சச்சின் டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா' வழங்க வேண்டும் என்ற அவரது ரசிகர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
மேலும், அவருக்கு முன்பாக, ஹாக்கி விளையாட்டின் சகாப்தம் எனப் போற்றப்படும் தயான் சந்த், இந்த உயரிய கெளரவத்தை விளையாட்டுத் துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக பெறவும் வாய்ப்புள்ளது.
பாரத ரத்னா விருதுகளுக்குத் தகுதிக்கான விதிமுறைகளை மத்திய அரசு திருத்தி அமைத்துள்ளது. இனி, 'தனிமனித பெருமுயற்சிகள் கொண்ட எந்தத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும்', அவர்களது சேவையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் என விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளது. இதில், விளையாட்டுத் துறையும் அடங்கும்.
இதுவரை கலை, இலக்கியம், அறிவியல், மக்கள் சேவை ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களுக்கு மட்டுமே பாரத ரத்னா விருதுக்கு தகுதி பெற்றவர்களாக இருந்தனர்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ள விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான், "விளையாட்டு வீரருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் நாள், இந்திய விளையாட்டுத் துறைக்கே மிக மிகச் சிறந்த தினம்," என்று கூறியுள்ளார்.
மேலும், "எனது தனிப்பட்ட கருத்தின்படி, மூத்த ஹாக்கி வீரர் தயான் சந்த், ரன் எந்திரம் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்," என்று அஜய் மக்கான் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், அவருக்கு முன்பாக, ஹாக்கி விளையாட்டின் சகாப்தம் எனப் போற்றப்படும் தயான் சந்த், இந்த உயரிய கெளரவத்தை விளையாட்டுத் துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக பெறவும் வாய்ப்புள்ளது.
பாரத ரத்னா விருதுகளுக்குத் தகுதிக்கான விதிமுறைகளை மத்திய அரசு திருத்தி அமைத்துள்ளது. இனி, 'தனிமனித பெருமுயற்சிகள் கொண்ட எந்தத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும்', அவர்களது சேவையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் என விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளது. இதில், விளையாட்டுத் துறையும் அடங்கும்.
இதுவரை கலை, இலக்கியம், அறிவியல், மக்கள் சேவை ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களுக்கு மட்டுமே பாரத ரத்னா விருதுக்கு தகுதி பெற்றவர்களாக இருந்தனர்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ள விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான், "விளையாட்டு வீரருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் நாள், இந்திய விளையாட்டுத் துறைக்கே மிக மிகச் சிறந்த தினம்," என்று கூறியுள்ளார்.
மேலும், "எனது தனிப்பட்ட கருத்தின்படி, மூத்த ஹாக்கி வீரர் தயான் சந்த், ரன் எந்திரம் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்," என்று அஜய் மக்கான் கருத்து தெரிவித்துள்ளார்.




