அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Monday, September 5, 2011

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவிப்போம்

உலகத்தில் எல்லாவற்றிக்கும் ஒரு நாள் இருப்பது போல் ஆசிரியர் தினமும் சாதாரண தினம் இல்லை.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை தருவது அவன் கற்ற கல்வி மட்டுமே .அப்படிப்பட்ட மிக உயர்ந்த கல்வியை தருவது ஆசிரியர் பணி மட்டுமே .ஆசிரியர் என்பவர் ஏணி போன்றவர் எல்லோரயும் ஏற்றிவிட்டு அந்த ஆசிரியர் ஏணி மட்டும் அந்த இடத்தில இருக்கும் அப்படிப்பட்ட ஆசிரியர் தினம் இன்று "முன்னாள் குடியரசுத் தலைவருமான மறைந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில் அவர்களின் நினைவாக கொண்டாடப்படும் ஆசிரியர் தினம் அன்று நமக்கு பிடித்த அந்த ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிப்போம்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கிய ஆசிரியர் பற்றி இரத்தின சுருக்கமாக பின்னுட்டம் இடவும்.

"ஒரு சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை தருவது சிறந்த கல்வி மட்டுமே அப்படிப்பட்ட நல்ல கல்வி தரும் ஆசிரியர்களுக்கு ஒரு சல்யுட் "

4 பின்னூட்டங்கள்:

adiraidailynews said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும், நமக்கு ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை கற்றுக்கொடுக்கின்றனர் # ஆதலால், இதனால் சகலமானவர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

நல்லாசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !

yasmeen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

HAPPY TEACHER DAY!

Here's special, Thank You...For Making me What I am Today! You made a Wonderful Difference in My Life :)

அதிரை என்.ஷஃபாத் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

ஏக இறைவனுக்கே எல்லா புகழும் உரித்தாகுக.

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பொறியியல் படிப்பிற்கு செல்ல முடியாமலும், பொறியிலல்லாத என்ன படிப்பு படிக்கலாம் என்னும் வகை தெரியாமலும் தவித்த என்னை, நமதூர் காதிர் மொகைதீன் கல்லூரியிலேயே இளங்கலை கணிதம் படிக்கும் படி வழிகாட்டியும், என்னுடைய படிப்பைப் பற்றி என்னிடமும் என் ஆசிரியர்களிடம் விசாரித்து உரிய நேரத்தில் உரிய முறையில் ஆலோசனைகள் வழங்கி எனக்கு உந்து சக்தியாக இருந்த/இருக்கும் என் அன்பிற்குரிய பேராசிரியர் அல்ஹாஜ் M.A அப்துல் காதர் சார் M.A. Mphil CJMC அவர்களுக்கு நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

மேலும், இளங்கலை கணிதம் முடிவடையும் தருணத்தில் எனக்கும் இருந்த மூன்று எதிர்காலத் திட்டங்களையும் (1. இத்தோடு படிப்பை நிறுத்தி விட்டு வெளிநாடு சென்று விடுவது 2. அல்லது படிப்பதானால் முதுகலைத் தமிழ் படிக்க வேண்டும் 3. அல்லது எந்தக் கல்லூரியில் முதுகலைக் கணிணியறிவியல் குறைந்த செலவில் படிக்க முடியுமோ அங்கு படிப்பது) வேண்டாம் என சொல்லி தடுத்து, 'வேறு எங்கோ சென்று படிப்பதை விட, அண்ணா பல்கலைக் கழகத்தில் சென்று படி' என்று வழி அமைத்துக் கொடுத்து, கல்லூரி விடுமுறை நாட்களிலும் கூட எனக்காக அண்ணா பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி கொடுத்து என்னைத் தயார் படுத்திய என் அன்பு மிகு பேராசிரியர் திரு வீர பாண்டியன் சார் Msc. B.Ed., அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்கிக்கொள்கின்றேன்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.