அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, December 26, 2011

தவ்ஹீதின் பெயரால் இயங்கும் இயக்கங்களும் அதன் உண்மை நிலைப்பாடுகளும்



தவ்ஹீதின் பெயரில் இயங்கும் இயக்கங்களும் அதன் உண்மை நிலைப்பாடுகளும் பற்றி நாம் பல முறை , பல இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளோம் . இந்த போலித் தவ்ஹீத் இயக்கங்கள் பற்றி ஷேக் அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி ஹபிதஹுல்லாஹ் அவர்கள் 1998 முதல் கூறி வருகிறார். அந்த வகையில், நாம் எமது முஸ்லிம் சமூகத்திற்கு எச்சரிப்பது என்ன வென்றால், இந்த போலித் தவ்ஹீத் இயக்கங்கள் 
மார்க்கத்தை வளர்க்கவோ , தவ்ஹீதை வளர்க்கவோ, சுன்னாவை அடையாளம் காட்டி வளர்க்கவோ வந்த இயக்கங்கள் இல்லை, மாற்றமாக அல்லாஹ்வின் நம்பிக்கையில் சந்தேகங்களை உண்டாக்கி , அல்குர் ஆனில் சந்தேகங்களை உருவாக்கி , ஆதாரப் பூர்வமான நபி மொழிகளை முரண்பாடுகளாக சித்தரித்து அவைகளை மறுத்து , நபி வழியையும் நபி மொழியையும் கேள்விக் குறியாக்கி, இந்த நபி வழியையும் , அல்குர் ஆணையும் இந்த உம்மத்தின் கைகளுக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த அருமை சஹாபாக்களை குறை பேசி திரியும் கூட்டங்களாக தான் இன்று வரை இருந்துக் கொண்டிருக்கின்றன ? இவர்களின் வலையில் இன்று பல மக்கள் வீழ்ந்து அழிந்துக் கொண்டிருக்கிறார்கள். அருமை சஹாபாக்களின் வழிமுறைகளை யாரெல்லாம் தவிர்ந்துக் கொண்டார்களோ ,அந்த மக்கள் இவர்களது வலையில் சிக்கி சிரழிந்து கொண்டிருக்கிறார்கள். நாங்களும் இந்த சலபுஸ் சாலிஹீன்களின் வழி முறைகளை தவிர்ந்துக் கொண்டிருதோமேயானால், நாமும் இந்த மௌட்டீக கூட்டங்களின் வலையில் வீழ்ந்து இருப்போம் என்பதில் சந்தேகமில்லை.
அல்லாஹ்வின் பரக்கத்தால் நாம் இந்த சலபுஸ் சாலிஹீன்களின் வழி முறையில் மார்க்கத்தை பெற்றுக் கொண்ட காரணத்தினால் புரிந்து விட்டோம், அதாவது, இவர்களது கொள்கை இஸ்லாமிய கொள்கை இல்லை, அல்குர் ஆன் பற்றிய இவர்களது கொள்கை இஸ்லாமிய கொள்கை இல்லை., இவர்களது வழி முறைகள் , இஸ்லாமிய வழி முறைகள் இல்லை, இவர்களது சட்டங்கள் , இஸ்லாமிய சட்டங்கள் இல்லை , இவர்களது ஆடைகள் இஸ்லாமிய ஆடைகள் இல்லை , இவர்களுடைய பழக்க வழக்கங்கள் இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் இல்லை என்பதாக அறிந்து விட்டோம். மாறாக , எமது கொள்கை சஹாபாக்கள் கொண்டிருந்த கொள்கை, எங்கள் மார்க்கம், சஹாபாக்கள் பின்பற்றிய மார்க்கம், எங்கள் வழி முறை சஹாபாக்களின் வழி முறை, எங்கள் சட்டங்கள் சஹாபாக்கள் பின்பற்றிய சட்டங்கள், எங்கள் ஆடைகள் சஹாபாக்கள் அணிந்த ஆடைகள் , எங்கள் பழக்க வழக்கங்கள் அருமை சஹாபாக்கள் பின்பற்றிய பழக்க வழக்கங்கள். மொத்தத்தில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எப்படி அருமை சஹாபாக்கள் அணு அணு வாக பின்பற்றி செயல்பட்டார்களோ , அந்த கொள்கையும் மார்க்கமும் தான் எமது மார்க்கம். எமது ஆடையாகட்டும், எமது குடும்ப வாழ்க்கை ஆகட்டும், எமது சொந்த பிரச்சனைகள் ஆகட்டும் அனைத்தும் சஹாபாக்கள் பின்பற்றி செயல்பட்ட வழிமுறையில் அன்றி நாம் செயல் படுவதில்லை. சுருங்க சொன்னால் , நபி வழி அன்றி எமக்கு ஒருவழி இல்லை. எனவே, இந்த நேரான வழி முறையை தவிர்ந்துக் கொண்ட , வழி கெட்ட இந்த தவ்ஹீத் ஜமாஅத் கூட்டங்களை வேரோடு கழற்றி விடுவது உண்மையான ஒவ்வொரு தவ்ஹீத் வாதியின் கடமையாகும்.
ஏனெனில், இவர்கள் வந்துவிட்டார்கள், அல்லாஹ் ஏழு வானத்தின் மேலிருந்து, அருமை சஹாபாக்களை புகழ்ந்து, நான் அவர்களை பொருந்திக் கொண்டேன், அவர்களும் என்னை பொருந்திக் கொண்டார்கள் என்று கூறிய பின்பும் அந்த அருமை சஹாபாக்களை ஏளனம் செய்வதையும், குறை கூறுவதையும், திட்டி திரிவதையும் அழைப்பு பனியின் வழி முறையாக எடுத்து சொல்வதற்கு. வந்து விட்டார்கள், நபி மொழியையும் , நபி வழியையும் மறுப்பதற்கு வந்து விட்டார்கள். எனவே, இந்த கும்பலை சும்மா விட்டு விட முடியுமா ? உண்மையான தவ்ஹீத் வாதியின் முன்னாள் இவர்கள் மிஞ்சுவார்களா ? 
இதனால் தான் நாம் கூறுகிறோம் , இவர்கள் இந்த காலக்கட்டத்தின் " ஸனாதிகா ". ஸின்தீக் என்றால், மார்க்கத்திற்கு புறம்பாக பேசுபவர்கள், அதாவது, எந்த விதமான அளவுகோல்களும் இல்லாமல், மார்க்கத்தில் தன் இஷ்டப்படி , தனது புத்திக்கு தோன்றியதை எல்லாம் தர்க்கங்களை வாதங்களை அடிப்படியாக கொண்டு செயல் படுவதாகும். 
