அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, November 30, 2011

அதிரையில் – சமையல் GAS தட்டுப்பாடு !



முந்தையக் காலக்கட்டங்களில் நமதூரில் சமையலுக்காக பயன்படுத்தி வந்த விறகுகள் ( அதிரையிலிருந்து அருகில் உள்ள அலையாத்தி காடுகளுக்கு சென்று விறகு வெட்டி வந்து சமைப்பார்களாம் இவ்வாறு எனது சிறுவயதில் என்னுடைய உம்மம்மா மற்றும் வாப்புச்சி சொல்லக்கேட்டுள்ளேன் ), தேங்காய் மட்டைகள், பாலை, பூக்கமலை, கொரங்குமட்டைகள், கொட்டாங்கட்சிகளில் அடுப்பு எரித்து வந்த நமது சமுதாயம் தற்போதுள்ள நவ நாகரிக உலகில்  GAS STOVE  2, 4, 5 PCS BURNERகளில் ),  ELECTRIC HOT PLATES,  ELECTRIC INDUCTION COOKER மற்றும் COOKER HOODSபோன்ற நவீன சாதனங்களை காலத்திற்கேற்ப மாற்றி பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாதனங்களைப் பயன்படுத்த முக்கிய ஆதாரமாக உள்ளதுGAS மற்றும் ELECTRIC POWER. நமதூரில் 80 % மக்கள்கள் GAS CONNECTION னைப் அரசு நிறுவனமான INDANE முலமாகப் பெற்றுள்ளார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தங்குதடையின்றி BOOKING செய்த ஒரு வாரக் காலக்கெடுவுகளில் கிடைத்து வந்த சிலிண்டர்கள் தற்போது ஒருBOOKING க்கு 25 நாட்கள் எடுத்துக்கொண்டு டெலிவரி செய்கிறார்கள் மறுBOOKING செய்ய மறுபடியும் 25 நாட்கள் கழித்துதான் BOOKING ஐ உறுதி செய்கிறார்கள். ஆக மொத்தத்தில் இரண்டு மாதங்களாகி விடுகிறது நுகர்வோருக்குப் போய்ச் சேர அதுவும் தற்போது உள்ள மழைக் காலத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் விறகுகளையும் பயன்படுத்த முடியாமல் பொது மக்கள்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இக்குறைகளைப்பற்றி அதிரையில் உள்ள சில பொதுமக்களிடம் கருத்துக்கேட்டபொழுது....
பாதுஷா ( தொழில் அதிபர் ) :-
நான் கடந்த 5-11-2001 அன்று BOOKING செய்தேன் ஆனால் இன்று (30-11-2011 )வரையில் எனக்கு டெலிவரிச் செய்யவில்லை. நான் போனில் AGENCY ஐ தொடர்பு கொண்டுக்கேட்டபொழுது இன்னும் LOAD வர வில்லை என்கிறார்கள்.

பெயர் சொல்லவிரும்பாத ஒரு ஏழைப் பெண்மணி :-
நான் இலவசமாகக் கிடைத்த கலைஞர் காஸ் இணைப்பை பெற்றுள்ளேன். முதல் புக்கிங் செய்து பெறப்பட்ட சிலிண்டர் கிடைத்தவுடன் மறு சிலிண்டர் கிடைக்க சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் காத்துக்கொண்டு இருக்க வேண்டியுள்ளது.

அப்துல் காசிம் ( ஆட்டோ டிரைவர் ) :-
‘ நான் ஒரு இணைப்பை வைத்துள்ளேன். இருபது நாட்களுக்குள் காஸ் தீர்ந்து விடுகிறது, மறு சிலிண்டர் கிடைக்கும் வரை விறகு, மட்டைகளை சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார் எனது கர்ப்பிணி மனைவி. அவள் புகையீனால் ரொம்ப கஷ்டப்படுகிறாள்.’ என்கிறார்.

கபீரா ( வாடகை வீட்டில் வசிக்கும் பெண் ) :-
எங்கள் வீட்டில் காஸ் இணைப்பு இல்லை.

பஷீர் அகமது ( மளிகை கடை வைத்துருப்பவர் ) :-
நான் புக்கிங் செய்து இருபது நாட்களாகிவிட்டது. ஒவ்வொரு முறையும்AGENCY க்கு போன் செய்து கேட்க்கும்போதும் இன்னும் ஒன்று , இரண்டு வாரங்களில் கிடைக்கும் என்பதே பதிலாக உள்ளது.

