அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, June 2, 2012

டாக்டர் மகன் சீக்கு, வாத்தியார் மகன் மக்கு பழ(ல) மொழிக்கு பொருந்தும்...


என்னப்பா ரொம்ப டையடா இருக்கு, வெளியிலே பிரியா கொஞ்சம் போய்ட்டு வரலாமுன்னு கிளிம்பி வந்தால் உட்காரும் இடத்தில் எல்லாம் பிரச்சனையாதான் பேசிக்கொண்டேயிருக்கிறாங்க. இந்த வார சூடான பிரச்சனைகள் நம்ம தவ்ஹீத் வாதிகளிடன் தன்மைகளைபப் பற்றிதான் அப்படியிப்படி பேசிக்கொண்டிருக்காங்கோ....
என்னென்ன பேசிராங்கன்னு கொஞ்சம் தெளிவா கேட்போம்..
என்னடா ஆளுக்காளு வர்ராங்க நாங்க தவ்ஹீத் அமைப்புன்னு சொல்லாறங்க ஆனா அவங்க செய்ற தப்ப சொன்னா மட்டும் ஒத்துகிடாமே விவாத அரங்கமே வைத்து தன்னை நியாயப்படுத்த முயற்சிக்கிறாங்க இதான் இவங்க கொள்கையா? மெளுலூது ஓதக்கூடாத செயல் என்பதை மக்கள் பல பேர் உணர்ந்து மெளலூது ஒதாத நிலைகள் மாறி வருவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் ஒழிப்போம் நாங்கள் தான் என்ற வீம்பைக் கொண்டு திரும்பவும் தவறை தெளிவாக உணர்ந்தவங்களையயல்லாம் தங்களுடைய வீம்பான வார்த்தைகளாலும், தங்களுடைய சுயநலத்திற்காகவும் எதை எந்த நேரத்தில் எப்படி பேசுவது என்று தெரியாமல் பேசி, எதிலாவது தாம் அல்லது வேறு யாரையாவது சிக்க வைப்பது போன்ற யோசினைகளை மட்டும் சரியாக செய்து வருகின்றார்கள். இப்பவெல்லாம் ஒவ்வொரு அமைப்பிலும் இந்த சேவைகள் செய்தால் இத்தனை பாய்ண்ட்ஸாம். பாய்ண்ட்ஸ் கொண்டே அவர்களின் பதிவிகள் உயர்த்தப்படுதாம். இப்ப நடந்த ஹந்துVரி பிரச்சனைகளில் கூடு செய்தவர் கூட தவ்ஹீத் கொள்கையை கூறும் கொள்கைவாதிகளின் அங்கத்தினராம். பெயருக்காக செய்ய துடிக்கும் செயல்கள்தான் அதிகம் அதிகம் இன்று. ஆக இந்த சேவையின் எண்ணங்களை அல்லாஹ் மட்டுமே அறிவான்.
தவ்ஹீத்வாதிகளுக்கு அன்பான கவனத்திற்கு : நமது TNTJபள்ளியில் தொழுகைகள் சிறப்பாக நடந்துவருகிறது. ஆனால் இந்த பள்ளிவாசலில் வைக்கப்படும் தொழுகை நேரங்களில் ஒலிப்பெருக்கி அதிக சத்தத்துடன் தொழுகை நடைபெறுவதால் மிக நெருக்கத்தில் இருக்கும் மதரஸா பள்ளிவாசலில் நடைபெறும் தொழுçக்கு பெரும் இடையூறாக இருக்கிறது. இதனை சென்ற நோன்பு நேரத்தில் பல முறை அந்த நிர்வாகத்தில் உள்ள உறுப்பினர்களிடையே கூறியும் கூட இந்த இடையூறுகள் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. TNTJ பள்ளியில் தொழுகைகள் சிறப்பாக நடக்கிறது அல்ஹம்துலில்லாஹ். ஆனால் மிக நெருக்கத்தில் இருக்கும் பள்ளியில் தொழுபவர்களுக்கு இடையூறில்லாமல் இருக்க முயற்சிக்கலாமே.
நன்மையான விசயத்தை ஏவி நாம் தவ்ஹீத்வாதிகள் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்திக்கொள்வோமாக!

1 பின்னூட்டங்கள்:

அதிரை சித்திக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றாக சொன்னீர்கள் ..,

பள்ளிவாசளிலிருந்து மற்றொரு பள்ளிவாசலுக்கு

தொந்தரவா இதை எங்கே போய் நியாயம் கேட்பது ..,?

வீம்பு என்று வந்து விட்டால் வம்புதான் ..சைத்தான் ரெடியாக

இருப்பான் ..ஜாக்கிரதை ..ஈமானை ..காத்துக்கொள்ளுங்கள் .

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.