இதனை இந்த தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கும் அனைத்து இயக்கங்களிலும் காணலாம். அல்குர் ஆனை தனக்கு தேவை மாதிரி திருப்பி பேசுவான், சுன்னாவை தனக்கு தேவை மாதிரி திருப்பி பேசுவான், மறுப்பான். இவ்வாறு இவர்கள் தவ்ஹீதின் பெயரில் செய்யும் அக்கிரமங்களை சொல்வது என்றால், ஒரு உரையில், ஒரு சில பக்கங்களில் சொல்லி முடிக்க முடியாது. அந்தளவுக்கு இவர்களது அக்கிரமங்கள் மார்க்கத்தின் பெயரில் இருக்கிறது. 
தவ்ஹீத் என்றால் அல்லாஹ்வை தனிப்பட்டதாக வணங்குவதாகும். அவனை தனிப்பட்டதாக வணங்க, அவன் தனிப்பட்டவன் , அவனுக்கு ஒப்பாக , நிகராக யாருமில்லை என்பதை தெளிவாக தெரிந்து இருக்க வேண்டும். அதற்கு அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் சரிவர அறிந்து இருக்க வேண்டும். அவனது செயல்பாடுகளை அவன் மட்டுமே செய்யக்கூடியவன் என்பதை அறிந்து இருக்க வேண்டும். அடிமைகளின் செயல் பாடுகளை அவனுக்கு ஒப்பாக்க முடியாது என்பதை அறிந்து இருக்க வேண்டும். மாற்றமாக ஒப்பாக்கி விட்டீர்கள் என்றால், அல்லாஹ்வை தனித்ததாக வணங்கியதாக அமையாது. அல்லாஹ்வை ஏகத்துவ படுத்தியதாக அமையாது. எனவே, அவன் தனிப்பட்டவன் என்பதை 
அறிய அவனது பெயர்களை பண்புகளை அவன் அல்குர் ஆனில் சுன்னாவில் வர்ணித்தவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் , அவர்களுக்கு அல்லாஹ் பற்றிய ஈமானில் சர்ச்சையாகி விடும். அல்லாஹ் அவனை பற்றி வர்ணித்தவைகளுக்கு இவர்கள் மாற்றுக் கருத்து கொடுக்க வாரார்கள் என்றால் இவர்கள் அல்லாஹ்வை விட அல்லாஹ்வை பற்றி அறிந்தவர்கள் என்று சொல்ல வருகிறார்கள் என்று தான் அர்த்தம் . 
ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான், சொல்வதில் அவன் ஆகவும் உண்மையானவன். வார்த்தைகளில் சிறப்பானது அவனுடைய வார்த்தை என்று. இதன் பிறகும் , அல்லாஹ் அவனை பற்றி வர்ணித்தவைகளுக்கு மாற்றுக் கருத்து கொடுக்க வருகிறார்கள் என்றால் , அல்லாஹ் சொல்வதில் மேலானவன், வார்த்தைகளில் அவனது வார்த்தை சிறப்பானது என்பதை ஏற்றுக் கொள்ள வில்லை என்று தான் அர்த்தம். அல்லாஹ் 
்தம். இவ்வாறு அல்லாஹ் அவனை பற்றி சொன்ன பெயர்களை பண்புகளை ஏற்றுக் கொள்ளாமல், இது அல்லாஹ்வுக்கு சாத்தியம் இல்லை, இது அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது என்று இந்த கும்பல்கள் சொல்கிறார்கள் என்றால் , இது தவ்ஹீதா ? இது தான் அல்லாஹ்வை பற்றிய நம்பிக்கையா ? இது இஸ்லாமிய கொள்கையா ? இதற்கு பெயர் தவ்ஹீத் ஜமாஅத் ஆ ?  இப்படியான மௌட்டீக கூட்டம் வெட்கமும் கூச்சமும் இல்லாமல் , இது எனது ஆராய்ச்சி , இது எனது விளக்கம், எனது ஆராய்ச்சியின் அடிப்படையில் , எனது விளக்கத்தின் அடிப்படையில் இந்த பண்பு அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது என்று சொல்கிறார்கள் என்று சொன்னால், இவர்கள் அறிந்ஜர்கள் ஆகிவிட்டார்கள், சொல்வதில் உண்மையாளர் ஆகிவிட்டார்கள் ஆனால் அல்லாஹ் மடத்தனமாக சொல
சிறப்பாக சொல்லவில்லை என்று தான் சொல்ல வருகிறார்கள். அல்லாஹ் அவனது பண்பை பற்றி சொன்ன பிறகும். இது அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது , அல்லாஹ் இவ்வாறு செய்ய முடியாது என்று சொல்ல வருகிறார்கள் என்றால் , அல்லாஹ்வுக்கு சிறப்பாக சொல்ல தெரியாமல் போய்விட்டது , இவர்கள் வந்து விட்டார்கள் சரியாகவும் சிறப்பாகவும் அல்லாஹ்வை பற்றி சொல்வதற்கு என்று தான் அர்
த்லிவிட்டான், பொய்யன் ஆகிவிட்டான் ( நவூதுபில்லாஹ் ) என்று தான் மறைமுகமாக சொல்ல வருகிறார்கள். இப்படியான விடயங்களை இவர்கள் சொல்ல , மக்களும் கேட்டு பின்னால் செல்கிறார்கள் என்று சொன்னால், மக்களின் ஈமான் என்னவாகிவிட்டது ?, புத்தி என்னவாகிவிட்டது ? , மக்கள் எங்கே போய்கொண்டிருக்கிறார்கள் ? 
ய்மையானவன். தூதர்கள் மீது ஸலாம் உண்டாவதாக . அகிலத்தாரின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் " என்று.
அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். இது தான் வரலாற்றில் வந்த அனைத்து பித் அத் வாதியின் அடிப்படைகள், அனைத்து வழிகேடர்களின் அடிப்படைகள். இத வழிகேடர்களுக்கு மறுப்பாக தான் அல்லாஹ் சூரத்துல் ஸாபாதில் கூறுகிறான், " இவர்கள் வர்ணிப்பதை விட்டும் உங்களுடைய மேலான இரட்சகன் மிகவும் பரிசுத்தமானவன்,
தூ
இந்த நபிமார்கள், அல்லாஹ்வை பற்றி அல்லாஹ் சொன்னதை தவிர வேறொன்றையும் சொல்லமாட்டார்கள். அல்லாஹ் இறக்கியதை தவிர வேறொன்றையும் சொல்ல மாட்டார்கள். எனவே தான், அந்த தூதர்மார்கள் மீது ஸலாம் உண்டாவதாக. இறக்கியதை இறங்கிய பிரகாரம் சொல்லி விடுவார்கள். அதில் தன் இஷ்டப்படி பேச மாட்டார்கள். எனவே, வஸலாமுன் அலல் முர்சலீன். 



