அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Friday, December 16, 2011

'பாரத ரத்னா' விதிகளில் திருத்தம் !?

சச்சின் டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா' வழங்க வேண்டும் என்ற அவரது ரசிகர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

மேலும், அவருக்கு முன்பாக, ஹாக்கி விளையாட்டின் சகாப்தம் எனப் போற்றப்படும்  தயான் சந்த், இந்த உயரிய கெளரவத்தை விளையாட்டுத் துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக பெறவும் வாய்ப்புள்ளது.

பாரத ரத்னா விருதுகளுக்குத் தகுதிக்கான விதிமுறைகளை மத்திய அரசு திருத்தி அமைத்துள்ளது. இனி, 'தனிமனித பெருமுயற்சிகள் கொண்ட எந்தத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும்', அவர்களது சேவையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் என விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளது. இதில், விளையாட்டுத் துறையும் அடங்கும்.

இதுவரை கலை, இலக்கியம், அறிவியல், மக்கள் சேவை ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களுக்கு மட்டுமே பாரத ரத்னா விருதுக்கு தகுதி பெற்றவர்களாக இருந்தனர்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ள விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான், "விளையாட்டு வீரருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் நாள், இந்திய விளையாட்டுத் துறைக்கே மிக மிகச் சிறந்த தினம்," என்று கூறியுள்ளார்.

மேலும், "எனது தனிப்பட்ட கருத்தின்படி, மூத்த ஹாக்கி வீரர் தயான் சந்த், ரன் எந்திரம் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்," என்று அஜய் மக்கான் கருத்து தெரிவித்துள்ளார்.

2 பின்னூட்டங்கள்:

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

அஸ்ஸலாமு அலைக்கும்
ஆமாம். இவர் தன்னலம் பாராமல் நாட்டுக்காக பாடுபட்டு தனக்கு என்று எதுவும் சேர்க்காமல் விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்? இதனால் ஏழை மக்களின் பசி பட்டினி தீர்ந்து விடுமென்றால் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டியதுதான்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

விளையாட்டு ஒன்றும் வீரசாகசமல்ல...... ஒரு அறிஞன் சொன்னது போல் 11 முட்டாள்களின் விளையாட்டை பல ஆயிரம் முட்டாள்கள் ரசிப்பது ஒரு கோமாளித்தனம்.... இது ஒரு புறம் இருக்கட்டும் காவி சிந்தனை படிந்த இந்த வீரன் ஒவ்வொரு முறை தன்னுடைய சாதனையின்போதும் பால் தாக்கரேயை சந்தித்து தன்னுடைய காவி சிந்தனையை வெளிப்படுத்துபவர் தான் இந்த வீரர்...? இவரை முஸ்லிம்கள் மதிப்பது முட்டாள்தனம்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.