அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Wednesday, July 6, 2011

அதிரை-பட்டுக்கோட்டை சாலையில் மீண்டும் சாலை விபத்து

அதிரை - 05 - ஜூன் - 2011 - செவ்வாய்க்கிழமை.

நமதூர் கீழத்தெருவைச்சேர்ந்த சேக்தாவூத் என்பவர் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரையை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். அவரது இருசக்கர வாகனம் எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி பலத்த காயம் ஏற்பட்டு,மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

வாசகர்களே, உயிரோடு விளையாடும் வாகன விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது,கவலை தருகின்றது. கடந்த ஒரு வாரத்திற்குள்ளாக, அதிரை - பட்டுக்கோட்டை சாலையில் இரு வேறு விபத்துகள் நடந்திருப்பது வருத்தம் தருகின்றது.

இந்த விபத்திற்கான காரணம் விரைவில் தெரியவரும் என்றாலும், கவனமின்மை, அதிக வேகம், சாலை விதிகளை மதியாமை ஆகியன பெரும்பாலான விபத்துகளுக்கு பிரதான காரணங்களாக இருக்கின்றன. பத்தாம் வகுப்பு தாண்டியதும் பைக் வேண்டும் எனக் கேட்கும் சிறுவர்களும், என்ன கேட்டாலும் வாங்கி தரும் பெற்றோரும் பெருகி வருவதும், அப்படி வாங்கித் தந்த பின்னர் அவர்களின் மனம் போன போக்கிற்கு செல்ல அனுமதிப்பதும் நமதூரில் அதிகரித்து வருவது மறுக்க இயலாத உண்மை. உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாவிடில், உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாயத்திற்குத் தள்ளப்படுவோம் என்பதை அதிரை BBC வருத்தத்துடன் பதிகின்றது.

எங்கோ படித்ததாக ஞாபகம்.

"உங்கள் குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் வரை அவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள். மீறி அனுமதித்தால் அவர்கள் பெரியவர்கள் ஆகாமலேயே போகக்கூடும்"

4 பின்னூட்டங்கள்:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

வேதனையளிக்கும் செய்தி !

தாஜுதீன் (THAJUDEEN ) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

அதிர்ச்சியான தகவல்..

பலத்த காயமடைந்த சகோதரர் சேக்தாவுத் பரிபூரண் குணமடை எல்லோரும் துஆ செய்வோம்.

வேகம் விவேகமில்லை என்பது வாகன ஓட்டிகளுக்கே முதலில் பொருந்தும்.

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

இளைய தலைமுறையினரின் போக்கு சற்று கவலையளிக்க கூடியதாகவே இருக்கின்றது. யா! அல்லாஹ் பாதுகாப்பாயாக! விபத்துக்குள்ளான சகோதரர் விரைவில் பூரண குணமடைய துஆ செய்வோம்.

ahamed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

may praise the allah to get relief & peace be upon his family...pls be careful to ride the bike n wear helmet always....pls be recite dua when u're leaving from one place to another....ya allah protect us may not happened in future...

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.