இந்த அடிப்படியில் அல்லாஹ்வின் தூதரை நம்புகிறோம் என்றால், அல்லாஹ்வின் தூதர் சொன்னவைகள் வஹியாகும். அது அல்லாஹ் சுபஹானஹுதாலா குர் ஆனுக்கு விளக்கமாக அவனுடைய தூதருக்கு கொடுத்தது. இப்படி நம்பும் முஸ்லிம்கள் எப்படி , நபி மொழியை அல்குர் ஆனுக்கு முரணாக சுமக்க முடியும் ? இவ்வாறு, நபி மொழி அல்குர் ஆனுக்கு முரண் என்று இந்த கூட்டங்கள் சொல்கிறது என்றால், அல்லாஹ்வின் தூதர் அல்லாஹ்வுக்கு மாற்றமாக பேசுகிறார் என்று சொல்வதாக தான் அர்த்தம். நபி , அல்லாஹ்வுக்கு முரணாக செயல்பட்டார்கள் என்று தான் சொல்ல வருகிறார்கள் என்று அர்த்தம். 



இவர் வஹியை தவிர பேச மாட்டார் என்று அல்லாஹ் சுபஹானஹுதாலா சொல்ல , நாம் இவருக்கு விளக்கத்தை கொடுத்தோம் என்று அல்லாஹ் சொல்ல , இவர்கள் வந்து, நபி அல்லாஹ்வுக்கு முரணாக செயல் பட்டார்கள் என்று சொல்லி பித்தலாட்டம் செய்கிறார்கள். ஒரு முஸ்லிம் சொல்ல முடியுமா ? இவர்கள் கூறுவது போல் நபி மொழி குர் ஆனுக்கு முரண் என்று சொல்வது , 
" திட்டமாக அல்லாஹ்வின் தூதர் இடத்தில் அழகிய முன் மாதிரி இருக்கிறது. யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்தவராக , அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவராக இருக்கிறாரோ அவருக்கு." என்று சொல்லப்பட்ட தூதர் அல்லாஹ்வுக்கு , அல்லாஹ்வின் வார்த்தைக்கு முரணாக செயல் பட்டார்கள் என்று தான் அர்த்தம். அல்லாஹ் பாதுகாப்பானாக. இப்படி சொல்லும் மௌட்டீக கூட்டத்திற்கு பெயர் தவ்ஹீத் ஜமாஅத் !!. இதற்க்கு பெயர் ஏகத்துவம் ?? எப்படி ?? இது எந்தக் கூட்டத்தின் ஏகத்துவம் ? யூத நசாராக்களின் ஏகத்துவமா ? இது இஸ்லாமிய ஏகத்துவமா ? இஸ்லாமிய ஏகத்துவம் இப்படியா ?.
ஆமாம், ஏகத்துவம் என்ற சொல்லை ஆங்கிலத்தில் Monotheism என்று சொல்லி , கிறிஸ்தவர்கள் trinity யையும் அதாவது , பிதா , சுதன் , ஆவி என்று மூன்றையும் ஏகத்துவம் என்று ஆக்கி விட்டான். இவர்களும் தவ்ஹீத் வாதி என்கிறார்கள் என்றாலும் இவர்களிடம் , நீங்கள் தவ்ஹீத் வாதிகள் , பித் அத் செய்யும் இமாம் பின்னால் தொழ மாட்டீர்கள்!, கப்ரு ஸ்தான பள்ளிவாயல்களில் தொழ மாட்டீர்கள் ! இருப்பினும் நீங்கள் பாபரி மஸ்ஜித் எனும் கப்ரு ஸ்தான பள்ளிவாயலுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது, இந்த போலி தவ்ஹீத் வாதிகளின் பதில் என்ன தெரியுமா ? நாங்கள் கோயில்களுக்கும் , சர்ச்சுகளுக்கும் உரிமை என்ற விடயத்திற்காக குரல் கொடுப்போம் என்பதாகும். 
இப்படி ஒரு பதிலை உண்மையான தவ்ஹீத் வாதி சொல்வானா ? உரிமை என்ற ரீதியில் ஒரு முஸ்லிம் பச்சை ஷிர்க்கான கோயிலுக்கும் சர்ச்சுக்கும் ஆதரவாக குரல் கொடுப்பானா ? இந்த ஷிர்க்குகளும் இவர்களுக்கு ஏகத்துவ கொள்கை. உரிமை என்றால் , பள்ளிவாசல், கோயில் , சர்ச் மூன்றும் இவர்களுக்கு ஒன்று. அல்லாஹ்வின் உரிமை எங்கே ? அவனுக்கு கொடுக்க வேண்டிய உரிமையும் , செய்ய வேண்டிய கடமையும் எங்கே ?
சுமந்து இருந்தாலும் ஆச்சரியம் இல்லை. இவர் இந்த பி. ஜெ. கூறுகிறார், அவர் தவ்ஹீதுக்கு தலைவராம். எந்தளவுக்கு என்றால், இலங்கை நாட்டு மக்கள் தொகை அளவுக்கு மக்கள் எங்களை தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தும் ... என்று ஷேக் யஹ்யா சில்மி ஹபிதஹுல்லாஹ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். க
சிலைகளை அழிக்க வந்த மார்க்கம் , தவ்ஹீதை சொல்லும் மார்க்கத்தின் அழைப்பு பணியை சொல்ல வந்த இவர்கள், சிலைகளுக்கு பாதுகாப்பாக ஆதரவு குரல் கொடுப்பேன் என்று தவ்ஹீத் பேசும் நாவால் சொல்கிறார்கள் என்றால் , இவர்கள் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.  நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் எதிரிகளின் சிலை வைக்கும் தவ்ஹீதை இவர்க ள்யிலுக்கும் , சர்ச்சுக்கும் பாதுகாப்பாக அதரவு ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று ஷிர்க்கை முழங்கும் தலைவர். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். 
இவரது பாதை தமிழ் உலகத்தை ஷிர்க்கில் கொண்டு சேர்க்கும் பாதை. ஏனெனில் , எழுத்து மூலமாக வந்துள்ள அல்குர் ஆன் பாதுகாப்பாக வந்து சேரவில்லை என்று சொல்லும் இந்த கூட்டங்கள் எங்கே தவ்ஹீதை தெரியப்போகிறது. அல்லாஹ்வின் பெயர் பண்புகளை , தனது புத்திக்கு படவில்லை என்று மறுக்கும் , திரிக்கும் இந்த கூட்டங்கள் எங்கே தவ்ஹீதை அறிந்திருக்க போகிறது ? அல்லாஹ் அவனை பற்றி அல்குர் ஆனில் வர்ணித்தவைகளையும், நபி சல்லல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸில் வர்ணித்தவைகளையும் , படைப்பினங்களுடன் ஒப்பு ஆக்காமல் , மாற்று கருத்து கொடுக்காமல், மறுக்காமல், எப்படி என்று கேள்வி கேட்காமல் , அப்படியே வந்த மாதிரி கேட்டோம் , கீழ்படிந்தோம் என்று ஏற்றுக் கொள்வது தான் தவ்ஹீத். 
ஆனால், இவர்களோ அல்லாஹ்வின் பெயர் பண்புகளை மறுத்தும், திரித்தும், அவனுக்கு லாயக்கு இல்லை என்றும் சொல்லி தவ்ஹீத் என்ற அழைப்பு பனி செய்கின்றனர். இது தவ்ஹீத் அழைப்பு பனியா ? இவ்வாறு தவ்ஹீதை நாசாமாக்கி, அல்குர் ஆனை நாசமாக்கி செய்யப்படும் ஒரு அழைப்பு பணி தான் இவர்களின் அழைப்பு பணி. நவூதுபில்லாஹ்.


இந்த வழிகேடான கொள்கையை சுமந்த இவர்கள் , சலபி கொள்கைக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அல்ல. ஏனெனில், வரலாறில் இதே கொள்கை கொண்ட பல வழி கேடான கூட்டங்கள் தெள்ளத் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு தான் இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் இவர்களை பார்த்து நாம் கூறுகிறோம் , இவர்களது வழி முறை முஃதஸிலா. இவர்களது கொள்கை அஷாயிரா என்று. ஏனெனில், முஃதஸிலா , அறிவிப்பை விடவும் தர்கத்திற்கும் வாதத்திற்கும் முன்னுரிமை கொடுப்பான். அஷாயிரா , அல்லாஹ்வின் பெயர் பண்புகளை படைப்புகளுடன் ஒப்பாக்கி, மறுத்து , மாற்று கருத்து கொடுத்து விடுவார்கள். இந்த போக்கு தான் இவர்களிடமும் காணப்படுகிறது. 
குறிப்பு: இந்த கட்டுரையின் முதல் peragraph கடைசியில் வந்ததின் காரணமாக கட்டுரையை சரியாக வாசிக்க முடியாமல் போனது. சிரமத்திற்கு மிகவும்  வருந்துகிறேன்....

இக்கட்டுரையின் ஆசிரியர் குறிப்பு : ஷேக் யஹ்யா சில்மி அவர்கள் இமாம் நாஸிருத்தீன் அல்பானி, அஷ் ஷேக் அப்துல் அஸீஸ் ‌பி‌ன் ப‌ஸ், அஷ் ஷேக் முஹம்மத் ஸாலிஹ் அல் ஹுசைமீன் போன்ற தற்கால அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஆ அறிஞர்களின் சபைகளில் கலந்து பயன் பெற்றுக்கொண்டுள்ளார். 

மேலும் இவரை தற்காலதில் உயிருடன் வாழும் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஆ அறிஞர்களான அஷ் ஷேக் ரபி இப்னு ஹாதி அல் மத்களி, அஷ் ஷேக் அப்துல் வஹ்ஹாப் அல் அக்கீல் ஆகியோரும் இவரிடம் கல்வியில் பயன் பெற்றுக்கொள்ளும்படி சிபாரிசு (தஸ்கியா) செய்துள்ளனர். 
இமாம் அல் பானியின் மாணவர்களில் ஒருவரான அஷ் ஷேக் மஹ்மூத் இஸ்தன்பூலி அவர்கள் இவரைப் பற்றி விரிவாகவும் பாராட்டியும் சிபாரிசு ( தஸ்கியா ) கொடுத்துள்ளார். 

இன்னும் இவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் 
அவர்களின் ஹதீஸ்களை அறிவிப்பாளர் தொடரில் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் வரை உ‌ள்ள அறிவிப்பின் அறிவிப்பாளர் வரிசையை அறிவிக்கும் அனுமதியை அஷ் ஷேக் அப்துல் மன்னான் குஜரன்வாலா அவர்கள் மூலம் அனுமதி பெற்றுள்ளார்.

31 பின்னூட்டங்கள்:

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இந்த ஆக்கத்தின் ஆசிரயர் யார் என்பதையும் பதிதிர்கள் என்றால் பயனுல்லதாக இருக்கும்.

இறையடியான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தலைப்பில் இரண்டு இயக்கத்தின் பெயரை பயன்படுத்திவிட்டு ஒரே இயக்கத்தை குறித்து ஆக்கங்களை வேளியிட்டுள்ளீர்கலே.....? தங்களின் மொத்த வரிகளையும் படித்தால் பி ஜைனுலாபிதீன் என்ற தனி நபர் செய்த தவறுக்காக அனைத்து இயக்கத்தையும் குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்....? ஜாக் போன்ற அமைப்புகள் சிறப்பாக இயங்கி வரும் இவ்வேளையில் தாங்கள் போத்தாம்படையாக அனைத்து தவ்ஹீத் இயக்கத்தையும் குற்றம் சாட்டுவட்து எந்த விதத்தில் நியாயம்....? தங்களின் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆதார குறிப்போடு இருந்தால்..... சிறப்பாக இருக்குமே.....

மேலும் தங்களின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளது போன்று இ த ஜ செய்த தவ்ஹீதுக்கு எதிரான விடயங்களையும் பட்டியலிட்டால் தலைப்புக்கு சான்றாக இருக்கும்.... இல்லையேல் ஈரியக்கத்தை விடுத்து சம்பத்தப்பட்ட ஒற்றை இயக்க தலைப்பாக்கினால் சிறப்பாக இருக்குமே....

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஏன் இந்த கொலைவெறி..... கொலைவெறி..... சம்பத்தப்பட்ட இயக்கத்தை விடுத்து அனைவரையும் சாடியுள்ளீர்கள்..... இது சரியாக தெரியவில்லை..... மாற்றம் தேவை.... தவறை சுட்டிகாட்டுவதர்காக மற்ற இயக்கத்தையும் ஊருகாயாக்குவது சரியாக படவில்லை.... சொல்வதை தெளிவாக சொல்லுங்கள்....

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நல்ல கட்டுரை மாஷா அல்லாஹ் இது போன்ற கட்டுரைகள் பதித்தால் நமது சமுகதிற்க்கு பயனுல்லதாக இருக்கும். அதே சமயம் கட்டுரை முழுமை பெறாமல் உல்லது அதை சரி செய்ங்கள்... இந்த கட்டுரையின் ஆசிரியர் யார் என்பதையிம் பதியிங்கள்.

ஷேக் அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி ஹபிதஹுல்லாஹ் அவர்கள் மட்டும்தான் தமிழ் கூறும் முஸ்லிம் உலகுக்கு குர் ஆன் சுன்னாவை சலஃப் சாலிஹின்களின் வழிமுறையில் எடுத்து உரைத்து கொண்டு இருகிரார். மேலும் விவரம் அரிய www.tamilsalafi.com
adiraisalafi.blogspot.com

ZAKIR HUSSAIN said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

your article can't read...it has some 'setting' problem. Letters are missing.

Mohamed Rafeek Taj said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

த த ஜ இயக்கத்தின் நோக்கம் சிறந்தது என்றாலும் அவர்களின் செயல்பாடு சில சமயம் முற்றிலும் அவர்களுடைய நோக்கத்திற்கு எதிராக அமைகிறது

//இவ்வாறு, நபி மொழி அல்குர் ஆனுக்கு முரண் என்று இந்த கூட்டங்கள் சொல்கிறது என்றால், அல்லாஹ்வின் தூதர் அல்லாஹ்வுக்கு மாற்றமாக பேசுகிறார் என்று சொல்வதாக தான் அர்த்தம்.//

ஆசிரியரின் புரிந்துணர்வு கோளாறால் இந்த கருத்து வெளிப்பட்டுள்ளதாக கருதுகிறேன்

குர்ஆணுக்கு எதிராக நபி அவர்கள் வேசுவதாக (நவுதுபில்லாஹ் ) யாரும் இங்கு சொல்லுவது இல்லை மாறாக "நபி அவர்களின் ஹதிஸ் என்று சொல்லப்படும் இந்தஹதிஸ் எதிராக இருபதாக சொல்லுவார்கள் " அதாவது அவர்களுடைய கருத்து யாதனில் நபி அவர்கள் சொன்னார்கள் என்று சொல்லும் அறிவிபளர்கள் மிது தான் அவர்களுக்கு சந்தேகம் தவிர நபி அவர்கள் மிது அல்ல மேலும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் குர் ஆணுக்கு எதிராக நபி அவர்களின் ஹதிஸ் எவ்வாறு அமையும் என்பதே அவர்களின் கேள்வியே தவிரே நீங்கள் திரித்து சொல்லுவது போல் அல்ல

//நபி அல்லாஹ்வுக்கு முரணாக செயல் பட்டார்கள் என்று சொல்லி பித்தலாட்டம் செய்கிறார்கள்.//
ஆதாரம் இல்லாமல் சொல்லும் உங்கள் குற்றச்சாட்டு இயக்க வெறி அவர்களுக்க அல்லது உங்களுக்க என்று எமக்கு தெரிய வில்லை

சகோதரர் மதியழகன் அவர்களுக்கு
இதுபோன்ற பதிவுகளில் சினிமா பாட்டை மேற்கோள் காட்டுவது எமக்கு சரி என்று படவில்லை

muslimmalar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@இறையடியான்

சகோதரர் அவர்களே நான் ஒரு IDENTIFICATION காகவே அந்த படத்தை பதிவுற்றேன் அது தலைப்பு என்று நான் கூறவில்லை..
ஏன் அந்த படத்தை நான் பதிவுற்றேன் என்றால் இன்று தவ்ஹிதீன் பெயரில் இயங்கும் இயக்கங்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும் பொருந்தி கொண்ட உததம சஹாபாக்களை குறை கூறி திரிகின்றனர். இக்கட்டுரையில் ஆசிரியர் பி.ஜே. அவர்களையோ அல்லது மற்ற இயங்களின் தவறை சுட்டிகாட்டிரிக்கிறார் என்றால் அவர் தனிப்பட்ட விசயங்களுக்காக குறை கூற வேண்டும் என அவசியமில்லை மாறாக உத்தம சஹாப்பாக்களின் வழியை பின் பற்றுகிறோம் என்று கூறி அவர்களையே குறை கூறி வழிகேட்டில் சென்று விட்டதால் தான் இந்த கட்டுரையை ஆசிரியர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்...
பின் வரும் லிங்கை சொடுக்கவும்....
http://www.tamilsalafi.edicypages.com/692773205264/facts-of-salafi-and-his-character

muslimmalar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ZAKIR HUSSAIN
இந்த பிரச்னை இந்த கட்டுரைக்கு மட்டுமே ஏற்படுகிறதா?...
அல்லது மற்றவைகள் உங்களால் படிக்க முடிகிறதா?...

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

muslimmalar என்பவர் யார் என்று சொன்னால் தொடர்பு கொள்வதற்கு உதவியாக இருக்கும்....

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரை பிபிசி சகோதர்களே....

தமிழத் தவ்ஹீத் இயக்கத்தின் நிலைகளை இந்த கட்டுரையில் சொல்லிவிட்டு, போட்டவில் மாபரும் கொள்கை விளக்க மானாடு என்று அலைப்புவிடுகிரீர்கள், அவர்களின் கொள்கை வழிகெட்ட கொள்கை என்பதை தான் இங்கு பார்தோம். அந்த போட்வை சரி செய்ங்கள்...

சகோதரர்களே!
நாங்கள் எந்த ஒரு கூட்டத்தையேனும் வழிகேடென்று கூறுவதனால், அது எமது தனிப்பட்ட கோபத்தினாலோ எமது தனிவழிமுறையிலான போக்கினாலோ, ஏதோ ஒரு காரணத்தை காட்டுவதினாலோ அவர்களை வழிகேடர்களென்று சொல்வது ஸலபியுடைய உஸுல் அல்ல. இவ்வாறு சொல்வது ஸலபி என்றால் என்னவென்று தெரியாதவனுடைய வழிமுறையாகும்.

ஸலபி உஸுல் என்னவென்பதைப் புரிந்தவன் மற்றவனை வழிகேடென்று நிரூபிப்பது ஒரு விமர்சனம் என்றே கருதுவான். அது அவர்களைத் திட்டுவதாகவோ ஏசுவதாகவோ அர்த்தம் கொள்ளப்பட மாட்டாது. நாங்கள் யாரையும் திட்டுவதில்லை. மாறாக நாம் செய்வது விமர்சனம் மட்டுமே. நாங்கள் அனைத்து வழிகேடான போக்குடையவர்களையும் விமர்சனம் செய்கிறோம். நாங்கள் எந்த ஒரு அஹ்லுல் பித்அத்துக்கும் திட்டுவதில்லை. திட்டுவதென்பது எமக்கும் அவர்களுக்கும் இடையில்லுள்ள தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு அவர்களை நாம் கடிந்து கொள்வதையே குறிக்கும்.

அவர்களை வழிகேடென்று நாம் தீர்ப்பளிக்கக் காரணம் அவர்கள் ஸலபுஸ் ஸாலிஹீன்களின் பாதையிலிருந்து வெளியே சென்றதுதான் என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

”இஸ்லாமிய தஃவா அமைப்பில் ஸலபிகளிடம் இருக்கும் இன்னுமொரு முக்கிய அம்சம்தான்; யாரெல்லாம் அல் குர்ஆனையும், அஸ் ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் பின்பற்றிய வழிமுறையில் பெற்றுக் கொள்கிறார்களோ அல்லது, அதனை நடைமுறைப்படுத்துகிறார்களோ அல்லது, அதனை எத்திவைக்கிறார்களோ அல்லது, அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் தோழர்களாக இருக்கிறார்களோ அப்படிப்பட்டவர்களுடன் சேர்ந்திருப்பார்கள். ”

அல்லாஹ் அஃலம்

muslimmalar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
This comment has been removed by the author.
muslimmalar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Mohamed Rafeek
சகோதரர் அவர்களே...
ஆசிரயர் புரிந்துணர்வு கோளாரில் உளறுகிறார் என்று கூறுகிறீர்கள்...
முன்னால் வாழ்ந்த சுன்னாவை சஹாப்பாக்கள் விளக்கத்தோடு பின் பற்றிய தாபியீன்கள் சலபி இமாம்கள் இவர்களுக்கெல்லாம் ஹதீஸில் முரண் இருக்கிறது என்று தெரியாதது இன்று வந்த சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு மட்டும் தெரிந்தது எப்படி... யார் புரிந்துணர்வு கோளாரில் உளறுகிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும்...
நான் தாபியீன்கள் என்று சொன்னதும் பித்அத ஆனவர்களை கூறுகிறேன் என்று நினைக்கவேண்டாம். நபி (ஸல்) அவர்களையும், உத்தம சஹாப்பைக்களை பின் பற்றிய சலப் இமாம்களையும் தான் கூறுகிறேன்.

//குர்ஆணுக்கு எதிராக நபி அவர்கள் வேசுவதாக (நவுதுபில்லாஹ் ) யாரும் இங்கு சொல்லுவது இல்லை மாறாக "நபி அவர்களின் ஹதிஸ் என்று சொல்லப்படும் இந்தஹதிஸ் எதிராக இருபதாக சொல்லுவார்கள் " அதாவது அவர்களுடைய கருத்து யாதனில் நபி அவர்கள் சொன்னார்கள் என்று சொல்லும் அறிவிபளர்கள் மிது தான் அவர்களுக்கு சந்தேகம் தவிர நபி அவர்கள் மிது அல்ல மேலும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் குர் ஆணுக்கு எதிராக நபி அவர்களின் ஹதிஸ் எவ்வாறு அமையும் என்பதே அவர்களின் கேள்வியே தவிரே நீங்கள் திரித்து சொல்லுவது போல் அல்ல//

தங்கள் இப்படி கூறி இருக்கிறீர்கள்: TNTJ வின் கொள்கை என்னவெனில் அறிவிப்பாளர் சஹீஹானவர் என்றால் தான் அந்த ஹதிஸை ஆராய்ச்சி செய்வார்கள் . அப்படி இருக்க ஏன் அறிவிப்பாளர் மீது சந்தேக பட வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் பொருந்தி கொண்ட உததம சஹாப்பாக்கள் எப்படி தூதர் மீது இட்டுகட்டுவார்கள் சற்று சிந்திக்கவும்...
சலப் மன்ஹாஜ் பற்றி மேலும் அறிய பின்வரும் லிங்கை சொடுக்கவும்:
http://www.tamilsalafi.edicypages.com/692773205264

பித்அத வாதிகளை வேண்டு மென்று குறை கூற ஆசிரியர்க்கு எந்த இயக்க வெறியும் இல்லை.
உங்கள் குற்றசாட்டிற்கு பதில் பின் வரும் லிங்கை சொடுக்கி தெரிந்து கொள்ளவும்.
href=http://www.tamilsalafi.edicypages.com/692773205264/facts-of-salafi-and-his-character

அல்லாஹ் உங்களையும் என்னையும் இந்த உலகத்தாரையும் நபி (ஸல்) அவர்களும் உத்தம சஹாப்பாக்கள் பின் பாற்றிய நேர் வழியில் செல்ல உதவி செய்வானாக....

muslimmalar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@மதியழகன்
சகோதரர் அவர்களே யாரும் மற்ற இயக்கத்தை ஊறுகாயாக ஆக்கவில்லை. .
யாரெல்லாம் தவ்ஹீத் என்ற பெயரில் உத்தம சஹாப்பாக்களை குறை கூறிக்கொண்டும். அவர்களின் வழியை புறக்கணிக்கிறார்களோ அவர்களுக்கே இக்கட்டுரை பொருந்தும்...
ஒரு மார்க்க விஷயத்தை பற்றி இருக்கும் கட்டுரையில் விளையாட்டாக தங்கள் சினிமா பாடலை உபயோக படுத்தி இருக்கிர்கள்... அல்லாஹ்விடம் தவறுக்கு வருந்தவும்...
நான் யாரையும் புன்புறுத்தும் நோக்கில் இக்கட்டுரையை வெளியிடவில்லை மாறாக மக்கள் நேர் வழி பெற வேண்டும் என்பதற்காக இக்கட்டுரையை இங்கு பதிந்தேன். இக்கட்டுரையின் ஆசிரியர் நான் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்..

இறையடியான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@முச்ளிம்மலர் அவர்களுக்கு....

நான் அறிந்தவரையில் இ த ஜ சஹாபாக்களை குறை கூறவில்லை ஆனால் சகோ பி ஜெ அவர்கள் அதிகமதிகம் சகபாக்களை குறை கூறும் நோக்கில் பல்வேறு குதர்க்க கருத்துக்களை கூறியும் எழுதியும் இருக்கிறார் அதற்க்கு பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன இந்த நிலையில் நேரிடையாக த த ஜ வை குறிப்பிட்டு எழுதியிருக்கலாம் .... உள்ளதை உள்ளபடி சொல்வதற்கு எந்த பாரபட்சமும் பார்க்க தேவையில்லை என்பது என் நிலை பாடு......

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நிச்சயம் தவறை ஒத்துகொள்ளும் மனோபக்குவம் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பது என் நோக்கம்...... அந்த வகையில் சினிமா பாட்டை நான் பயன்படுத்தியதற்கு மிகவும் வருந்துகிறேன்..... ஒரு ஈர்ப்புக்காக அதை பயன்படுத்தி இருந்தேன்..... தவறு யார் செய்தாலும் தவறே......

Mohamed Rafeek Taj said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகாபாக்கள் வாழ்ந்த காலத்தில் தான் ஷியா என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டது அவர்கள் அலி(ரலி ) ஹசன் ஹுசைன் மற்றும் பாத்திமா(ரலி) அவர்களை எப்படி எல்லாம் உயர்த்தி எழுதியுள்ளார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டுகிறேன்

சரி விசயத்துக்கு வருவோம்
ஒரு ஹதிஸ் குரானுக்கு எதிரான கருத்து இருந்தால் அதை தவிர்த்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது அப்படி குரானுக்கு எதிர் கருத்துள்ள ஹதிஸை தவிர்பதால் நபி ஸல் அவர்களையே தவறு செய்துள்ளார்கள் என்று சிலர் முயலுவதாக (நவுதுபில்லாஹ்) மாயையை ஏற்படுத்த முயல்கிரிர்கள்

ஒரு ஹதிஸ் குரானுக்கு எதிராக இருந்தால் அறிவிப்பாளர் பலகினமானவர் இருக்க வாய்ப்புள்ளது என்று பி ஜே அவர்கள் சொல்லுகிறார்களே தவிர நபி (ஸல் ) அவர்களை அல்ல (நவுதுபில்லாஹ்)

கருத்தை ஆதாரத்தால் வெல்ல வேண்டுமே தவிர அதற்க்கு வேறு ஒரு ஆர்த்தத்தை திரிப்பது தவறு

//அவனது தூதரும் பொருந்தி கொண்ட உததம சஹாப்பாக்கள் எப்படி தூதர் மீது இட்டுகட்டுவார்கள் சற்று சிந்திக்கவும்...//
இதே கேள்வியை டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களிடம் ஒரு நிகழிச்சியில் கேட்கப்பட்டது
அதற்க்கு டாக்டர் இவ்வாறு சொன்னார் "இந்த காலம் போல் அந்த காலம் கிடையாது நமக்கு இருக்கும் வசதிகள் அவர்களுக்கு கிடையாது ஒரு தவறான செய்தியை அதாவது குரானுக்கு எதிரான ஹதிஸ் ஒரு இமாமல் சொல்லபட்டால் தவறு அவர்கள் மிது அல்ல அவர்களுக்கு கிடைத்த செய்தி தவறானது என்று எடுத்து கொள்ள வேண்டும் என்றார் "

மற்றபடி பிஜே அவர்கள் சொல்லுவதும் செய்வதும் இஸ்லாம் என்று சொல்லும் இயக்கவாதிகளில் நானும் ஒருவன் அல்ல ..மேலும் உங்களுடைய இந்த கருத்தை மறுபறுசிலனை செய்ய வேண்டுகிறேன்

////இவ்வாறு, நபி மொழி அல்குர் ஆனுக்கு முரண் என்று இந்த கூட்டங்கள் சொல்கிறது என்றால், அல்லாஹ்வின் தூதர் அல்லாஹ்வுக்கு மாற்றமாக பேசுகிறார் என்று சொல்வதாக தான் அர்த்தம்.//

தூதர் அல்லாஹ்வுக்கு மாற்றமாக பேசுகிறார் என்று அர்த்தம் அல்ல தூதர் எப்படி அல்லாஹுக்கு எதிராக (நவுதுபில்லாஹ் ) பேசி இருப்பார் என்றே அருத்தம் கொள்ள வேண்டும்,அதாவது ஹதிஸ் பலவினமனது என்று சொல்ல முற்படுகிறார்களே தவிர நீங்கள் சொல்ல வருவது போல அல்ல

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இந்த கட்டுரைக்கும் வாசகர்களின் சந்தேகங்களும் பதில் கான இதனை பாருங்கள் உங்களுக்கு விளக்கம் கிடைக்கும்
http://www.adiraitntj.com/2011/12/blog-post_1087.html

Adirai Iqbal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தவ்ஹீத் இயக்கங்கள் என்ற பெயரில் உலா வரும் பெரும்பாலான இயக்கங்கள் சவூதி அரசின் (நிதி) உதவியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெறுகிறார்கள்.
சவூதி அரசு அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளால் கட்டுபடுத்தப்படுகிறது . சவுதியில் இஸ்லாத்திற்கு விரோதமான மன்னர் ஆட்சி நடை பெறுவதும் நாம் அறிந்ததே .

இந்த வஹ்ஹாபிசத்தை தூக்கிபிடித்து கொண்டிருக்கும் தவ்ஹீத் (?) இயக்கங்கள் உணமையான பணியே முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமை நிலவுவதை எப்பாடு பட்டாகிலும் தடுப்பதே . அப்படி தடுப்பது மூலம் சவூதி , குவைத் நாடுகளின் மன்னர் ஆட்சியை பாதுகாப்பதே . இதன் மூலம் ஒரு இஸ்லாமிய தலைமைத்துவம் அமைவதை தடுத்து அமெரிக்கா உள்ளிட்ட எஜமானர்களுக்கு சவூதி தனது விசுவாசத்தை காட்டிகொள்கிறது . ஏகதிபத்தியம் தனக்குள் விகாரமாய் சிரித்துகொள்கிறது.

வஹ்ஹாபி இசத்தில் நடத்தப்படும் இயக்கங்கள் அனைத்தும் தமக்குள்ள முரண்பட்டு பிரிந்து செல்வதி நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் . அவர்கள் சொல்லிகொள்கிறார்கள் மார்க்கம் இப்பொழுதுதான் வளர்ந்துகொண்டிருக்கிறது என்று . உணமியில் இயக்கங்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கிடையே வன்முறையும்தான் வளர்ந்துக்கொண்டு இருக்கிறது .நமக்குள் ஒற்றுமையும் காணாமல் போய்கொண்டு இருக்கிறது . முதலில் ஜமாத்தை உடைத்தார்கள் பின்னர் தனியாக பள்ளிகளை திறந்து என்னமோ தனி மதங்கள் போல கொண்டுசெல்கிறார்கள் .கேட்டால் நாங்கள்தான் சொர்க்கவாசிகள் என்கிறார்கள் .

ரசுளுல்லாவின் தஃவா இஸ்லாத்தின் கொடியின் கீழ், ஒரே தலைமைத்துவத்தில் அனைவரையும் ஒன்று திரட்டுவதாகவே இருந்தது. அனைத்து கோத்திரங்களையும், குழுக்களைகயும் ஓரணியில் திரட்டி பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
பிரிவினையையும் பிரச்சினைகளையும் இல்லாதொழிக்கும் மத்திய நிலையங்களாக பள்ளிவாயில்கள் செயலாற்றின.
இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிது. பிரிவினைக்காகவே பள்ளிவாசல்கள் உருவாகின்றன. உருவாக்கப்படுகின்றன .

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

PJ ரசிகர்ளுக்கும், PJ ரசிகர் அல்லாதவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

"லா இலாஹா இல்லல்லாஹு, முஹம்மதர் ரசூலுல்லாஹ்"

முஅ ஸாலிஹ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தனிப்பள்ளிகளும், வினோதமான குர்ஆன் மொழிப்பெயர்ப்பும் வரும்போதே எனக்கு சந்தேகம். எங்கே இவர்கள் மார்க்கத்தை ஹைஜாக் பன்னுகிறார்களோ என்று. இவர்கள் எதிர் காலத்தில் போரிகளைப் போன்றோ, ஸியாக்களைப் போன்றோதான் உருவெடுக்கப் போகிறார்கள். ஸஹாபாக்களை குறைகூறிடும் பழக்கம் உலகிலேயே ஸியாக்களிடம் மட்டும்தான் இருக்கிறது. இவர்களும் ஸியா வழித்தோன்றல்களாகவே இருக்க வேண்டும். முன்பு எம்.என்.பி. ஐ ஸியாக்கள் என்றவர்கள், இன்று இவர்களே. ததஜ வினர் சிந்திப்பார்களா? ஹூம் சந்தேகமே, பி.ஜே. என்ற மூளை கட்டளையிட்டால் மட்டுமே செயல்படும் இந்த அங்கங்கள்....

Mohamed Rafeek Taj said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோ அதிரை இக்பால்
நானும் ஒரு தவ்ஹீத் வாதி தான் .... தவ்ஹீத்வாதி என்றால் த த ஜ ,ஜாக்,ஐ த ஜ ,சவுதி,குவைத் மற்றும் நாடோவின் கூட்டுப்படை என்று நினைத்து விடாதிர்கள்

தவ்ஹீத் என்ற சொல்லுக்கு உண்மையான ஆர்த்ததை இங்கே பாருங்கள்
What exactly is this towheed that is so important, that which holds such a high position?Liguistically, the word towheed comes from the word wah-hada, which means to make something waahid (singular). Waahid is the opposite of two, three, etc., the opposite of plurality. So waahid is something that will continue to be singular and never become a partner of something elseAs for the Sharee’ah’s definition, the towheed means to single out Allaah with all forms of worship, so that you make all of your worship for Allaah alone.

Allaah says [1]:( …and the religion will be entirely for Allaah )The word religion in this verse means worship,

as Allaah says[2]:( and I have not created the Jinn nor Mankind except to worship Me )

And Allaah says [3]:( and worship Allaah, and do not ascribe a single partner to Him )

Allaah also says [4]:( So call on Allaah, making the religion entirely for Him, even if the disbelievers detest it )

This is the meaning of towheed – to single out Allaah in all acts of worship and to abandon the worship of anything else.

தவறு செய்பவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செயுங்கள் அதைவிடுத்து குண்டுவைப்பவன் எல்லாம் இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்லுவது போல் தவ்ஹீத் என்று சொல்லும் எல்லோரும் பிரிவினை வாதி என்று கை முறுக்கும் வேலையே செயதிர்கள்

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பி.ஜே அவர்களுக்கு ஆசிரியர் யார்?

பி.ஜே அவர்கள் மார்க்கத்தில் பல புதிய கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகிறார். ஸக்காத் விஷயத்தில் செய்த ஆய்வு, ஸஹாபாக்கள் குறித்த நிலைபாடு, அல்லாஹ்வின் பண்புகளில் சுய விளக்கம், சூனியம் சம்மந்தமான கருத்துக்கள், ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுதல், சுவனம் மற்றும் நரகம் இன்னும் படைக்கப்படவில்லை போன்ற பல கருத்துக்களும் அவரது புதிய கருத்துக்களாக தமிழ்கூறும் நல்லுலகில் வலம் வருகின்றன.

பெரும்பாலும் தன்னுடைய எந்த பேச்சுக்களிலும் சரி, உரைகளிலும் சரி ஒரு கருத்தை முன்வைக்கும் போது ஸஹாபாக்கள் அல்லது தாபீஈன்கள் அல்லது அவர்களுக்குப் பின் வந்த நேர்வழிநின்ற நல்லோர்களின் கருத்துக்களிலிருந்து அவர் கோடிட்டுக் காட்டுவதில்லை. மாறாக ஒரு கொள்கையை மக்கள் மன்றத்தில் முன்வைப்பதற்காக குர்ஆனையோ ஹதீசையோ கோடிட்டுக் காட்டும்போது அதற்கு அவர் சுயமாக விளக்கம் தருவது வழக்கம். இதற்கு ஓர் உதாரணம்தான் அல்லாஹ் முதல் வானத்தில் ஒவ்வோர் இரவும் இறங்குகிறான் என்பதற்கு அந்த ஹதீசுக்கு மாத்திரம் அப்படி பொருள் கொடுக்கக் கூடாது என்று கூறி சுய விளக்கம் அளித்தது. ஸஹாபாக்கள் மற்றும் முன் சென்ற நல்லறிஞர்களின் புரிதல்களையும் விளக்கங்களையும் புறம் தள்ளியது.

ஆனாலும் குர்ஆன் ஹதீசுக்கு சொந்தக்காரர்கள், தவ்ஹீதுவாதிகள் என்றெல்லாம் தம்மைப் பறைசாற்றிக் கொள்ளும் பி.ஜே ஆதரவாளர்கள் பல சந்தர்ப்பங்களிலும் அவரது பேச்சுக்களில், எழுத்துக்களில் உள்ள தவறுகளை சற்றும் சிந்தனை செய்யாமல் அப்படியே நம்பியும் பிரச்சாரம் செய்தும் வருகின்றனர். இதன் விளைவாக கற்றறிந்தவர்களை மதனிகள் என்றும் கிபார் உலமா என்றும் கிண்டல் செய்து தம்மைப் பெரிய சிந்தனையாளர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். நீங்கள் யாருடைய பிரச்சாரத்தை நம்பியிருக்கிறீர்களோ அவர் யாரிடமும் கற்றுக் கொள்ளாமல் தனது சுய சிந்தனையையே பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதற்கு இந்த சிறிய வீடியோ படம் சான்றாகும். புத்தியுள்ளவர்கள் சற்றேனும் சிந்திப்பார்களாக!

http://www.facebook.com/photo.php?v=248120165240195&set=vb.100001266403688&type=2&theater

ஒரு ஹதிஸ் குரானுக்கு எதிராக இருந்தால் அறிவிப்பாளர் பலகினமானவர் இருக்க வாய்ப்புள்ளது என்று பி ஜே அவர்கள் சொல்லுகிறார்களே தவிர நபி (ஸல் ) அவர்களை அல்ல (நவுதுபில்லாஹ்)

நமக்கு முற்காலத்தில் வாழ்ந்த இமாம் புகாரி மற்றும் முஸ்லிம் போன்ற இமாம்களுக்கு தெரியாத பலகினாமான அறிவிப்பாளர் வந்து இருப்பார் என்று அன்னன் பிஜேவுக்கு எவ்வாறு தெரிந்தது....

மார்க்கம் என்பது புதிதாக உண்டாக்குவதற்க்கு ஒன்றும் இல்லை. நமக்கு முன்னால் வாழ்ந்த சத்திய சஹாபாக்கள் எவ்வாறு நபி (ஸல்) அவர்களிடம் இருந்து மார்க்கத்தை பெற்று தந்தார்கலோ அதே போல் தான் இன்று வரை ஸலஃப் ஸாலிஹின் இமாம்ங்கள் பின்பற்றி, பிறச்சாரமூம் செய்து வருகிரார்கள்.

ஆனால் ஸலஃப் ஸாலிஹின்களின் விளக்கம் தேவை இல்லை என்று சொன்னது மட்டும் இல்லாம் அவர்களின் குரைலை பரப்பி திரியிம் இந்த போக்கு முன் சென்ற வழிகெட்ட கொள்கைவாதிளின் போக்காக இருந்தது.

http://www.facebook.com/photo.php?v=245434158842129

இவருடைய கொள்கையானது முஹ்தஜிலா(அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்) சுருங்க சொன்னால் (பெரியார் சிந்தனை-பகுதறிவாதி)ஹதிஸ்க்கு குர் ஆன் முரன் படுகிரது என்று சொல்லி அவருடைய பகுதறிவுக்கு முரன் படுகின்றவற்றை சொல்லிக்கொண்டு இருக்கிரார்.

இதனால் தான் நாம் சொகிரோம் குர் ஆன் சுன்னாவை சஹாபாக்கள் வழிமுறையில் பெற்று பின்பற்றினோம் என்றால் சத்தியமான பாதையை நாம் பெற்றுவிட்டோம்...அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ் எம்மை பாதுகாப்பானக வழிகெட்ட கொள்கைகலிருந்து....ஆமீன்

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

"ஒரு ஹதிஸ் குரானுக்கு எதிராக இருந்தால் அறிவிப்பாளர் பலகினமானவர் இருக்க வாய்ப்புள்ளது என்று பி ஜே அவர்கள் சொல்லுகிறார்களே தவிர நபி (ஸல் ) அவர்களை அல்ல (நவுதுபில்லாஹ்)"

அன்பு சகோதர்ரே.. இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சஹிஹான ஹதிஸ்கலை திரட்டி தந்து அதன் பின் வந்த ஹதிஸ் கலை இமாம்ங்கள் அனைவராலும் ஏற்றுக்கொன்ட ஹதிஸ்கலை இன்று வந்து நான் மார்க்கத்தை ஆய்வு செய்து பல புதிய கருத்துகலை ஆய்வு செய்து உன்மையான தவ்ஹீத் நாங்கள் தான் சொல்கிரோம் என்று சொல்லிகொண்டு தவ்ஹீதுக்கு எதிரான கொள்கைகலை பரப்பி கொண்டு இருக்கிரார்கள் எனவே தான் இது போன் வழிகேடர்கலை சேஹ் யஹ்யா சில்மி அவர்கள் நமது சமுகத்திற்க்கு எச்சரிக்கை செய்து வருகிரார்கள்.

ஹதிஸ்கலை மருக்கும் போக்கு முஹ்தஜிலா மற்றும் இன்னும் இஸ்லாமிய வரலாற்றில் வந்த எதனையோ வழிகேடர்கள் சும்ந்த கொள்கையைதான் இவர்கள் தவ்ஹித் என்று சொல்லிக்கொண்டு வருகிரார்கள்...

இவர்களை பற்றிய எச்சரிகையைதான் சேஹ் யஹ்யா அவர்கள் சொல்லி இருகிரார்கள்...


அன்னன் அவர்களுக்கு ஆசிரியர் யார்?

"அன்னன் அவர்கள் மார்க்கத்தில் பல புதிய கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகிறார். ஸக்காத் விஷயத்தில் செய்த ஆய்வு, ஸஹாபாக்கள் குறித்த நிலைபாடு, அல்லாஹ்வின் பண்புகளில் சுய விளக்கம், சூனியம் சம்மந்தமான கருத்துக்கள், ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுதல், சுவனம் மற்றும் நரகம் இன்னும் படைக்கப்படவில்லை போன்ற பல கருத்துக்களும் அவரது புதிய கருத்துக்களாக தமிழ்கூறும் நல்லுலகில் வலம் வருகின்றன."

நீ யாரிடமிருந்து இல்மை பெற்றுக் கொள்கிறாய் என்பதை கவனித்துக் கொள்...

கிபாருத் தாபியீன் அப்துல்லா இப்னு முபாரக் >> இந்த மார்க்கம் அறிவிப்பாளர் தொடர் கொண்டது. அதுமட்டும் இல்லையெனில் எவரும் எதனையும் கூறுவார்.

அல்லாஹ் அஃலம்....

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Adirai Iqbal அவர்களே...

//”இந்த வஹ்ஹாபிசத்தை தூக்கிபிடித்து கொண்டிருக்கும் தவ்ஹீத் (?) இயக்கங்கள் உணமையான பணியே முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமை நிலவுவதை எப்பாடு பட்டாகிலும் தடுப்பதே .”//

இது என்ன சகோதரரே தவ்ஹீதின் அடிப்டை என்பது உலகத்தில் அல்லாஹ் வை மட்டுமே வனங்க பட வேண்டும் என்பதுதான் ஆனால் நீங்கள் சொல்கிரீர்கள் ஒற்றுமை ஏற்படுத்துவதுதான் தவ்ஹீத் என்று.

அல்லாஹ்வை அஞ்சிகொள்ளுங்கள் நபிமார்கள் அனைவரும் தவ்ஹீதை எடுத்து சொல்லும் பொழுது பல பிறச்சனைகளை சந்தித்தார்கள். குடும்பத்தின் மூலமாக, சமுகத்தின் மூலமாக, பல ஏச்சுக்கலை வாங்கிதான் தவ்ஹீதை நீலை நிருத்தினார்கள்... ஒற்றுமையை ஒருகாலம் ஏற்படுத்த முடியாது நபி வழி அல்லாத வேறு வழிகளிள்.

உன்மையான தவ்ஹீத்(அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாத்தின்) கொள்கையை பற்றி பிடித்துகொண்டால் இன்ஷா அல்லாஹ் நமது சமுகம் ஒன்றுபடும்..

ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.அல்குர் ஆன்2:137

அல்லாஹ் அஃலம்.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அன்பான சகோதரர்களே.....அருமை கண்மணிகளே....

முன்பெல்லாம் தெளிவான கருத்தை தெளிவாக தெரிந்து கொண்டிருக்கிறார்கள்....

இப்பொழுது தவறான கருத்தை தெளிவாக புரிந்துக் கொண்டிருக்கிறார்கள்....இதிலிருந்து மீண்டு வர ஒரு வழி இருக்கு....

"பேசாம PJ ரசிகர் மன்றத்தை கலைத்துவிடுங்கள்". (புழுதி மணல் இல்ல...இல்ல... குருதி புனல்.....கமலைப்போல)

எங்களுக்கெல்லாம் சின்ன ஒரு சந்தேகம்.... கமலுக்கு மட்டும் எப்படி தாடி பெருசா இருப்பதாக டிவி நியூஸ்ல காட்டுறாங்க.?!?!?!.....

இன்னுமொரு சந்தேகம்..... PJ மட்டும் ஏன் டிவி யின் விபரீதத்தைப் பற்றி பெசமாட்டேங்குராறு.......

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நீங்கள் ஒரு கட்டுரை வெளியிட்டால் அது சம்பந்தப்பட்டவா்களின் கருத்தையும் வெளியிடுவதுதான் நடுநிலையாக இருக்கமுடியும் த த ஜ வின் மறுப்பை உங்களுக்கு அனுப்பிய பிறகும் அதை வெளியிடாமல் இருப்பதன் மூலம் நீங்கள் ஒருதலைபட்சமானவர்கள். உங்கள் இணையளத்தின் மூலமாக எந்தனை நபர்களுக்கு பொய்யான தகவல் கிடைக்கிறதோ அதற்கு நீங்களும் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள் இறைவனுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.

Mohamed Rafeek Taj said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//அன்பு சகோதர்ரே.. இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சஹிஹான ஹதிஸ்கலை திரட்டி தந்து அதன் பின் வந்த ஹதிஸ் கலை இமாம்ங்கள் அனைவராலும் ஏற்றுக்கொன்ட ஹதிஸ்கலை இன்று வந்து நான் மார்க்கத்தை ஆய்வு செய்து பல புதிய கருத்துகலை ஆய்வு செய்து உன்மையான தவ்ஹீத் நாங்கள் தான் சொல்கிரோம் என்று சொல்லிகொண்டு தவ்ஹீதுக்கு எதிரான கொள்கைகலை பரப்பி கொண்டு இருக்கிரார்கள் எனவே தான் இது போன் வழிகேடர்கலை சேஹ் யஹ்யா சில்மி அவர்கள் நமது சமுகத்திற்க்கு எச்சரிக்கை செய்து வருகிரார்கள்//

நீங்கள் சொல்லுவது சிறந்தாத அல்லது அவர்கள் சொல்லுவது சிறந்தாத என்று ஆராய்ந்து தீர்வுகாணும் திறன் எமக்கு இல்லை

ஆனால் நீங்களும் அவர்களும் எல்லா முஸ்லிம்களும் கண்மணி நாயகம் நபி (ஸல்) அவர்களை தம் உயிரினும் மேலாக நேசிப்பதை எம்மால் ஆதாரத்துடன் சொல்லமுடியும்

ஏக இறைவனையும் அவனுடைய ரசுளையும் ஏற்றுகொண்ட ஒரு முஸ்லிம் தவறான வழிமுறையில் இருந்தாலும் அவன் ஒரு இறைமறுப்பாளன் , நரகத்துக்கு செல்லகுடியவன் என்று சொல்லும் தகுதி எப்படி பி ஜே அவர்களுக்கு இல்லையோ (ஏனெனில் தீர்ப்புக்கு அதிபதி அல்லாஹுவை தவிர வேறு யாரும் இல்லை )

அதைப்போல இப்படி சொல்லுவதும் தவறு என்று நான் நினைக்கின்றேன்
////இவ்வாறு, நபி மொழி அல்குர் ஆனுக்கு முரண் என்று இந்த கூட்டங்கள் சொல்கிறது என்றால், அல்லாஹ்வின் தூதர் அல்லாஹ்வுக்கு மாற்றமாக பேசுகிறார் என்று சொல்வதாக தான் அர்த்தம்.//

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

துக்ளக் நியூஸ் குழுமம் இவர் முதலில் முஸ்லிமா அல்லது சோவின் வகையராவா? என்பதை தெளிவுபடுத்தட்டும் அதற்கு பிறகு இவருக்கு பதில் சொல்லலாம்.

blogger said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பி.ஜ அவர்களை பகிரகமாக ஆழைக தயாராகுகள் தயாரா ?

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நாங்களும் முஸ்லிம்தான். ஏற்கனேவே சொல்லிவிட்டோமே 19 வது பின்னூட்டத்தில்.

ஆனால் எங்களுக்கு முஸ்லிம் பெயரில் தூய இஸ்லாமிய போர்வையில் இயக்கம் இல்லை.

கடந்த 5 - 6 வருடமாக PJ விஷியத்தில் அவ்வளவாக நாங்கள் தலையிடுவதில்லை, காரணம் முன்பெல்லாம் அவர் காங்கிரஸ் கட்சி நரசிம்மராவ் மாதுரி தெரிந்தவுடன் மக்களுக்கு நிறைய விஷியகளை தத்ரூபமாக புரிய வைத்துக்கொண்டிருந்தோம். மிகவும் எளிமையாக.
அதன் பிறகு PJ வுக்கு போஸ்ட் அடித்தவர்கள் சாணி அடிக்க ஆரம்பித்தவுடன்...... ஆஹா.... இது ரொம்ப தப்பாச்சே... இப்படியா ஒரு மனிதரைப் போட்டு ஏழு வானத்திற்கு உயர தூக்க நினைப்பத்து, அல்லது ஏழு பூமிக்கடியில் புதைக்க நினைப்பதென்று......

எதுக்காக கொடியை தூக்கணும், தூக்குன கொடியை எரிக்கணும்.
எதுக்காக கூட்டத்தை சேர்க்கணும். புடிக்கலேனா கலைக்கனும்.
எதுக்காக கட்சிகளைத் தேடி போகணும்....பிறகு எதிர்க்கணும்.
எதுக்காக வாதத்திற்கு வழிய போகணும். பிறகு மறையனும்.
எதுக்காக பழனி பாபாவை எதிர்த்து. பிறகு ஆடு நனைந்தவுடன்.
எதுக்காக கோவை பக்கம் பிரச்சாரத்திற்கு போறதில்ல.
எதுக்காக "சோ"வின் கட்டளையை (கலைஞர்) நடத்துபவரிடம் போகணும்.
அதுக்காகத்தான் சோ வின் பெயர் ஞாபகம் வருதோ...?

ரொம்பவும் தெளிவு படுத்துகிறோம்....அதாவது சகோ. அஸ்லம் சேர்மன் பதவிக்கு வந்தவுடன் அவரை உச்சி வரம்பின்றி புகழ்ந்து தள்ளினார்கள். அந்த நேரத்தில் "புகழ் எல்லாம் வல்ல இறைவனுக்குமட்டும் உரியது" என்பதை கருத்தில் கொண்டு, அதுவும் தகுதிக்கி மீறி புகழவேண்டாம் என்பதை கொஞ்சம் நகைச்சுவையாக சுட்டிக்காட்டியது உண்மை. அதேசமயம் ஒரு கொசு கடித்தாலும் அவரை தொந்தரவு பண்ணுவது கூடாது என்பதையும் கொசுவைப் போல் "கடித்து" சொன்னோம்.

அதுக்காக எங்களப் போய் "சோ"வோடு சேர்த்து வச்சி...... நீங்க PJ யை வச்சி சேர்த்து பேசுனாலே நாங்க ஒத்துக்க மாட்டோம்.

போதும் சகோதரரே... நாம எல்லோரும் சேர்ந்து PJ ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டு வேற வேலைய பார்ப்போம்.

பாவம் நரசிம்மராவ்...வாயில்லா கரப்பான் பூச்சி.

blogger said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பி.ஜ அவர்கள் என்ன என்ன ஹதிஸ்கலை மறுகிறார்கள் என்று கூறினால்தனே அதனை அய்யு செய்ய முற்படுவார் அதனை கூறினால்தனே மக்களுக்கும் புரியும்

இதனை முதலில் கூறுகள் .........................

adiraibbc இல் போடுக்கள்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.