அஸ்ஸலாமு அலைக்கும்.
கீழ்காணும் விஷயம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சற்று கவனமாக படித்து தங்கள் மேலான கருத்துக்களை பதிவதோடு, தொடர்ந்தாற்போல் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது நம்மீதுள்ள சமுதாயக் கடமையாக உள்ளது.
அதிரை மக்கள் பல துறைகளில் நன்கு மேம்பட்டு வருகின்றனர். குறிப்பாக,மாணவ-மாணவியர் அதிக ஈடுபாட்டுடன் கல்வி கற்று, அவரவர்களின் துறைகளில் வெற்றிபெற்று வருகின்றனர். நமதூரிலுள்ள பொது பயன்பாடுகள் மற்றும் வசதிவாய்ப்புகள் குறித்த புள்ளிவிபரம்:

1) பள்ளிவாசல்கள் = 35 (ஏறக்குறைய)
2) குர்ஆன் மதரசாக்கள் = 3
3) பள்ளிகூடங்கள் =8
4) கலைக்கல்லூரி=1
5) மருத்துவ மணைகள்=5
6) தேசிய வங்கிகள்=5
7) ATM மையங்கள்=4
8) குளங்கள்=10
9) ரயில்வே நிலையம் =1
10) வானிலை ஆய்வுமையம்=1
11) தபால் நிலையம்=1
12) பெட்ரோல் பங்க்=2
13) கேஸ் ஸ்டேஷன்=1
14) போலீஸ் ஸ்டேஷன்=1
15) முஹல்லா சங்கங்கள்=7
போன்றவற்றுடன் சொல்லப்படாத மேலும் சில வசதிகள் உள்ளன. மக்கள் தொகை ஏறத்தாழ 35,000 பேர்கள். மேற்சொன்ன எல்லா வசதிகளும் நம் தேவைக்கு போதுமானது. ஆனால், மருத்துவ வசதி மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளதா? என்றால் , இல்லை என்பதே யதார்த்த உண்மை.
கடந்த 23 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ஷிஃபா மருத்துவமனை ஆரம்ப காலத்திலும், அதன் பின்னரும் மக்களுக்கு மருத்துவ சேவைகளை ஆற்றி வந்ததை யாரும் மறுப்பதற்கில்லை. சிலகுறைபாடுகள் ஏற்பட்டதையும் நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். சேவையில் குறைபாடு ஏற்படக் காரணம் பல இருப்பினும் பொதுவான காரணம் என்வென்று ஆராய்ந்தால், மருத்துவர்கள் அதிரைபோன்ற பின்தங்கிய நகர்புறங்களில் பணியாற்ற முன்வருவதில்லை. தங்கள் குழந்தைகளை நகரங்களில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர்.
அடுத்த காரணம், நமது மக்களிடம் வெளிவூர் சென்றுதான் தரமான வைத்தியம் பார்க்க முடியும் என்ற மனப்பான்மையும் உள்ளது. மேலும், மற்ற வேலைகளுக்காகவும்,பொழுது போக்கிற்காகவும் பட்டுகோட்டை, தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு சென்று விடுகின்றனர். ஆனால், அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படும்போது ஷிஃபா மருத்துவமனையை நாடுகின்றனர்.அத்தகைய தருணங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) வசதி இல்லாததாலும், நல்ல மருத்துவர் கிடைக்காததாலும், முதலுதவியைக்கூட கொடுக்க இயலுவதில்லை.
மருத்துவமணை நிர்வாகம் தரப்பில் இதுகுறித்து வினவும்போது, பொதுமக்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு கிடைத்தால்தானே மேற்கண்ட மருத்துவ உதவிகளை கொடுக்க இயலும்! இவற்றை இயக்குதல், பராமரித்தல் ஆகியவற்றுக்கு ஆகும் செலவுகளைக் கூட பெறுமளவுக்கு மக்கள் பயன்படுத்துவதில்லை என்று பதில் கிடைக்கிறது.
