ஒலிம்பிக் போட்டிகள் துவங்க ஒரு மாதமே உள்ள நிலையில், லண்டன் ஒலிம்பிக் மைதானம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.
தற்காலிகமாக கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஒலிம்பிக் கோலாகலத்தை எதிர்கொள்ள லண்டன் மைதானம் முற்றிலும் தயார்நிலையில் உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்மைதானத்தில் ஒரே நேரத்தில் 80 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெற உள்ளது.
0 பின்னூட்டங்கள்:
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment