அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, June 29, 2012

இமாம் ஷாஃபி(ரஹ்)பள்ளியின் சர்ச்சைகுறிய பாடத்திட்டம்

யுரோ கால்பந்து : இரண்டாவது அரை இறுதியில் இத்தாலி வெற்றி!

நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் மூன்று முறை சாம்பியனான ஜெர்மனி அணி, மற்றொரு முன்னாள் சாம்பியனான இத்தாலியுடன் மோதியது. 

விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் கசானோ கடத்தி கொடுத்த பந்தை தலையால் முட்டி பலோடெலி அருமையான கோல் அடித்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து ஜெர்மனி வீரர்கள் மீள்வதற்குள், ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் அவர்களுக்கு அடுத்த அதிர்சியையும் பலோடெலி அளித்தார். இம்முறை களத்தில் பம்பரம் போல புயல் வேகத்தில் செயல்பட்ட பலோடெலி, பந்தை வெகுதூரத்திலிருந்து தனி ஆளாகக் கடத்தி கொண்டுவந்து, கம்பீரமாக கோல் அடித்தார். 

முதல் பாதி ஆட்ட முடிவில் இத்தாலி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் கோலடித்தாக வேண்டிய நெருக்கடியில் ஜெர்மனி மும்முரம் காட்டியது. ஆனால் ஜெர்மனியின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. 90-வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஓசில் தனக்கு கிடத்த பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இருப்பினும் ஆட்டத்தின் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இத்தாலி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் இத்தாலி அணி, ஸ்பெயினை எதிர்த்து விளையாடுகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12:15 மணிக்கு ஆட்டம் துவங்குகிறது.

Thursday, June 28, 2012

யுரோ கால்பந்து : ஸ்பெயின் வெற்றி.

நேற்று நள்ளிரவு நடைப்பெற்ற முதலாவது அரை இறுதியாட்டத்தில் போர்ச்சுகல் அணி நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் அணியுடன் மோதியது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணியினரும் ஆக்ரோஷமாக ஆடினர். குறிப்பாக போர்ச்சுகல் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. சகவீரர்களான ஜோவோ பெரீரா, கோயண்ட்ராவோ, மௌடின்ஹோ ஆகியோர் ரொனால்டோவுக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்தனர். 

எனினும் ஸ்பெயின் வீரர்களும் சிறப்பாக ஆடியதால் போர்ச்சுகல் அணியினரால் எளிதாக கோல் அடிக்க இயலவில்லை. ஸ்பெயின் அணியின் கேப்டனும், கோல் கீப்பருமான இகர் காஸில்லஸ் சிறப்பாக செயல்பட்டு போர்ச்சுகல் வீரர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டார். இதனால் முதல் பாதியின் முடிவில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. 

ஆட்டத்தின் இரண்டாவது பாதியும் துவக்கம் முதலே விறுவிறுப்பாக நடந்தது. 90 நிமிடங்களின் முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படாததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களிலும் இரு அணியினராலும் கோல் அடிக்க இயலவில்லை. இறுதியில் போட்டியின் முடிவை நிர்ணையிப்பதற்காக பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 

இன்று நடைபெறும் (28/06/2012) இரண்டாவது அரை இறுதியில் ஜெர்மனி Vs இத்தலி அணிகள் விளையாடுகின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு ஆட்டம் துவங்கும். இன்றைய ஆட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உண்மை..

Wednesday, June 27, 2012

யூரோ கால்பந்து போட்டி : முதலாவது அரையிறுதியில் ஸ்பெயின் - போர்ச்சுகல் பலபரீட்சை!


இன்று நடைபெறும் (27/06/2012) முதலாவது அரையிறுதியில் போர்ச்சுகல் Vs ஸ்பெயின் அணிகள் மோதல்.
இந்திய நேரம் : நள்ளிரவு 12:15 மணி

நாளை நடைபெறும் (28/06/2012) இரண்டாவது அரை இறுதியில் ஜெர்மனி Vs இத்தலி அணிகள் மோதல்.
இந்திய நேரம் : நள்ளிரவு 12:15 மணி

ஜூலை 1ம் தேதி நள்ளிரவு 12:15 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும்.

