அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, May 4, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் (AAMF ) – ஐந்தாவதுக் கூட்டம் !


அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக ஐந்தாவது கூட்டமாக இன்று ( 04-05-2012 ) அஸர் தொழுகைக்குப்பின் அதிரையின் பழமைவாய்ந்த மற்றும் பாரம்பரியமிக்க தெருக்களில் ஒன்றாகிய கடற்கரைத் தெருவில் உள்ள ஜும்மா பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, சகோ. M.S. சிஹாபுதீன் ( AAMF ன் ஒருங்கினைப்பாளர் ) அவர்கள் தலைமையிலும், M.M.S. சேக் நசுருதீன் ( தலைவர் – AAMF ) மற்றும் பேராசிரியர் M.A. முகமது அப்துல் காதர் ( செயலாளர் – AAMF )அவர்கள் முன்னிலையிலும், சிறப்பு அழைப்பாளராக பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம், சகோ. அக்பர் ஹாஜியார், சகோ. ஜமீல் M. ஸாலிஹ், சகோ. C. முஹமது இப்ராகிம் ( பைத்துல்மால் இணைச்செயலாளர் ), சகோ. B. ஜமாலுதீன் ஆகியோர்களின் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது.
 


நிகழ்ச்சியின் நிரலாக.............


மெளலவி. முஹம்மது இப்ராகிம் ஆலிம் அவர்களால் கிராஅத் ஓதுப்பட்டது.




M.M.S. சேக் நசுருதீன் ( தலைவர் – AAMF ) அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
 


அல் அமீன் பள்ளி நிலைப்பாடு சம்பந்தமாக வருகின்ற 06/05/2012 அன்று அஸர் தொழுகைக்குப்பின் நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்படுகிற அவசரக்கூட்டதில் அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகிகளை வரவழைத்து பேசுவது என்று தீர்மானம் செய்யப்பட்டது.

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக இதுவரைக் கூட்டப்பட்ட அனைத்துக் கூட்டத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு என்ன முடிவுக் காணப்பட்டது ? என்ற சகோ. M.S. சிஹாபுதீன் அவர்களின் கேள்விக்கு விளக்கங்கள் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 



அதிரை பேரூராட்சிக்கு மூன்று சக்கர வாகனம் வாங்குவதற்காக சம்சுல் இஸ்லாம் சங்கம் துபை கிளை சார்பாக நிதி உதவியாக ரூபாய்  25,000/- பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம் அவர்களிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக அதன் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் “கடற்கரைத் தெரு முஹல்லா“ வின் முக்கியஸ்தர்கள் எனக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்ட “கடற்கரைத் தெரு முஹல்லா“ நிர்வாகத்தினற்கு வாழ்த்துகள் பரிமாறப்பட்டு துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.

குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் வீதம் எனவும், இதன்படி அடுத்த கூட்டமாக “ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவில்“ வருகின்ற 08-06-2012  அன்று நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.

சேக்கனா M. நிஜாம்

2 பின்னூட்டங்கள்:

முஅ ஸாலிஹ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

என்று மாறுமோ இந்த அவல நிலை
அரசு செய்திட வேண்டிய நலத்திட்டங்களுக்கு பணம் கொடுத்து திட்டத்தைப் பெறும் ஒரே சமூகம் முஸ்லிம் சமூகம் மட்டும்தான்.

அதிரை சித்திக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்ஹம்துலில்லாஹ் ..,ஒற்றுமை பயணம் தொடரட்டும் ..

அதிரையில் துவங்கும் இஸ்லாமிய ஒற்றுமை உலகமெங்கும்

பரவி மனித இனத்திற்கு முன் மாதிரியாய் திகழட்டும்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.