அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Friday, October 14, 2011

வெற்றி பெறும் வித்தை இதோ!


Er. A.G. மாரிமுத்துராஜ்
Er. A.G. மாரிமுத்துராஜ்

அறியாமை என்னும் எதிர்மறைக்கு ஆட்படுவது:

பெரும்பாலும் ஒன்றில் வெற்றிபெறாமைக்கு என்ன காரணம் என்றால், அதைப்பற்றிய தெளிவான அறிவு இல்லாமையே. தெளிவு இல்லாததால், அதுபற்றிய பயம் நம்மை தொற்றிக்கொண்டு, முயற்சிக்கும் முன்னமே, தோற்று விடுவோமோ என்கின்றஎதிர்மறைக்கு ஆட்பட்டு விடுவோம். எடுத்துக்காட்டாக, ஓர் இளம் பெண் உலக அழகி போட்டியில் கலந்து கொண்டாள். அவள் கொஞ்சம் நிறம் குறைவாக இருந்ததால், தேர்வு செய்யப்படவில்லை, அதனால் அவள் சொன்னால் நான் மட்டும் கொஞ்சம் சிவப்பாக பிறந்திருந்தேன்னென்றால் அன்றைக்கே உலக அழகியாகி பேரும் புகழுடன் இருந்திருப்பேன். என்போதாத காலம் இப்படி கஷ்டப்படுகின்றேன் என்றும் அதுபோல் ஒரு அங்குலம் உயரம் குறைவாக இருந்தால் ஒருவன் போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யாது போனதால், நான் மட்டும் ஓர் அங்குலம் உயரமாக பிறந்து இருந்தேன் என்றால் அன்றைக்கே காவல்துறைஅதிகாரியாகி, பெரியபெரிய பதவியை அடைந்து பேரும் புகழும் பெற்று பெரியவனாகி இருப்பேன். பாலாய்ப் போன இறைவன் என்னை இப்படி குறையாக படைத்து, இந்த இழி நிலைக்குத் தள்ளிவிட்டானே என்றான். இவர்கள் எல்லாம் தன்னிடம் இருப்பதைக் கண்டு கொள்ளாமல், இல்லாததை எண்ணி எண்ணி துன்புறுபவர்கள்.

இவர்களே கொஞ்சம் மாற்றி யோசித்திருந்தால், நான் கொஞ்சம் அழகு குறைவாக இருந்தால் என்ன? அழகைப்பற்றிய அறிவு நிறைய என்னிடம் உள்ளதே அதைவைத்து, உலக அழகியை தேர்ந்தெடுக்கும், உயர்மட்டக்குழுவின் தலைவியாகி, அதே பேரும், பெறலாமே என செயல்பட்டிருக்கலாம் அல்லவா! நான் உயரம் குறைவாக இருந்தால் எனக்கு போலீஸ் வேலை கிடைக்காவிட்டால் என்ன, அந்தப் போலீஸ் காரர்களை வேலை வாங்கும், அறிவும், ஆற்றலும் என்னிடம் உள்ளதே அதை வைத்து ஒரு மாவட்டத்தின் ஆட்சியாளராகி பேரும் புகழும் பெறலாமே என முயற்சி செய்திருக்கலாம் அல்லவா! இதனால் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தனது பாடலிலே அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்,

ஆகையினால் நம் அறிவை மேம்படுத்த மேம்படுத்த நமது வெற்றி எளிதாகும் என்பதில் ஐய்யப்பாட்டிற்கு இடமில்லை. மாறுதலுக்கு உடன்படாதது பெரும்பான்மையோர் வாழ்வில் பின்தங்கிப் போவதற்கு இதுவே முக்கிய காரணமாகும். பாரம்பரியமாக, செய்து வந்த தொழிலை நவீனமயமாக்கலுடன் இணைந்து செயல்படாததால் தோல்வியை தழுவிவிடுகின்றனர்.  எடுத்துக்காட்டுக்காக, எனது பள்ளிப் பருவத் தோழனின் தந்தை பிரபல ஓவியர், அவர் தூரிகையை எடுத்து எழுதினாலும் சரி படம் வரைந்தாலும் சரி அச்சு அசலாகவே கண்ணைக் கவரும் வண்ணம் பிரமாதமாக இருக்கும். அன்றைக்கு விளம்பர போர்டு செய்வதில் நண்பனின் தந்தைதான் மிகவும் பிரபலமானவராக இருந்தார். அவருக்கு வெளிமாநிலங்களில் இருந்துகூட விளம்பர போர்டு செய்ய தேடி வருவார்கள். அவர் 1990ம் ஆண்டிலேயே அதிகபட்சமாக ஒரு விளம்பர போர்டுக்கு ஒரு லட்சம் வரை வாங்கி உள்ளார் என்றால் பாருங்களேன். என் நண்பன் படிப்பு முடிந்ததும், அப்பாவுடன் சேர்ந்து அதே வேலையைச் செய்யத் தொடங்கினான், ஆனால் அவன் தொழிலுக்கு வந்த காலம் நவீன டிஜிட்டல் ஃப்ளக்ஸ் போர்ட்டுகளின் ஆதிக்கம் மிகுதியாக இருந்ததால், அவன் தொழில் நசியத் தொடங்கியது. உடனே அவன் நவீன தொழில் நுட்பத்தைச் சென்னை சென்று கற்று வந்து தனது தொழிலை அந்த நிலைக்குத் தக்க, டிஜிட்டல், ஃப்ளக்ஸ் போர்டுகளை செய்யத் தொடங்கினான். இப்போது அவன் தயாரிக்கும் விளம்பர போர்டுகள், நாடுமுழுவதும் விற்பனையாகிறது. அவனும், அவன் தந்தையைப்போல் இன்று மிகப்பிரபலமான விளம்பரப் போர்டு தயாரிப்பாளராக வளர்ந்துள்ளான். 

இன்று அவன் தூரிகையை (க்ஷழ்ன்ள்ட்) கையிலெடுப்பதில்லை, இருந்த போதும் இன்று மும்பை விமான நிலையத்தின் அருகில் இருக்கும் பிரமாண்டமான விளம்பர போர்டு அவனுடைய நிறுவனம் தயாரித்ததாக உள்ளது. ஆனால் அவனைவிட திறமையான ஓவியர்கள், நாங்கள் தூரிகையைத்தான் பயன்டுத்தி எழுதுவோம் என்றபிடிவாதத்தால், சிலர் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டு, சுவர்விளம்பரங்களை எழுதி வயிற்றுப்பிழைப்பை நடத்தி வருகின்றனர். இவர்களைப் பார்த்து சமூகம் என்ன சொல்கிறது என்றால் இவனெல்லாம் திருந்தவே மாட்டான் பெரிய பருப்பு என்று நினைப்பு என்கிறது.

கால ஓட்டத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு, இயங்குகின்றவர்களே, முன்னேறிக் கொண்டே இருக்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.