அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Wednesday, October 12, 2011

மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்

சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை. மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கி இருக்கும் 10.4 கிலோ எடையுள்ள “எஸ்.ஆர்.எம்.சாட்’ செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.-சி18 ராக்கெட்டுடன் புதன்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது.
“எஸ்.ஆர்.எம்.சாட்’ செயற்கைக்கோள் பற்றி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ராகவ் மூர்த்தி வழிகாட்டுதலின் படி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் 7 துறைகளைச் சேர்ந்த 52 மாணவர்கள், கடந்த 2 வருடங்களாகச் செயற்கைக்கோள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரூ.1.5 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் நச்சுவாயுக்கள்,பிராணவாயு, தண்ணீர் ஆகியவற்றின் வேதியியல் மாற்றங்களைக் கணக்கீடு செய்வதுடன் தொடர்ந்து கண்காணிக்கும். இதுகுறித்தத் தகவல்களை, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பும்.
இந்தத் தகவல்களை ஆய்வுக்கூடத்தில் 24 மணிநேரமும் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார் அவர்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தலைவர் பி.சத்தியநாராயணன்:
முழுக்க முழுக்க மாணவர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், மாணவர்கள் சமுதாயத்துக்கு ஒரு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் உருவாக்கும் என்று நம்புகிறேன். மாணவர்களின் விண்வெளி ஆராய்ச்சித்திறனை மேம்படுத்தும் வகையில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சி பாடத்திட்டம் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும். தற்போது ஏவப்படும் எஸ்.ஆர்.எம்.சாட்-1 செயற்கைக்கோள் 2 ஆண்டுகள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், எஸ்.ஆர்.எம்.சாட் செயற்கைக்கோள்-2 உருவாக்கி விண்ணில் ஏவும் திட்டம் உள்ளது என்றார்.

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ,ஆராய்ச்சித்துறை இயக்குனர் டி.நாராயணராவ், ஆராய்ச்சித்துறைத் தலைவர் எஸ்.வி.கஸ்பர்ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி: தினமணி

1 பின்னூட்டங்கள்:

Ameen Bin Jamal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

எஸ்.ஆர்.எம்.பல்கலை மாணவர்களின் செயற்கை கோள் கண்டுப்பிடிப்பு ஒரு 'மயிற்கல்'.அந்த மாணவர்கள் இன்னும் பல சாதனைகளை செய்ய வாழ்த்துகிறேன்.இது போல சிறு வேதியல் கண்டுப்பிடிப்புகளை நம் ஊர் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் செய்து காட்டினால் நாம் மகிழ்வோம்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.