-Edition/011507200529.htm  

இந்த வழக்கில் தவ்ஃபீக்கின் தொடர்பு என்ன?

கடந்த 2002ஆம் ஆண்டு கொடுங்கையூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்பது டெட்டனேட்டர்களைக் காவல்துறையினர் 'கண்டு' எடுத்தனர். அவற்றை மறைத்து வைத்திருந்ததாகக் கூறி, தவ்ஃபீக்கை 26 நவம்பர் 2002இல் கைது செய்து சிறையில் அடைத்து, மூன்று நாள்கள் கழித்து, 29 நவம்பர் 2002இல் நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் தவ்ஃபீக்கைக் காவல்துறை விசாரணைக் கைதியாக (வழக்கு எண் 681/2002) சிறையில் அடைத்தது. இச்செய்தியும் வழக்கம்போல் எல்லா ஊடகங்களிலும் வெளியானது.

நவம்பர் 26இல் சென்னைக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்குள் இருந்த தவ்ஃபீக்கை, டிஸம்பர் 2இல் நடந்த காட்கோபர் பேருந்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக மும்பைக் காவல் துறை குற்றம் சுமத்தி, தன் வழக்கில் புத்திசாலித் தனமாகச் 'சேர்த்து'க் கொண்டது.

2002ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தவ்ஃபீக், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டார்.http://www.elections.tn.gov.in/ECI/Affidavits/S22/SE/179/AC179CANDIDATE.htm  

பின்னர், கொடுங்கையூர் வழக்கு பிசுபிசுத்துப்போய் பிணையில் வெளிவந்தார் தவ்ஃபீக். என்றாலும் அவ்வப்போது முக்கிய அரசியல் தலைவர்கள் சென்னைக்கு வரும்போது தவ்ஃபீக்கைக் காவல்துறையினர் அழைத்துப் போய் சிறையில் வைத்திருந்து வெளியே விடுவது 2008வரை வழக்கமாகவே இருந்து வந்தது.

அவ்வப்போது நமது புலனாய்வு(!) எழுத்தாளர்கள் சிலர், தவ்ஃபீக்கை சர்வதேச பயங்கரவாதி என்பதுபோல் சித்தரிப்பது தொடர்ந்தது.

இரா. சரவணன் என்பவர் ஜூவியின் 25.5.2008 பதிப்பில் "டென்ஷனில் தமிழகம்! டேஞ்சரஸ் தவ்பீக்..." என்று தலைப்பிட்டு நல்ல கற்பனை வளத்துடன் ஒரு கட்டுரை எழுதினார்.

அவருடைய கற்பனை வளத்துக்குச் சான்றான பகுதி:

"ஜெய்ப்பூரிலும், சென்னையிலும் ஒரே சமயத்தில் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றத் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. உளவுத்துறை போலீஸாரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் சென்னை தப்பியிருக்கிறது. ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்புக்கும் தவ்பீக்குக்கும் தொடர்பு இருப்பதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்பினரின் மெயில் மிரட்டலில் 'டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களையும் தகர்ப்போம்' எனச் சொல்லி இருக்கிறார்கள். போலீஸ் தன் மீது கண் பதித்திருந்ததால்தான் தவ்பீக்கால் சென்னையைத் தகர்க்கும் அசைன்மென்ட்டை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கிறது. (ஜூனியர் விகடன் 25-5-2008 இதழிலிருந்து).

இந்தப் பதிவுக்குப் பின்னர் ஜூவியைத் தொடர்பு கொண்டு தவ்ஃபீக்கைப் பற்றி உண்மைக்கு மாற்றமாக எழுதியதை அவருடைய குடும்பத்தார் விசாரித்தபோது, தவ்ஃபீக்கின் குடும்பத்தினரின் கருத்துகளையும் உண்மை அறியும் குழுத் தலைவரும் வழக்கறிஞருமான மனோகரனின் கருத்துகளைப் பெற்று, மூன்று மாதத்துக்குப் பின்னர் ஜூவி வெளியிட்டது. அதில், சர்வதேச மக்கள் வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகிறார்:

'என்னை என்கவுன்ட்டர் செய்ய முயன்றால், தமிழகத்தையே குண்டு வைத்துத் தகர்ப்பேன்' என்று தவுபீக் சொன்னதாகச் சொல்கிறார்கள். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பொய்க்குற்றம் சுமத்தப் பட்ட தவுபீக், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு நிம்மதியாக வாழ்ந்துவந்தார். உளவுத்துறை, அவரைத் தங்களின் உளவாளியாக மாறச்சொல்லி நெருக்கடி கொடுத்தது. இதை எதிர்த்த காரணத்துக்காக, ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் அவரை சம்பந்தப்படுத்தியதுடன், இந்துத் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், சுற்றி வளைத்தபோது தப்பிவிட்டதாகவும் கதை கட்டியிருக்கிறார்கள். http://adiraixpress.blogspot.com/2008/08/blog-post_4794.html  

கடந்த 2008 மே மாதம் 17இல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் 13.5.2008இல் ஜெய்ப்பூரின் 9 இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன. பத்தாவது குண்டைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்தனர். அந்தத் தொடர் குண்டு வெடிப்புகளில் அப்பாவிகள் 63 பலியாயினர்; 216 பேர் படுகாயம் அடைந்தனர். அந்தத் தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக மும்பையைச் சேர்ந்த விஜய் என்பவனை முதன்முதலாகக் காவல் துறை கைது செய்தது. http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=1618&Itemid=54  

வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தால் தனக்கு 1 லட்சம் ரூபாய் தருவதாக ஆசைகாட்டி மீனா எனும் பெயருடைய பெண் கூறியதாகக் காவல்துறையினர் விஜயிடமிருந்து வாக்குமூலம் 'வாங்கினர்'. தொடர்ந்து மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர்.http://tamil.oneindia.in/news/2008/05/14/india-60-killed-150-injured-as-terror-strikes-raja.html  

ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புக்கு ஆர் டி எக்ஸ் எனும் சக்தி வாய்ந்த வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆர் டி எக்ஸ் என்பது இராணுவத்தில் பயன்படுத்தப்படுவது. நமது இராணுவத்துக்குச் சொந்தமான ஆர் டி எக்ஸ் வெடிமருந்துகளில் பெரும்பகுதி, முன்னாள் இராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் மூலம் கடத்தப்பட்டு சங் பரிவாருக்கு சப்ளை செய்யப்பட்டதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.http://www.satyamargam.com/1096  

மும்பை மாலேகான் ஸ்கூட்டர் குண்டு வெடிப்பில் சங் பரிவாரின் சாமியாரிணி சாத்வீ ப்ரக்யா சிங் தாகூரோடு முன்னாள் இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா என்பவரும் முன்னாள் இராணுவ மேஜர் பிரபாகர் குல்கர்னி என்பவரும் கைது செய்யப்பட்டனர். http://www.satyamargam.com/1078  

இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகளுக்கு மூலகாரணமாக சங்பரிவாரங்களும் சாதுக்களும் சாமியார்களுமே இருக்கிறார்கள் என்று நிரூபனமான பிறகும் ஊடகங்களுக்கு மட்டும் இந்திய முஸ்லிம்கள் மீதான வன்மம் ஓயவில்லை! காவல்துறைக்கும் அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து இன்ஃபர்மர்களாக மாற்றும் திட்டம் மாறவில்லை.

சென்னையில் தங்கியிருந்து கொண்டு 2008 மே மாத இறுதியில் குமுதம் ரிப்போர்ட்டருக்குப் பேட்டி கொடுத்த தவ்ஃபீக், ஜெய்ப்பூருக்குப் போய் குண்டு வைத்ததாகத் தமிழகக் காவல்துறை கதை புனைந்தது. பின்னர், அவரைத் தங்களுக்கு உளவு சொல்பவராக மாற்ற முயற்சி செய்தது. அவர் மறுக்கவே, என்கவுண்டரில் போட்டுத் தள்ள அப்போதைய காவல்துறை முயன்றது. இதை தவ்ஃபீக் கூறுகிறார்:

எனது வக்கீல் சந்திரசேகரின் பெசண்ட் நகர் வீட்டுக்கு இரவு ஏழு மணிக்குப் போனேன். அவர் வீட்டில் நான் போய்ச் சேர்ந்த பத்து நிமிடத்தில் அவருக்கு ஒரு போலீஸ் நண்பர் போன் செய்திருக்கிறார். வழக்குரைஞரின் முகமே வியர்த்துவிட்டது. என்னிடம் திரும்பியவர், `ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக என்கவுன்ட்டர் ஸ்பெஷல் டீம் எனது வீட்டை நோட்டம் விடுவதாகச் சொல்கிறார். யாரைச் சொல்கிறார்?' என்று கேட்டார். நான் இரண்டு நாளைக்கு முன்பு நடந்ததைப் பற்றிச் சொன்னேன். அவரும் தனது ஜூனியர்களை வெளியில் அனுப்பி பார்த்து வரச் சொன்னார். ஒரு ஆம்னி வேன், பைக் ஆகியவற்றில் மஃப்டி போலீஸார் இருந்தனர். அந்த நேரத்தில் தெருவில் லைட் ஆஃப் ஆனது. வக்கீல் வீட்டில் மட்டும் லைட் எரிந்தது. உடனே எனது இயக்கத்தவர்களுக்குத் தகவல் சொன்னேன். அவர்கள் ஒரு முப்பது பேர், ஜூனியர் வக்கீல்கள் எனத் திரண்டு வந்து என்னைத் தப்ப வைத்தனர். http://adiraixpress.blogspot.com/2008/05/blog-post_2465.html  / http://www.kumudam.com/magazine/Reporter/2008-05-25/pg4.php  

"எங்களுக்கு உளவு சொல்; இல்லையென்றால் நீ காலி" என மிரட்டிய காவல்துறையிடமிருந்து தப்பி, கடந்த மூன்றாண்டு காலமாக தலைமறைவு வாழ்க்கை நடத்திய தவ்ஃபீக் பட்ட துன்பங்கள் போதும்.

தவ்ஃபீக்கின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு முறையான நேர்மையான விசாரணை நடைபெறவேண்டும். அதுவும் விரைந்து நடைபெறவேண்டும். அப்போது நீதி நிலைபெறும். அதுவரை, "8 ஆண்டுகள் தேடப்பட்ட..." கதை சொல்லும் ஊடகங்கள் அடக்கி வாசிக்கட்டும்.

2003ஆம் ஆண்டு காட்கோபரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை 1999ஆம் ஆண்டு நடைபெற்றதாக செய்தி வெளியிட்டு தமிழ் முரசு நாளிதழ் தன்னுடைய அரைவேக்காட்டுத் தனத்தை வெளிப்படுத்தியது.

ஊடகங்களில் செயல்பாடுகளை அண்மையில்தான் பிரஸ் கவுன்சிலின் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கண்டித்திருந்தார். பதவியில் இருக்கும் நீதிபதிகளின் தீர்ப்பையே மதிக்காத ஊடகங்கள் வழக்கம் போலவே கட்ஜுவின் கண்டிப்பை பெரிதுபடுத்தவில்லை.

குடிமக்களே செய்தியாளர்களாக மாறியுள்ள சூழலில் இத்தகைய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தால் மக்களின் நம்பிக்கையை இவை இழக்க நேரிடும் என்பதைச் சொல்லி வைக்கிறோம்.

***

முன்பு தௌபீக் மீது புனையப்பட்ட பல கேஸ்களில் மும்பை காட்கோபர்-ல் பஸ்ஸில் குண்டு வைத்ததாக புனையப்பட்ட கேசும் ஓன்று. அதில் முக்கிய சாட்சி அந்த பஸ்ஸின் கண்டக்டர். அவரிடம் குறுக்கு விசாரணை செய்த டிபென்ஸ் லாயர் திரு மஜீத் மேமன் : "நீங்கள் தௌபீக் -ஐ எங்கு கண்டீர்கள்?


கண்டக்டர் : "ஒரு பையை வைத்துவிட்டு அவசரமாக வெளியே இறங்கினார்"

திரு மஜீத் மேமன் "எப்பொழுது வெடித்தது"

கண்டக்டர் : "ஒரு சில நொடிகளில்"

இப்பொழுது ஜட்ஜின் பக்கம் திரும்பிய திரு மஜீத் மேமன் : "யூஆர் ஆனர், இங்கு கண்டக்டர் குறிப்பிட்ட நாள், நேரம் மாதத்திற்கு பல வாரங்களுக்கு முன்பாகவே வேறொரு கேசில் குற்றம் சாட்டப்பட்ட தௌபீக் சென்னை ஜுடிசியல் கஸ்டடி-ல் ரிமான்ட் செய்யப்பட்டு உள்ளே இருக்கிறார்" என்று சொல்லிவிட்டு நான் கொண்டு சென்றிருந்த டாகுமென்ட் களையும் ஜட்ஜின் பார்வைக்கு சமர்பித்தார்.

