அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Monday, December 19, 2011

பிள்ளைச் செல்வம் !


ஏழை எளியோர்கள், நடுத்தர மற்றும் உயர் வர்க்கத்தினர் அது யாராக இருந்தாலும் சரி “ பிள்ளைச் செல்வம் “ என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. இச்செல்வம் வேண்டி வேண்டாத வழிபாடுகள் இல்லை ! போகாத வழிபாட்டுத்தலங்கள் இல்லை !! செல்லாத மருத்துவமனைகள் இல்லை !!! சாப்பிடதா நாட்டு மருந்துகள் இல்லை !!! இன்னும் என்னவெல்லாம் செய்தும்.............?

எங்கெல்லாம் குடிநீர் ஆதாரங்கள் ரசாயனக் கழிவுகளால் மாசுபட்டுள்ளனவோ அந்தப் பகுதிகளில்தான் குழந்தையின்மை பாதிப்புகள் அதிகம் என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. மருத்துவத் தொழில்நுட்பம் நன்கு வளர்ந்த இக்காலக்கட்டத்தில், திருமணம் நடைபெற்ற அடுத்த சில மாதங்களுக்கிடையே குழந்தை வாய்ப்பு தள்ளிச்சென்றால் உடனடியாக பெற்றோரே தம்பதிகளை மகப்பேறு சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். நமது பெற்றோர்களிடம் பொறுமை இல்லை.

மகப்பேறு எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டதோ அதே அளவுக்கு குழந்தையின்மையும் அதிகரித்துவிட்டது. பிள்ளைச் செல்வத்துக்கான இந்த ஆர்வத்தை, பதற்றத்தை, வேதனையை மருத்துவத் துறையில் உள்ள சிலர் காசாக்கிடப் பார்க்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கருப்பை சுத்திகரித்தல் தொடங்கி, விந்து உயிர் அணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மாத்திரை, சினை முட்டைக்கு மாத்திரைகள் என்று பல வழிகளில் இந்த நோயாளிகள் செலவழிக்க நேரிடுகிறது.

மருத்துவத்தின்படி இவை யாவும் அவசியமான, நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்தச் சிகிச்சைக்கான கட்டணங்களுக்கும், அவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளுக்கும் அதிக விலை கொடுத்தாக வேண்டும். இந்த மாத்திரைகளின் உற்பத்திச் செலவுக்கும் விற்பனை விலைக்கும் உள்ள இடைவெளி மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளி. அந்த அளவுக்கு லாபம் பார்க்கின்றன மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்.

செயற்கை கருவூட்டல் முறையை நாடுவோர் அதிகரிக்கும் வேளையில், தற்போது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விழைவோரும் அதிகரித்து வருகின்றனர். செயற்கை கருவூட்டல் முறை தோல்வியுறும் பெண்களுக்கு இப்போது மருத்துவதுறையால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது.

சகோதரர்களே ! வாடகைத் தாய் மூலம் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது இஸ்லாத்தில் கடுமையாக விளக்கி வைக்கப்பட்டுள்ளது ( ஹராம் ).

சகோதர, சகோதரிகளே ! அல்லாஹ் மீது நம்பிக்கை வையுங்கள், ஒருவொருகொருவர் குறை கூர்வதை தவிர்த்து, தாழ்வுமனப்பான்மையைக் கைவிடுங்கள், பொறுமையை கடைபிடியுங்கள் மனச்சோர்வை நீக்கிவிட்டு முயற்சி செய்யுங்கள் நிச்சயமாக பிள்ளைச்செல்வத்தை நாம் அடைந்தே தீர்வோம் !

குறிப்பு : இன்று காலையில் வெளிவந்த ஒரு நாளிதழின் தலையங்கத்தை தற்செயலாக படிக்க நேர்ந்தது அதில் எற்பட்ட inspiration இப் பதிவை ஏற்படுத்த நேரிட்டது.

2 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

யா அல்லாஹ் அனைவருக்கும் இக்குழந்தை பாக்கியத்தை அருள்வாயாக..... வேறு எந்த குறை இருப்பினும் அவையனைத்தையும் விட மிகைத்தது குழந்தையின்மைதான்..... அல்லாஹ் தான் நாடியோருக்கு குழந்தையை கொடுத்தும் / எடுத்தும் சோதிக்கிறான்.....நிச்சயமாக விதியை வெல்லும் சக்தி பிரார்த்தனைக்கு மட்டும் உண்டு.....சிந்திப்பவர்களுக்கு இதில் சான்று இருக்கிறது.

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ் தன் திருமறையில் சிலருக்கு ஆண்குழந்தை களையும் சிலருக்கு பெண்குழந்தைகளையும் சிலருக்கு இரண்டையும் கலந்தும் சிலருக்கு எதுவுமே இல்லாமலும் ஆக்கி உள்ளதாக கூறுகிறான், எது எப்படி இருந்தாலும் நாம் அல்லாஹ்வின் நாட்டத்தை பொருந்தி கொள்ள வேண்டும்.

“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 49:13)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ (ரலி), ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.