தவ்ஹீதின் பெயரில் இயங்கும் இயக்கங்களும் அதன் உண்மை நிலைப்பாடுகளும் பற்றி நாம் பல முறை , பல இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளோம் . இந்த போலித் தவ்ஹீத் இயக்கங்கள் பற்றி ஷேக் அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி ஹபிதஹுல்லாஹ் அவர்கள் 1998 முதல் கூறி வருகிறார். அந்த வகையில், நாம் எமது முஸ்லிம் சமூகத்திற்கு எச்சரிப்பது என்ன வென்றால், இந்த போலித் தவ்ஹீத் இயக்கங்கள்
மார்க்கத்தை வளர்க்கவோ , தவ்ஹீதை வளர்க்கவோ, சுன்னாவை அடையாளம் காட்டி வளர்க்கவோ வந்த இயக்கங்கள் இல்லை, மாற்றமாக அல்லாஹ்வின் நம்பிக்கையில் சந்தேகங்களை உண்டாக்கி , அல்குர் ஆனில் சந்தேகங்களை உருவாக்கி , ஆதாரப் பூர்வமான நபி மொழிகளை முரண்பாடுகளாக சித்தரித்து அவைகளை மறுத்து , நபி வழியையும் நபி மொழியையும் கேள்விக் குறியாக்கி, இந்த நபி வழியையும் , அல்குர் ஆணையும் இந்த உம்மத்தின் கைகளுக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த அருமை சஹாபாக்களை குறை பேசி திரியும் கூட்டங்களாக தான் இன்று வரை இருந்துக் கொண்டிருக்கின்றன ? இவர்களின் வலையில் இன்று பல மக்கள் வீழ்ந்து அழிந்துக் கொண்டிருக்கிறார்கள். அருமை சஹாபாக்களின் வழிமுறைகளை யாரெல்லாம் தவிர்ந்துக் கொண்டார்களோ ,அந்த மக்கள் இவர்களது வலையில் சிக்கி சிரழிந்து கொண்டிருக்கிறார்கள். நாங்களும் இந்த சலபுஸ் சாலிஹீன்களின் வழி முறைகளை தவிர்ந்துக் கொண்டிருதோமேயானால், நாமும் இந்த மௌட்டீக கூட்டங்களின் வலையில் வீழ்ந்து இருப்போம் என்பதில் சந்தேகமில்லை.
அல்லாஹ்வின் பரக்கத்தால் நாம் இந்த சலபுஸ் சாலிஹீன்களின் வழி முறையில் மார்க்கத்தை பெற்றுக் கொண்ட காரணத்தினால் புரிந்து விட்டோம், அதாவது, இவர்களது கொள்கை இஸ்லாமிய கொள்கை இல்லை, அல்குர் ஆன் பற்றிய இவர்களது கொள்கை இஸ்லாமிய கொள்கை இல்லை., இவர்களது வழி முறைகள் , இஸ்லாமிய வழி முறைகள் இல்லை, இவர்களது சட்டங்கள் , இஸ்லாமிய சட்டங்கள் இல்லை , இவர்களது ஆடைகள் இஸ்லாமிய ஆடைகள் இல்லை , இவர்களுடைய பழக்க வழக்கங்கள் இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் இல்லை என்பதாக அறிந்து விட்டோம். மாறாக , எமது கொள்கை சஹாபாக்கள் கொண்டிருந்த கொள்கை, எங்கள் மார்க்கம், சஹாபாக்கள் பின்பற்றிய மார்க்கம், எங்கள் வழி முறை சஹாபாக்களின் வழி முறை, எங்கள் சட்டங்கள் சஹாபாக்கள் பின்பற்றிய சட்டங்கள், எங்கள் ஆடைகள் சஹாபாக்கள் அணிந்த ஆடைகள் , எங்கள் பழக்க வழக்கங்கள் அருமை சஹாபாக்கள் பின்பற்றிய பழக்க வழக்கங்கள். மொத்தத்தில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எப்படி அருமை சஹாபாக்கள் அணு அணு வாக பின்பற்றி செயல்பட்டார்களோ , அந்த கொள்கையும் மார்க்கமும் தான் எமது மார்க்கம். எமது ஆடையாகட்டும், எமது குடும்ப வாழ்க்கை ஆகட்டும், எமது சொந்த பிரச்சனைகள் ஆகட்டும் அனைத்தும் சஹாபாக்கள் பின்பற்றி செயல்பட்ட வழிமுறையில் அன்றி நாம் செயல் படுவதில்லை. சுருங்க சொன்னால் , நபி வழி அன்றி எமக்கு ஒருவழி இல்லை. எனவே, இந்த நேரான வழி முறையை தவிர்ந்துக் கொண்ட , வழி கெட்ட இந்த தவ்ஹீத் ஜமாஅத் கூட்டங்களை வேரோடு கழற்றி விடுவது உண்மையான ஒவ்வொரு தவ்ஹீத் வாதியின் கடமையாகும்.