பெயர் சொல்லவிரும்பாத சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர் :-
சிலிண்டர்களை ஆம்னி வேன் , ஆட்டோ ஓட்டும் நபர்களிடம் கூடுதல் விலைக்கு விற்று விடுகிறார்கள் என்றும் நுகர்வோர் பயன்படுத்தும் சிலிண்டர்களை COMMERCIAL  பயன்பாட்டிற்க்காக பயன்படுத்துகிறார்கள் என்று தன் ஆதங்கத்தை வெளிபடுத்துகிறார்.

மேற்க்கூறிய மக்களின் குறைகளைப்பற்றி INDANE ஏஜென்சியை தொடர்புகொண்டு கேட்டபொழுது அவர்களின் பதில், முன்பு வாரம் ஏழு லோடு ஓசூரிலிருந்து வரும் தற்பொழுது இரண்டு லோடுகளே வருகிறது. அதைப் PRIORITY ப் பிரகாரம் டெலிவரி செய்கிறோம்.  என்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் பாதிக்கப்படுவது மக்களாகவே உள்ளார்கள். சம்மந்தபட்ட நிறுவனங்கள் இக்குறைகளைப் போக்கி மக்களின் நலனை கருத்தில் கொள்ளவேண்டும்.

மக்களின் சார்பாக,
M. நிஜாமுதீன்  B.sc.
( 9442038961 )

6 பின்னூட்டங்கள்:

அதிரை நியூஸ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வாழ்த்துக்கள் சகோதரர் நிஜாம் அவர்களே, தங்கள் நற்பணிகள் தொடரட்டும்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

காஸ் தட்டுப்பாடு என்பது நமதூரில் மட்டுமல்லாது தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ளது.... காரணம் முறையற்ற ஆட்சிமுறைதான்.... இலவசமாக லட்சக்கணக்கான காஸ் அடுப்புகளை விநியோகித்த அரசு அதற்க்குண்டான உற்பத்தி திறனை மேம்படுத்தாமல் முட்டாள்தனமாக விநியோகித்துவிட்டு.... கிராம மக்கள் உட்பட அனைத்துமக்களையும் விறகு என்றால் என்னவென்று தெரியாத நிலையை ஏற்படுத்திவிட்டனர்.... திட்டமிடாமல் செயல்பட்டால் இது தான் விளைவு...

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

செயற்கை தட்டுப்பாடு,govt should take action

அதிரை நியூஸ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்கள் பில் தொகையை விட கூடுதலாக ருபாய் 25 வசூல் செய்கிறார்கள்

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நமதூரில் உள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கேஸ் ஏஜன்ஸி அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு செய்து போராட்டம் நடத்த முன்வாருங்கள், சமையல் எறிவாயு பதிவு அலுவலம்(Booking Office) ஊரின் ஒதுங்குப்புறத்தில் இருப்பதினால் யாரும் கேள்விக்கேட்க மாட்டார்கள் என நினைத்துக்கொண்டிருப்பார்கள் போலும்.

உள்ளூர் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்துவரும் நிஜாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

காஸ் தனியார்களிடமும் சென்றிப்பதால் விலையேற்றம், தட்டுப்பாடு என்பது ஆச்சரியம் இல்லை. இது ஆட்சியாளர்களுக்கு மட்டும் பொறுப்பாகாது.

விலையேற்றத்தை கொண்டுவருவதற்கு (Marketing Stategy) முன்னெச்செரிக்கையாக செய்யும் நடவடிக்கை தான் (Sales on Demand) காஸ் தட்டுப்பாடு. இது எல்லாவற்றிக்கும் (நுகர்வோர் பொருள்) பொருந்தும்.

அரசியல்(தீ)வாதிகள் தனியாரிடம் கூட்டு வைக்கும் வரை இதற்க்கு முடிவே இருக்காது.

வீட்டுல அடுப்பு எரியுதோ இல்லையோ....
நம்ம வயிறு பத்திக்கிட்டு எரியுது மா.....

அதைவிட கொடுமை.....பெரும்பாலான வீட்டிலும் இன்றுவரை விறகு அடுப்பும் வைத்திருக்கிறார்கள். அப்படியுருந்தும் இந்த காஸ் ப்ரிட்சனை ஏன்? இன்னும் கொஞ்சம் கூடுதலாக தலைவிரித்தாடுது என்கிறீர்களா.....

பின்ன எனா பின்ன..

முன்பெல்லாம் மரத்திற்கு மழை இருக்காது....
இப்போ மரம் வக்க இடம் இருக்காது......

என்னப் பாக்குறீங்க.... எல்லா இடத்தையும்தான் வளைச்சுப் போட்டு காலி நிலமா விக்க ஆரம்பிச்சுட்டங்களே...... நம்ம நில ப்ரோக்கர்கள்...

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.