அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, July 14, 2011

அதிரையில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் 3ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்திகள் துவங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஜனவரிமாதம் உப்பு உற்பத்தி துவங்கியது. கடந்த பிப்ரவரி,மார்ச்,ஜூன் மாதங்களில் அதிராம்பட்டினம் பகுதியில் கோடைமழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி பாதித்தது.

கடந்த ஒரு மாதமாக அதிக அளவில் வெயில் அடித்ததால் மீண்டும் உப்பு தீவிர உற்பத்தி துவங்கியது. இந்நிலையில் (11/07/2011) திங்கட்கிழமை அன்று கனமழை பெய்தது. இதனால் உப்பளங்களில் மழைநீர் தேங்கி உற்பத்தி பாதித்தது. இப்போது உப்பளங்களில் தேங்கிய மழைநீரை வடிக்கும் பணியில் உப்பு உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்பு மீண்டும் தீவிர உப்பு உற்பத்தி துவங்கும் என்று அதிராம்பட்டினம் உப்பு உற்பத்தியாளர்கள் அதிரை பிபிசி செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

1 பின்னூட்டங்கள்:

தாஜுதீன் (THAJUDEEN ) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்,

உப்பு உற்பத்தி தொடர்பான செய்தியை பகிரந்தமைக்கு மிக்க நன்றி.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.