ஏனெனில், இவர்கள் வந்துவிட்டார்கள், அல்லாஹ் ஏழு வானத்தின் மேலிருந்து, அருமை சஹாபாக்களை புகழ்ந்து, நான் அவர்களை பொருந்திக் கொண்டேன், அவர்களும் என்னை பொருந்திக் கொண்டார்கள் என்று கூறிய பின்பும் அந்த அருமை சஹாபாக்களை ஏளனம் செய்வதையும், குறை கூறுவதையும், திட்டி திரிவதையும் அழைப்பு பனியின் வழி முறையாக எடுத்து சொல்வதற்கு. வந்து விட்டார்கள், நபி மொழியையும் , நபி வழியையும் மறுப்பதற்கு வந்து விட்டார்கள். எனவே, இந்த கும்பலை சும்மா விட்டு விட முடியுமா ? உண்மையான தவ்ஹீத் வாதியின் முன்னாள் இவர்கள் மிஞ்சுவார்களா ?
இதனால் தான் நாம் கூறுகிறோம் , இவர்கள் இந்த காலக்கட்டத்தின் " ஸனாதிகா ". ஸின்தீக் என்றால், மார்க்கத்திற்கு புறம்பாக பேசுபவர்கள், அதாவது, எந்த விதமான அளவுகோல்களும் இல்லாமல், மார்க்கத்தில் தன் இஷ்டப்படி , தனது புத்திக்கு தோன்றியதை எல்லாம் தர்க்கங்களை வாதங்களை அடிப்படியாக கொண்டு செயல் படுவதாகும்.
இதனை இந்த தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கும் அனைத்து இயக்கங்களிலும் காணலாம். அல்குர் ஆனை தனக்கு தேவை மாதிரி திருப்பி பேசுவான், சுன்னாவை தனக்கு தேவை மாதிரி திருப்பி பேசுவான், மறுப்பான். இவ்வாறு இவர்கள் தவ்ஹீதின் பெயரில் செய்யும் அக்கிரமங்களை சொல்வது என்றால், ஒரு உரையில், ஒரு சில பக்கங்களில் சொல்லி முடிக்க முடியாது. அந்தளவுக்கு இவர்களது அக்கிரமங்கள் மார்க்கத்தின் பெயரில் இருக்கிறது.
அறிய அவனது பெயர்களை பண்புகளை அவன் அல்குர் ஆனில் சுன்னாவில் வர்ணித்தவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் , அவர்களுக்கு அல்லாஹ் பற்றிய ஈமானில் சர்ச்சையாகி விடும். அல்லாஹ் அவனை பற்றி வர்ணித்தவைகளுக்கு இவர்கள் மாற்றுக் கருத்து கொடுக்க வாரார்கள் என்றால் இவர்கள் அல்லாஹ்வை விட அல்லாஹ்வை பற்றி அறிந்தவர்கள் என்று சொல்ல வருகிறார்கள் என்று தான் அர்த்தம் .
ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான், சொல்வதில் அவன் ஆகவும் உண்மையானவன். வார்த்தைகளில் சிறப்பானது அவனுடைய வார்த்தை என்று. இதன் பிறகும் , அல்லாஹ் அவனை பற்றி வர்ணித்தவைகளுக்கு மாற்றுக் கருத்து கொடுக்க வருகிறார்கள் என்றால் , அல்லாஹ் சொல்வதில் மேலானவன், வார்த்தைகளில் அவனது வார்த்தை சிறப்பானது என்பதை ஏற்றுக் கொள்ள வில்லை என்று தான் அர்த்தம். அல்லாஹ்
்தம். இவ்வாறு அல்லாஹ் அவனை பற்றி சொன்ன பெயர்களை பண்புகளை ஏற்றுக் கொள்ளாமல், இது அல்லாஹ்வுக்கு சாத்தியம் இல்லை, இது அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது என்று இந்த கும்பல்கள் சொல்கிறார்கள் என்றால் , இது தவ்ஹீதா ? இது தான் அல்லாஹ்வை பற்றிய நம்பிக்கையா ? இது இஸ்லாமிய கொள்கையா ? இதற்கு பெயர் தவ்ஹீத் ஜமாஅத் ஆ ?
