இதன் மூலம் செக்கடி, ஆலடி, மன்னப்பம் ஆகிய குளங்கள் நிரம்பி வருகின்றன். இந்நீர் வரத்து இன்னும் ஒரு வாரத்திற்கு நீடித்தால் மேற்குறிப்பிட்ட அனைத்துக்குளங்களும் முழுமையாக நிரம்பிவிடும்.
இன்று பகல் தகவலின் படி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


