அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Wednesday, January 25, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பி​ன் ( AAMF ) – பொது அறிவிப்பு !

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) !அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த ( 14-01-2012  )  அஸர் தொழுகைக்குப் பின் மரைக்காயர் பள்ளியில் மொளானா மொளவி அப்துல் காதர் ஆலிம், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் முன்னிலையில், M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற அவசரக் கூட்டத்தில், நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின்  ( AAMF ) சார்பாக வெளி மாநிலத்திலிருந்து மூன்று முஸ்லீம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமிப்பது என்றும் அவர்களுக்கு தங்குவதற்க்காக “ ஹஜரத் சித்திக் ( ரலி ) பள்ளியில் “ அனுமதிப்பது என்றும் மேலும் இவர்களைக் கொண்டு ஒவ்வொரு வாரம் ஒரு பள்ளி என்ற வீதத்தில் நமதூரில் உள்ள ஐந்து பள்ளிகளின் மைய வாடிகளையும் ( கஃப்ர்ஸ்தான் ) சுத்தம் செய்வது என்றும் தீர்மானம் செய்யப்பட்ட இக்கூட்டத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின்  ( AAMF ) நிர்வாகிகள் மற்றும் செயற்க்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்ஆலோசனைகளுக்குப்பின் சகோதரர்கள் முஹம்மது அன்சர், முஹம்மது அப்சர் மற்றும் முஹம்மது மக்சூத் ஆகியோர்கள் பீகார் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்டு தற்சமயம் நமது தக்வா பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்கள்.மேலும் இவர்களை தொடர்பு கொள்ள இலகுவாக நமதூரில் உள்ள அனைத்து மஸ்ஜித்களிலும் அறிவிப்பு செய்யப்படும் ( இன்ஷா அல்லாஹ் ! )இவர்களை தொடர்புகொள்ள வேண்டிய அலைப்பேசி எண்கள் :முஹம்மது அன்சர் : 7418808648,  9750197162 

இப்படிக்கு, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF )அதிராம்பட்டினம்


 

3 பின்னூட்டங்கள்:

சேக்கனா M. நிஜாம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு, கடந்த மூன்று மாதங்களாக கடும் முயற்சி செய்து இப்பிரச்சனைகளை அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் கவனத்திற்கு ( AAMF )கொண்டு வந்ததோடு அல்லாமல் இம்மூன்று சகோதரர்களையும் பிகார் மாநிலத்திலிருந்து நமதூருக்கு அழைத்து வந்த சகோ. B. உமர் தம்பி ( செயலாளர் - மஸ்ஜித் தக்வா பள்ளி )அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு நன்மைகள் பல வழங்குவானாக ! ஆமின் !

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

எது நடந்தாலும் நல்லது நடக்கட்டும் B.உமர்தம்பி காக்கா அவர்களுக்கு இந்த முழு முயற்சி எடுத்தமைக்கு வாழ்த்துக்கள். பீகார் மாநிலத்திலிருந்து நம் அதிரை நகருக்கு கொண்டு வந்து சேர்த்துயிருக்கிரார்கள் மிக சந்தோசமான விஷயம்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

அல்ஹம்துலில்லாஹ் இது ஒரு சிறந்த முயற்சி....

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.