இப்படியான மௌட்டீக கூட்டம் வெட்கமும் கூச்சமும் இல்லாமல் , இது எனது ஆராய்ச்சி , இது எனது விளக்கம், எனது ஆராய்ச்சியின் அடிப்படையில் , எனது விளக்கத்தின் அடிப்படையில் இந்த பண்பு அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது என்று சொல்கிறார்கள் என்று சொன்னால், இவர்கள் அறிந்ஜர்கள் ஆகிவிட்டார்கள், சொல்வதில் உண்மையாளர் ஆகிவிட்டார்கள் ஆனால் அல்லாஹ் மடத்தனமாக சொல
சிறப்பாக சொல்லவில்லை என்று தான் சொல்ல வருகிறார்கள். அல்லாஹ் அவனது பண்பை பற்றி சொன்ன பிறகும். இது அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது , அல்லாஹ் இவ்வாறு செய்ய முடியாது என்று சொல்ல வருகிறார்கள் என்றால் , அல்லாஹ்வுக்கு சிறப்பாக சொல்ல தெரியாமல் போய்விட்டது , இவர்கள் வந்து விட்டார்கள் சரியாகவும் சிறப்பாகவும் அல்லாஹ்வை பற்றி சொல்வதற்கு என்று தான் அர்
த்லிவிட்டான், பொய்யன் ஆகிவிட்டான் ( நவூதுபில்லாஹ் ) என்று தான் மறைமுகமாக சொல்ல வருகிறார்கள். இப்படியான விடயங்களை இவர்கள் சொல்ல , மக்களும் கேட்டு பின்னால் செல்கிறார்கள் என்று சொன்னால், மக்களின் ஈமான் என்னவாகிவிட்டது ?, புத்தி என்னவாகிவிட்டது ? , மக்கள் எங்கே போய்கொண்டிருக்கிறார்கள் ?
ய்மையானவன். தூதர்கள் மீது ஸலாம் உண்டாவதாக . அகிலத்தாரின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் " என்று.
அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். இது தான் வரலாற்றில் வந்த அனைத்து பித் அத் வாதியின் அடிப்படைகள், அனைத்து வழிகேடர்களின் அடிப்படைகள். இத வழிகேடர்களுக்கு மறுப்பாக தான் அல்லாஹ் சூரத்துல் ஸாபாதில் கூறுகிறான், " இவர்கள் வர்ணிப்பதை விட்டும் உங்களுடைய மேலான இரட்சகன் மிகவும் பரிசுத்தமானவன்,
தூ
" திட்டமாக அல்லாஹ்வின் தூதர் இடத்தில் அழகிய முன் மாதிரி இருக்கிறது. யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்தவராக , அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவராக இருக்கிறாரோ அவருக்கு." என்று சொல்லப்பட்ட தூதர் அல்லாஹ்வுக்கு , அல்லாஹ்வின் வார்த்தைக்கு முரணாக செயல் பட்டார்கள் என்று தான் அர்த்தம். அல்லாஹ் பாதுகாப்பானாக. இப்படி சொல்லும் மௌட்டீக கூட்டத்திற்கு பெயர் தவ்ஹீத் ஜமாஅத் !!. இதற்க்கு பெயர் ஏகத்துவம் ?? எப்படி ?? இது எந்தக் கூட்டத்தின் ஏகத்துவம் ? யூத நசாராக்களின் ஏகத்துவமா ? இது இஸ்லாமிய ஏகத்துவமா ? இஸ்லாமிய ஏகத்துவம் இப்படியா ?.
ஆமாம், ஏகத்துவம் என்ற சொல்லை ஆங்கிலத்தில் Monotheism என்று சொல்லி , கிறிஸ்தவர்கள் trinity யையும் அதாவது , பிதா , சுதன் , ஆவி என்று மூன்றையும் ஏகத்துவம் என்று ஆக்கி விட்டான். இவர்களும் தவ்ஹீத் வாதி என்கிறார்கள் என்றாலும் இவர்களிடம் , நீங்கள் தவ்ஹீத் வாதிகள் , பித் அத் செய்யும் இமாம் பின்னால் தொழ மாட்டீர்கள்!, கப்ரு ஸ்தான பள்ளிவாயல்களில் தொழ மாட்டீர்கள் ! இருப்பினும் நீங்கள் பாபரி மஸ்ஜித் எனும் கப்ரு ஸ்தான பள்ளிவாயலுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது, இந்த போலி தவ்ஹீத் வாதிகளின் பதில் என்ன தெரியுமா ? நாங்கள் கோயில்களுக்கும் , சர்ச்சுகளுக்கும் உரிமை என்ற விடயத்திற்காக குரல் கொடுப்போம் என்பதாகும்.
இப்படி ஒரு பதிலை உண்மையான தவ்ஹீத் வாதி சொல்வானா ?
