அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Showing posts with label குளம். Show all posts
Showing posts with label குளம். Show all posts

Wednesday, November 16, 2011

குளங்கள் நிரம்புகின்றன!

சமீபத்தில் தமிழகத்தில் பரவலாக பெய்த வடகிழக்கு பருவ மழையினால் பல ஆறுகள் நிரம்பி வழிகின்றன. தஞ்சை மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்கியது, இதையடுத்து நம் ஊர் குளங்களை நிரப்பும் CMP வாய்க்கால்களிலும் நீர் வரத்து வந்து கொண்டிருக்கின்றது.

இதன் மூலம் செக்கடி, ஆலடி, மன்னப்பம் ஆகிய குளங்கள் நிரம்பி வருகின்றன். இந்நீர் வரத்து இன்னும் ஒரு வாரத்திற்கு நீடித்தால் மேற்குறிப்பிட்ட அனைத்துக்குளங்களும் முழுமையாக நிரம்பிவிடும்.

இன்று பகல் தகவலின் படி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.