அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, January 19, 2012

அதிரை சி.எம்.பி. லைனில் நேற்று(18/1/2012) தீ விபத்து ....

அதிரை c .m.p லைன் v .k .m ஸ்டோர் அருகே உள்ள ஒரு வீட்டில் மாடியில் இருந்து கூரை திடுரென தீப்பிடித்து மளமளவென   பரவியது . இது பற்றி தகவலறிந்த பொதுமக்களும் அதிரை நகர  பாப்புலர்  ப்ரண்ட் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சேர்ந்த சகோதார்களும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.








இதில் பல பொருள்கள் சேதம் அடைந்தனர்  அந்த தீயை அணைப்பதற்கு மிக வேகமாக ஒரு நண்பர் பைக்கில் போயிருந்தார் அந்த இடைத்தை அடைந்த உடன் பைக்கை போட்டுவிட்டு சற்று நேரம் நின்று பார்த்தார். மற்ற எல்லோரும் தீயை அணைத்துக்கொண்டு இருந்தார்கள் பைக்கில் வந்த நபரை தீயை அணைப்பதற்கு கூப்பிட்டார்கள். அப்பொழுது இவரும் சென்று தீயை அணைக்க போய் விட்டார் அந்த பைக்கில் ஒரு பையில் பணம் இருந்தது பைக் கவரில் மறந்து விட்டு பையை வைத்து விட்டு போய் விட்டார். தீயை அனைத்து விட்டு திரும்பி வந்து பையை பார்க்கிறார் அந்த பையை காண வில்லை. அங்கு உள்ள எல்லோரிடமும் சோதித்து பார்த்தால் யாரிடமும்  ஒன்றும் இல்லை. உதவி செய்ய போன இடத்தில் பணத்தையும் இழந்து மனதையும் இழந்து விட்டார் இதை யாரிடம் போய் சொல்வது கேட்பது.

2 பின்னூட்டங்கள்:

சேக்கனா M. நிஜாம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உதவிசெய்ய வந்து இதேபோல் விபரீதமான அனுபவங்களைப் பெற்றவர்கள் நமதூரில் ஏராளம் !

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ! ஆமின் !

Meerashah Rafia said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பணத்தை இழந்த அந்த சகோதரருக்கும் பொருளை இழந்த அந்த வீட்டினற்கும் அல்லாஹ் சாந்தியையும், சமாதானத்தையும் கொடுப்பானாக..

பணத்தை எடுத்தவன் cmp லேன் வாய்காலில் கிடக்கும் கழிவை திண்டாவது புத்தி வரட்டும்..ச்சீ.. மனுசன்கிற அடையாளமே இல்லாத ஒரு கேடுகெட்ட அந்த நபரை பிடித்தால் அந்த காலத்தில் திருடனை பிடித்து சம்சுல் இசுலாம் சங்கத்தில் கட்டிபோட்டு அடிப்பதைபோல் அடிக்கவேண்டும்..

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.