சென்னை : ஜெமினி மேம்பாலத்தில் இருந்து மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து

சென்னை : மேம்பாலத்தில் இருந்து மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து


சென்னை, ஜூன் 27 : சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாரிமுனையில் இருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்த 17M மாநகரப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். 



காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 15 பேர் ராயப்பேட்டை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 5 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் மருத்துவமனையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக மருத்துவர்கள் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுநர் பிரசாத், நடத்துநர் ஹேமச்சந்திரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் வடபழனியைச் சேர்ந்த முருகன், ராணி, பல்லவன், பானுப்ரியா உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அண்ணா மேம்பாலத்தின் அருகே உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தின் அருகே செல்லும் சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை ஆணையர் திரிபாதி சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். கவிழ்ந்துள்ள பேருந்தை நிமிர்த்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் வளர்மதி சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். பாண்டிபஜார் காவல்துறையினர் இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து கவிழ்ந்து விழுந்ததும், பேருந்தில் இருந்து புகை கிளம்பியதும், பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு போன் செய்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வாகனம் தண்ணீர் அடித்து புகையை நிறுத்தியுள்ளனர். பேருந்துக்குள் சிக்கிக் கொண்ட பயணிகளை, பொதுமக்கள் பலரும் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியே மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இன்னும் ஒரு மாதத்தில் லண்டன் ஒலிம்பிக் போட்டி

ஒலிம்பிக் போட்டிகள் துவங்க ஒரு மாதமே உள்ள நிலையில், லண்டன் ஒலிம்பிக் மைதானம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.





தற்காலிகமாக கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஒலிம்பிக் கோலாகலத்தை எதிர்கொள்ள லண்டன் மைதானம் முற்றிலும் தயார்நிலையில் உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இம்மைதானத்தில் ஒரே நேரத்தில் 80 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 

ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெற உள்ளது.

Tuesday, June 26, 2012

காலை உணவின் அவசியம்!


எடை குறைக்க வேண்டும் என்று ஆசை படுபவர்கள் காலையில் உணவை சாப்பிட மாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். ஏனெனில் இரவில் உண்ட பிறகு, நீண்ட நேர இடைவேளைக்குப் பின் காலை நேரத்தில் உணவு உண்போம். ஏனெனில் அப்போது உண்டால் தான் அந்த நாளை தொடங்குவதற்கு ஏற்ற சக்தியானது கிடைக்கும். இத்தகைய சக்தியை காலை உணவில் மட்டுமே கிடைக்கும். மதியம் கூட உண்ணாமல் இருந்து விடலாம், ஆனால் காலையில் உண்ணாமல் இருந்தால் எந்த வேலையையும் செய்ய முடியாது. அப்படி உண்ணாமல் இருப்பவர்கள், இதை படித்தப்பிறகாவது உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். 

காலையில் உண்ணாமல் இருந்தால் என்ன விளைவுகள் ஏற்படும்?

1. காலையில் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும். அப்போது உடலுக்கு வேண்டிய சக்தியை காலை உணவே தருகிறது. காலை முதல் இரவு வரை நன்கு வேலை செய்ய உடலுக்கு சக்கியானது தேவைப்படுகிறது. அதற்கு காலை உணவே சிறந்தது. 

2. சிலர் எடையை குறைக்க காலை உணவை மட்டும் தவிர்த்து, மற்ற நேரத்தில் கொஞ்சம் உண்பர். ஆனால் உண்மையில் காலையில் உண்ணாமல் இருந்து மதியம் குறைவாக உண்ண முடியாது, அப்போது வயிறு நிறைய தான் உண்பர். ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது. மேலும் அத்தகைய உணவை உண்ணும் போது ஆரோக்கியமான உணவைக் கூட உண்ணமாட்டார்கள். ஆகவே இதனால் எடை தான் கூடுமே தவிர எடை குறையாது. 

3. மேலும் உணவை உண்ணாமல் இருந்தால் முதலில் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு அதிகரித்து, பின் கலோரியின் அளவு அதிகரிக்கும். மேலும் இது உடலில் மெட்டபாலிக் டிஸ்ஆடரை ஏற்படுத்தும். இதனால் எடை தான் அதிகரிக்கும். 

4. வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் காலை உணவை உண்ணாமல் சென்றால் அவர்களால் வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆகவே காலை உணவு அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தந்து கவனத்தை அதிகப்படுத்துகிறது. 

5. காலை உணவை உண்டால், உடலில் இருக்கும் தேவையில்லாத கலோரியானது விரைவில் கரைத்து விடும். 

6. மேலும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்கள் எப்போதும் நீங்கள் நடந்து கொள்வதையே பழகுவார்கள். இப்படி நீங்கள் சாப்பிடாமல் இருந்தால் அவர்களும் போக போக சாப்பிடாமல் தான் இருப்பார்கள். பின் அவர்கள் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். ஆகவே அவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க நினைப்பவர்கள், சரியான நேரத்தில் சாப்பிடுங்கள், அவர்களும் அதையே பின்பற்றுவார்கள். 

7. காலையில் உண்ணும் போது வேண்டுமென்றால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான தானியங்கள், பழங்கள், பால் போன்றவற்றை உண்டால் உடலும் ஆரோக்கியமாக இருப்பதோடு எடையும் கூடாமல் அளவாக இருக்கும். 

8. வேலைக்குச் சென்று சிடுசிடுவென டென்சனாக இருக்கிறீர்களா? அகற்கு காரணம் வேலைப்பளு அல்ல. அதற்கு காரணம் காலை உணவை உண்ணாதது ஆகும். 

எனவே காலை உணவை சாப்பிடுங்க!
அன்றைய தினத்தை ஆரோக்கியமா ஆரம்பிங்க!!

Saturday, June 2, 2012

டாக்டர் மகன் சீக்கு, வாத்தியார் மகன் மக்கு பழ(ல) மொழிக்கு பொருந்தும்...


என்னப்பா ரொம்ப டையடா இருக்கு, வெளியிலே பிரியா கொஞ்சம் போய்ட்டு வரலாமுன்னு கிளிம்பி வந்தால் உட்காரும் இடத்தில் எல்லாம் பிரச்சனையாதான் பேசிக்கொண்டேயிருக்கிறாங்க. இந்த வார சூடான பிரச்சனைகள் நம்ம தவ்ஹீத் வாதிகளிடன் தன்மைகளைபப் பற்றிதான் அப்படியிப்படி பேசிக்கொண்டிருக்காங்கோ....
என்னென்ன பேசிராங்கன்னு கொஞ்சம் தெளிவா கேட்போம்..
என்னடா ஆளுக்காளு வர்ராங்க நாங்க தவ்ஹீத் அமைப்புன்னு சொல்லாறங்க ஆனா அவங்க செய்ற தப்ப சொன்னா மட்டும் ஒத்துகிடாமே விவாத அரங்கமே வைத்து தன்னை நியாயப்படுத்த முயற்சிக்கிறாங்க இதான் இவங்க கொள்கையா? மெளுலூது ஓதக்கூடாத செயல் என்பதை மக்கள் பல பேர் உணர்ந்து மெளலூது ஒதாத நிலைகள் மாறி வருவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் ஒழிப்போம் நாங்கள் தான் என்ற வீம்பைக் கொண்டு திரும்பவும் தவறை தெளிவாக உணர்ந்தவங்களையயல்லாம் தங்களுடைய வீம்பான வார்த்தைகளாலும், தங்களுடைய சுயநலத்திற்காகவும் எதை எந்த நேரத்தில் எப்படி பேசுவது என்று தெரியாமல் பேசி, எதிலாவது தாம் அல்லது வேறு யாரையாவது சிக்க வைப்பது போன்ற யோசினைகளை மட்டும் சரியாக செய்து வருகின்றார்கள். இப்பவெல்லாம் ஒவ்வொரு அமைப்பிலும் இந்த சேவைகள் செய்தால் இத்தனை பாய்ண்ட்ஸாம். பாய்ண்ட்ஸ் கொண்டே அவர்களின் பதிவிகள் உயர்த்தப்படுதாம். இப்ப நடந்த ஹந்துVரி பிரச்சனைகளில் கூடு செய்தவர் கூட தவ்ஹீத் கொள்கையை கூறும் கொள்கைவாதிகளின் அங்கத்தினராம். பெயருக்காக செய்ய துடிக்கும் செயல்கள்தான் அதிகம் அதிகம் இன்று. ஆக இந்த சேவையின் எண்ணங்களை அல்லாஹ் மட்டுமே அறிவான்.
தவ்ஹீத்வாதிகளுக்கு அன்பான கவனத்திற்கு : நமது TNTJபள்ளியில் தொழுகைகள் சிறப்பாக நடந்துவருகிறது. ஆனால் இந்த பள்ளிவாசலில் வைக்கப்படும் தொழுகை நேரங்களில் ஒலிப்பெருக்கி அதிக சத்தத்துடன் தொழுகை நடைபெறுவதால் மிக நெருக்கத்தில் இருக்கும் மதரஸா பள்ளிவாசலில் நடைபெறும் தொழுçக்கு பெரும் இடையூறாக இருக்கிறது. இதனை சென்ற நோன்பு நேரத்தில் பல முறை அந்த நிர்வாகத்தில் உள்ள உறுப்பினர்களிடையே கூறியும் கூட இந்த இடையூறுகள் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. TNTJ பள்ளியில் தொழுகைகள் சிறப்பாக நடக்கிறது அல்ஹம்துலில்லாஹ். ஆனால் மிக நெருக்கத்தில் இருக்கும் பள்ளியில் தொழுபவர்களுக்கு இடையூறில்லாமல் இருக்க முயற்சிக்கலாமே.
நன்மையான விசயத்தை ஏவி நாம் தவ்ஹீத்வாதிகள் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்திக்கொள்வோமாக!