அதை நன்றாக பார்த்து பரிசீலனை செய்தபின் அதை ஆமோதித்து தலை அசைத்து திரு மஜீத் மேமனைப்பார்த்தார்.

இப்பொழுது மஜீத் மேமன் சொன்னது ஒட்டு மொத்த கோர்ட் வளாகத்தையும் சிரிப்பொலியால் அதிரவைத்தது.


"யு ஆர் ஆனர், இப்படி சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்த என் கட்சிக்காரர் பலமான கம்பிகளை வளைத்து பல நூறு கிலோ மீட்டர் பறந்து வந்து இந்த வெடிப்பை ஏற்படுத்திவிட்டு மீண்டும் பறந்து சென்று சிறைக்கம்பிகளுக்குள் புகுந்து கொண்டார் என்று என் கட்சிக்காரரை சூப்பர் மேன் அளவுக்கு உயர்த்துவதை என்னால் நம்பமுடியவில்லை" என்று சொன்னதை ஜட்ஜ் உள்வாங்கிக் கொண்டு இலேசாக உடல் குலுங்க சிரித்துவிட்டார். அதே நேரம் கண்டக்டர் பம்பாய் போலீஸ் அதிகாரிகளை பார்த்தவிதம் "உங்களை எல்லாம் ............ டா" என்பதுபோல் இருந்தது.

***

கூடுதல் தகவல்களுக்கு 2008ஆம் ஆண்டு மே மாதம்

தவ்ஃபீக்கின் குமுதம் ரிப்போர்ட்டர் பேட்டி:


அதிரையில் சீட்டு என்ற பெயரில் ...



தமிழகத்தில் முஸ்லிம்கள் பெருபான்மையாக வாழக்கூடிய, வரலாற்று சிறப்பு மிக்க பிரபல கல்வி நிறுவனங்கள், மார்க்கத்தை பயிற்றுவிக்கும் மதரசாக்கள், மஸ்ஜித்கள், பைத்துல்மால், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் இருக்ககூடிய ஊர்களில் அதிராம்பட்டினமும் ஓன்று இவ்வூரில் பிரபல தொழில் அதிபர்கள், கல்வி சீமான்கள், கொடை வள்ளல்கள், மார்க்க அறிஞர்கள், கல்வி பயின்ற மேதைகள், கணினி வல்லுனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்டம் தெரிந்த வல்லுனர்கள், வாழ்ந்த, வாழ்ந்துகொண்டுருக்கிற ஊரில்....... வட்டி !
மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட, கடுமையாக விலக்கி வைக்கப்பட்ட இவ்வட்டியினால் எத்தனையோ குடும்பங்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நடு வீதிக்கு வந்துள்ளார்கள். இவ்வட்டியானது சமுதாயத்தில் எவ்வாறு பல்வேறு பெயர்களில் உலவி வருகிறதென்று அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
1.       சீட்டு :-  என்ன சகோதரர்களே பெயரே வித்தியாசமாக இருக்கிறதா ! இது ஒரு நூதன வட்டி ! சீட்டு நடத்துபவர் ஒரு காலக்கெடுவை ( 12அல்லது 20 மாதங்கள்  ) நிர்ணயம் செய்து ஒவ்வொரு மாதமும் பணத்தை வசூல் செய்வார். அவ்வாறு வசூல் செய்யும் முதல் மாத பணத்தை இலவசமாக ( வட்டி ) சீட்டை நடத்துபவர் எடுத்துக்கொண்டு மற்ற மாதங்களில் வசூல் செய்யும் பணத்தில் ஓவரி என்று அழைத்து ஒரு குறிப்பிட்ட தொகையை இலவசமாக ( வட்டி ) பணத்தை செலுத்துபவர்களுக்கு கொடுப்பார்கள். இவ்வாராக செயல்படும் முறையில் சீட்டு போடுபவர்களுக்கு இடையில் பணம் தேவை ஏற்பட்டால் சீட்டு நடத்துபவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட தொகையை தள்ளுபடிசெய்து ( வட்டி ) மீதி தொகையை கொடுப்பார்கள். இதில் பெரும்பாலும் நடுத்தர மற்றும் உயர் வர்க்கத்தினர் இவ்வலையில் சிக்கியுள்ளார்கள்.

2.       ஒத்திக்கு (குத்தகை) :-
வீடு, தென்னந்தோப்பு, கடைகள் இவைகளை அடமானமாக ஒரு குறிப்பிட்ட பணத்தை பெற்றுக்கொண்டு கொடுப்பார்கள். பணத்தை செலுத்தும் நபர் இவற்றிலிருந்து கிடைக்கப்பெறுகிற வருமானத்தை
( வட்டி ) அடைவார்கள். மேலும் மற்றொரு வகையில் வீடு மற்றும் சொத்து பத்திரங்களை அடமானமாகக் கொடுத்து அவர்கள் நீட்டிய இடத்தில் வெற்றுப்பத்திரங்களில் கையொப்பம் இட்டு ( பின் விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல் )பணம் பெறுவது.  குறிப்பாக இதில் அனைத்து வர்க்கத்தினரும் சிக்கியுள்ளார்கள்.

3.       நாள் வட்டி (சைக்கிள்காரன்):-
நம் சமுதாய மக்களிடேய பெரும் சவாலாக உள்ளது இவைதான். நமது தெருக்களில் அங்காங்கே உலாவரும் வசூல் ராஜாக்கள் குறிப்பாக பாமர மக்களிடம் பணத்தை நாள் வட்டிக்குக்கொடுத்து திரும்ப தினமும் சைக்கிள் மற்றும் மோட்டார் பைக்கில் வசூல் செய்ய வருகிற இவர்களால் ஏற்படுகிற  ( பதிவில் ஏற்ற முடியாத அளவுக்கு ) பல்வேறு பிரச்சனைகள். இதில் பெரும்பாலும் ஏழை எளியோர்கள்தான்இவ்வலையில் சிக்கியுள்ளனர்.

4.       மேலும் பேங்கில் பெறப்படுகிற நகை கடன், டெபாசிட் தொகைகள், வீடு, வாகனம், தொழில் தொடங்க பெறப்படுகிற கடன்கள், இன்சூரன்ஸ்கள், ஷேர் மார்கெட் முதலீடு இவற்றைக்கொண்டு வருகிற இலாப, நஷ்டங்கள் அனைத்தும் வட்டியாகவே கருதப்படுகிறது.

தீர்வுதான் என்ன ?
1.       மக்களிடேய விழிப்புணர்வு  ஏற்ப்பட வேண்டும்.
2.       வரவுக்கேற்ற செலவு செய்ய ஒவ்வொரு குடுபங்களும் ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றி நடந்து கொள்ளவேண்டும்.
3.       இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று கூடி இம்மக்களிடையேCOUNSELLING  செய்து அவர்களுடைய அறியாமையை அகற்றிட வேண்டும்.
4.       நிபந்தனைக்கு உட்பட்ட வட்டியில்லாத கடன்களை வழங்க ஏற்பாடு செய்யலாம்.
5.       அதிரையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிரபல அரசியல் கட்சிகள் மற்றும் வெளிநாடுவாழ்  சகோதரர்கள் அனைவர்களும் ஒன்று இணைந்து இதனால் மக்களுக்கு ஏற்படுகிற இழப்பீடுகளை மனதில் எடுத்துக்கொண்டு சட்ட சிக்கல்களை ஆராய்ந்து பைனான்ஸ் நிறுவனங்களை தடை செய்யலாம்.

என்ன சகோதரர்களே இத்தலைப்புக்கும் இக்கட்டுரைக்கும் சம்மந்தம் இல்லை என்கிறீர்களா ?  இருக்கிறது! இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்.
குறிப்பு :-
மேலும் நல்ல கருத்துக்களுடன் கூடிய ஆலோசனைகள் வரவேற்க்கப்படுகிறது viewers can publish your valuable comments on the comment page )
மக்களின் சார்பாக,
M. நிஜாமுதீன்  B.sc.
( 9442038961 )

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.