உரிமை என்ற ரீதியில் ஒரு முஸ்லிம் பச்சை ஷிர்க்கான கோயிலுக்கும் சர்ச்சுக்கும் ஆதரவாக குரல் கொடுப்பானா ? இந்த ஷிர்க்குகளும் இவர்களுக்கு ஏகத்துவ கொள்கை. உரிமை என்றால் , பள்ளிவாசல், கோயில் , சர்ச் மூன்றும் இவர்களுக்கு ஒன்று. அல்லாஹ்வின் உரிமை எங்கே ? அவனுக்கு கொடுக்க வேண்டிய உரிமையும் , செய்ய வேண்டிய கடமையும் எங்கே ?
சுமந்து இருந்தாலும் ஆச்சரியம் இல்லை. இவர் இந்த பி. ஜெ. கூறுகிறார், அவர் தவ்ஹீதுக்கு தலைவராம். எந்தளவுக்கு என்றால், இலங்கை நாட்டு மக்கள் தொகை அளவுக்கு மக்கள் எங்களை தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தும் ... என்று ஷேக் யஹ்யா சில்மி ஹபிதஹுல்லாஹ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். க
சிலைகளை அழிக்க வந்த மார்க்கம் , தவ்ஹீதை சொல்லும் மார்க்கத்தின் அழைப்பு பணியை சொல்ல வந்த இவர்கள், சிலைகளுக்கு பாதுகாப்பாக ஆதரவு குரல் கொடுப்பேன் என்று தவ்ஹீத் பேசும் நாவால் சொல்கிறார்கள் என்றால் , இவர்கள் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் எதிரிகளின் சிலை வைக்கும் தவ்ஹீதை இவர்க
ள்யிலுக்கும் , சர்ச்சுக்கும் பாதுகாப்பாக அதரவு ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று ஷிர்க்கை முழங்கும் தலைவர். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.
இவரது பாதை தமிழ் உலகத்தை ஷிர்க்கில் கொண்டு சேர்க்கும் பாதை. ஏனெனில் , எழுத்து மூலமாக வந்துள்ள அல்குர் ஆன் பாதுகாப்பாக வந்து சேரவில்லை என்று சொல்லும் இந்த கூட்டங்கள் எங்கே தவ்ஹீதை தெரியப்போகிறது. அல்லாஹ்வின் பெயர் பண்புகளை , தனது புத்திக்கு படவில்லை என்று மறுக்கும் , திரிக்கும் இந்த கூட்டங்கள் எங்கே தவ்ஹீதை அறிந்திருக்க போகிறது ? அல்லாஹ் அவனை பற்றி அல்குர் ஆனில் வர்ணித்தவைகளையும், நபி சல்லல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸில் வர்ணித்தவைகளையும் , படைப்பினங்களுடன் ஒப்பு ஆக்காமல் , மாற்று கருத்து கொடுக்காமல், மறுக்காமல், எப்படி என்று கேள்வி கேட்காமல் , அப்படியே வந்த மாதிரி கேட்டோம் , கீழ்படிந்தோம் என்று ஏற்றுக் கொள்வது தான் தவ்ஹீத்.
ஆனால், இவர்களோ அல்லாஹ்வின் பெயர் பண்புகளை மறுத்தும், திரித்தும், அவனுக்கு லாயக்கு இல்லை என்றும் சொல்லி தவ்ஹீத் என்ற அழைப்பு பனி செய்கின்றனர். இது தவ்ஹீத் அழைப்பு பனியா ? இவ்வாறு தவ்ஹீதை நாசாமாக்கி, அல்குர் ஆனை நாசமாக்கி செய்யப்படும் ஒரு அழைப்பு பணி தான் இவர்களின் அழைப்பு பணி. நவூதுபில்லாஹ்.
இந்த வழிகேடான கொள்கையை சுமந்த இவர்கள் , சலபி கொள்கைக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அல்ல. ஏனெனில், வரலாறில் இதே கொள்கை கொண்ட பல வழி கேடான கூட்டங்கள் தெள்ளத் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு தான் இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் இவர்களை பார்த்து நாம் கூறுகிறோம் , இவர்களது வழி முறை முஃதஸிலா. இவர்களது கொள்கை அஷாயிரா என்று. ஏனெனில், முஃதஸிலா , அறிவிப்பை விடவும் தர்கத்திற்கும் வாதத்திற்கும் முன்னுரிமை கொடுப்பான். அஷாயிரா , அல்லாஹ்வின் பெயர் பண்புகளை படைப்புகளுடன் ஒப்பாக்கி, மறுத்து , மாற்று கருத்து கொடுத்து விடுவார்கள். இந்த போக்கு தான் இவர்களிடமும் காணப்படுகிறது.