அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Thursday, March 22, 2012

அதிரையில் பேருந்தில் தீ விபத்து...

இன்று அதிகாலை (22/03/2012) சென்னையில் இருந்து தொண்டி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து (3 ஸ்டார்) அதிரை வண்டிப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது பேருந்தின் பின் புறத்திலிருந்து தீ பற்ற ஆரம்பித்தது. பின் புறம் வாகனத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் பஸ்ஸை மறித்து விசயத்தை சொன்னவுடன் பேருந்து உடனே நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டது. பெரும் உயிர் சேதம் இறைவன் அருளால் தவிர்க்கப்பட்டது. பின்புறம் ஏற்றப்பட்ட எமஹா பைக்கிலிருந்து ஏற்பட்ட பெட்ரோல் கசிவே தீ விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்தை அறிந்த அதிரையை சேர்ந்த சகோதரர்கள் எறிந்த பொருட்களை சரி செய்தனர் மேலும் பயணிகளை ராஹத் பஸ் மூலம் தொண்டிக்கு அனுப்பி வைத்தனர்.






படங்கள் உதவி : அகமது முகைதின் (பொட்டியப்பா)

6 பின்னூட்டங்கள்:

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

போர்க்கால அடிப்படையில் உதவிய அதிரை சகோதரர்களின் சேவை பாராட்டுக்குரியது.

புக்கிங் ஏஜண்டுகள் சொற்ப காசுகளை வாங்கி கொண்டு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை (Inflammable articles) பேருந்தில் ஏற்றிவிட்டு பயணிகளின் உயிருடன் விளையாடுகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கதக்கது.

Shameed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

இரு சக்கர வாகனங்களை பஸ் மற்றும் ரயிலில் ஏற்றும்போது பெற்றோலை காலி செய்துவிட்டுத்தான் ஏற்றவேண்டும் என்ற சாதாரண நடைமுறை கூட பின்பற்றப்படவில்லை. நல்லவேலை இறைவன் அருளால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

பஸ்சில் உள்ள அனைத்து உயிர்களையும் காப்பாற்றிய அதிரை சகோதரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும்,துஆக்களும்.

பெரிய உயிர் சேதங்களையும்,விலை உயர்ந்த பஸ்சையும் காப்பாற்றிய நல்லுயுர்ந்த அதிரை சகோதரர்கள். இந்த மாதிரியான உங்கள் சமூக சேவை தொடரட்டும்.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

பஸ்சில் உள்ள அனைத்து உயிர்களையும் காப்பாற்றிய அதிரை சகோதரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும்,துஆக்களும்.

பெரிய உயிர் சேதங்களையும்,விலை உயர்ந்த பஸ்சையும் காப்பாற்றிய நல்லுயுர்ந்த அதிரை சகோதரர்கள். இந்த மாதிரியான உங்கள் சமூக சேவை தொடரட்டும்.

M. அப்துர் ரஹ்மான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

Yentha oru Aabathum Indri kaattha
Allahuke pugal anaithum....

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 6

பஸ்ஸில் இருந்த எல்லா உயிர்களையும் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.