இதற்கு என்னதான் தீர்வு? இதோ சில ஆலோசனைகளும், அதற்கான தீர்வுகளும்:
உள்ளூர் மருத்துவர்களின் பங்களிப்புடன் வணிக ரீதியில் புதியதொரு திட்டம் தயாரிக்கபட்டுளது.அதன் விபரம் பின்வருமாறு:
1. அதிரை மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள மருத்துவர்கள் குறைந்தது ரூ.1 லட்சம்வரை முதலீடு செய்வது.
2. அவ்வாறு முதலீடு செய்யும் மருத்துவர்கள் இயக்குனர்களில் (DIRECTOR) ஒருவராக கருதப்படுவார்.
3. ரூ.50 லட்சங்கள் வரை முதலீடுகளைத் திரட்டுவது,
4. வருங்காலங்களில் ரூ.2 கோடி வரை முதலீட்டை அதிகரித்து மருத்துவ சேவைகளை நவீனப்படுத்துவது.
5. மேற்கண்ட முதலீடுகள் மூலம் நவீன அறுவை சிகிச்சைக்கூடம் (Modern Operation Theater), குழந்தைகள் நல மருத்துவம், அவசர / பேறுகால உபகரணங்களை வாங்குவது, பெண்களுக்கான மருத்துவ சேவையை மேம்படுத்துவது, முக்கியமாக நீரிழிவு நோய்க்கான மருத்துவப் பிரிவு ஒன்றை ஏற்படுத்துவது, INTENSIVE CARE UNIT (ICU) அமைப்பது.
6.TELEMEDICINE வசதியை ஏற்படுத்தி அப்போலோ மருத்துவமனை,சங்கர நேத்ராலய போன்ற பிரபல மருத்துவமனைகளுடன் இன்டர்நெட் மூலம் இணைப்பு ஏற்படுத்தி அவசரகால CONSULTATION செய்வது போன்ற பல நவீனரக நலத்திட்டங்களை நடைமுறைபடுத்த முயற்சிகள் மேற்கொள்வது.
இதற்காக, 20/11/11 அன்று இமாம் ஷாஃபி பள்ளியில், ஹாஜி M.S.தாஜுதீன் அவர்களின் முயற்சியுடன் கீழ்க்கண்டவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Dr.அமீன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அரிய பல ஆலோசனைகளை தெரிவித்தார். அதிரையின் சகாப்தத்தில் இதுஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.கடந்த காலங்களில் வர்த்தக ரீதியாக நிர்வாகம் செய்யாத காரணத்தால், இத்துறையை வெற்றிகரமாக மாற்ற இயலாமல் போனது வருத்ததிற்குரிய விசயம். பொது நோக்கத்துடன் சேவை செய்தாலும், அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தை கொடுத்தபின் ஏழை எளியோருக்கு நிச்சயமாக உதவிடலாம். இதற்கென புதியதொரு நிறுவனத்தை உருவாக்கி, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார ( 2 லட்சம் பேர்கள் ) கிராம மக்களுக்கும் மருத்துவ சேவை செய்யலாம்.
இந்த உயரிய திட்டத்திற்கு அதிரை மருத்துவர்கள் முன்வந்து முதலீடு செய்வதற்கும் அவர்களின் மேலான வழிகாட்டுதலின்படி நிர்வாகத்தை நடத்த முடிவு செய்த விசயம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்:
1. ஜனாப். M.S.தாஜுதீன்
2. Dr.முஹமது ஹனீப்
3. Dr.ராஜு
4. Dr.மீராசாஹிப்
5. திருமதி. செல்வ ராணி
6. ஜனாப் சிப்ஹதுல்லாஹ்
7. பேராசிரியர் அப்துல் காதர்
8. ஜனாப் A.S.M.அப்துல் ஹமீது
9. பேராசிரியர் பரக்கத்
10.ஜனாப் S.M. ஷேக் முஹம்மது
11.ஜனாப் அப்துல் ரஜாக்
மேற்கண்ட திட்ட முன்வரைவு (Project Model) அதிரைவாசிகளின் வசதிக்காக இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டால் நமதூருக்கான நலத்திட்டம் இன்ஷா அல்லாஹ் வெற்றிகரமாகச் செயபடுத்த முடியும். இத்திட்டம் குறித்து மேலதிக தகவல் வேண்டுவோர் tajudeen@seapol.comல் தொடர்பு கொள்ளலாம்.




