அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, July 24, 2011

பணி முடிக்கப்படாத நிலையில் ஆபத்தான இரயில்வே கேட்

பாண்டிச்சேரியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் ECR ரோடு புதிதாக கட்டமைக்கும் பணி கடந்த நான்கு வருடமாக நடைபெற்று தற்போது 80 சதவீதம் வேலை நிறைவுற்றுள்ளதை நாமறிவோம். 

இதில் நமதூர் வழியாக செல்லும் பாதையில் இரயில் பாதை அமைந்துள்ள பகுதியில் மட்டும் இன்னும் பணிகள் நிறைவு பெறாமல் இருக்கின்றது. அதிரையில் இருந்து மல்லிப்பட்டினம் செல்வோருக்கு அறிவிப்பு பலகை பெருத்தப்பட்டுள்ளது. ஆனால் மல்லிப்பட்டினத்திலிருந்து வருகை தரும் வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன. 

அப்படி வரும் வாகனங்கள் எந்த வித அறிவிப்புபலகையும் இல்லாத காரணத்தால் நேராக சென்று இரயில்வே கேட் மூடியிருப்பதால் அப்படியே நின்று பின்னர் திரும்பி மாற்றுப்பாதையில் செல்கின்றன. அந்த இடத்தில் ஒரு பத்து நிமிடம் நின்று பார்த்தால் இதுபோன்று நிகழ்வை அடிக்கடி காணமுடிகிறது. 

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுப்பார்களா?

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.