Friday, June 1, 2012

பான் கார்டின் முக்கியத்துவம்



நம்மில் பலரிடமும் பான் கார்ட் உள்ளது (Permanent Account Number-PAN). ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. பான் கார்ட் பற்றிய சில விளக்கங்கள் இதோ...

பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை. இந்த அட்டை கோரி விண்ணப்பித்து இதைப் பெறலாம். சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.

ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான் கார்ட் உதவுகிறது.

பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் AFZPK7190K என்று வைத்துக் கொள்வோம்.

முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.

“P” என்றால் அது தனிப்பட்ட நபருடையது. “F” என்றால் Firm, “C” என்றால் Company, “T” என்றால் டிரஸ்ட் (அறக்கட்டளையுடையது) என்று பொருள்.

5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும்.

அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.

பான் கார்ட் வைத்திருப்பது கட்டாயமா?

ஆமாம். பான் கார்ட் மிக மிக அவசியமானதே. வங்கியில் பணப் பரிமாற்றத்துக்கும், வருமான வரித்துறைக்கு நமது கணக்குகளை சமர்பிக்கவும் இது கட்டாயமாகும்.

எப்படி இதைப் பெறுவது?

வருமான வரித்துறையின் Form 49 விண்ணப்பத்தில் இதைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தை www.incometaxindia.gov.in, www.utiisl.co.in or tin-nsdl.com ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம்.

உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற
https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையத்தளத்தை நாடலாம்.

இந்திய குடிமகன்கள் தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.

1. பள்ளி டிசி
2. பிளஸ் டூ சான்றிதழ்
3. கல்லூரி் சான்றிதழ்
4. வங்கிக் கணக்கு விவரம்
5. கிரடிட் கார்ட் ஸ்டேட்மென்ட்
6. வாட்டர் பில்
7. ரேசன் கார்ட்
8. வீட்டு வரி ரசீது
9. பாஸ்போர்ட்
10. வாக்காளர் அட்டை
11. ஓட்டுனர் உரிமம்
12. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்

அதே போல விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.

1. மின் கட்டண ரசீது
2. தொலைபேசி கட்டண ரசீது
3. வங்கிக் கணக்கு விவரம்
4. வீட்டு வாடகை ரசீது
5. பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்
6. பாஸ்போர்ட்
7. வாக்காளர் அடையாள அட்டை
8. வீட்டு வரி ரசீது
9. ஓட்டுனர் உரிமம்
10. ரேசன் கார்டு
11. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்

விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை.
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.